கல்வியும் எதிர்பார்ப்பு எனும் ஆடம்பரமும்

ஷாமலா குமார்

இந்த ஆக்கமானது 2024 கார்த்திகை மாதம் 9ஆம் திகதி பெண்களுக்கான
ஆய்வு நிறுவனத்தால் கல்விக்கான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய
கொள்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்
அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.

சிக்கல்
அரசாங்க மாற்றம்த்தினூடாக ஏற்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு இடையிலான
எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டு நான் என்னை கல்வியை நாம்
காணும் நோக்கில் ஒரு புதிய உலகம் நோக்கிய கனவுக்காக அனுமதிப்பதற்கு
விழைந்துள்ளேன். முதலில் நான் எமது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்
நலன் சார்த மற்றும் கல்வித்துறை தொடர்பான பூரண அமைப்பிலான சில
நடைமுறை சிக்கல்கள் குறித்த கேள்விகளை முன்வைக்கின்றேன்: இந்த
நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏன் எமது மாணவர்கள் மத்தியில் நிலவும்
உணவு பாதுகாப்பின்மை தொடர்பான விடயம்
கவனத்தில்கொள்ளப்படவில்லை? பாடசாலைகளில் மீள அறிமுகமான மதிய
உணவு வழங்கும் செயல்திட்டத்திற்கு இத்தனை காலம் எடுக்கப்பட்டது ஏன்?
மாணவர்களுக்கு இடையில் அதிகரித்துள்ள சுயதீங்கினை தடுக்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதது ஏன்?

நாம் குப்பி அமைப்பை தோற்றுவிக்கும் போது பெருந்தொற்று ஏற்பட்ட
நிலையில் முகந்தெரியாத மாணவர்களுக்கு அவர்களின் சிக்கல்களை
அறியாத நிலையில் நிகழ்நிலையில் கற்பித்துக்கொண்டிருந்தோம். நிகழ்நிலை
கற்கையில் இணையாத மாணவர்களிடம் நாம் அதுபற்றி வினவும் போது
பதிலகள் அளிக்கப்படாவிடினும் நாம் தொடர்ந்தும் கற்பித்தலில் ஈடுபட்டோம்.
எமது கற்பித்தல் கூட முழுமனதுடன் அல்லாமல், எம்மை சூழ இருந்த சாவு
மற்றும் அழிவுக்கான சூழ்நிலையை புறக்கணித்து வெறுமனே
‘நிகழ்த்துகைகளில்’ ஈடுபட்டிருந்தோம்.

பெருந்தொற்றின் பின்னர் கூட நிலைமை மாறியதாக இல்லை, வெறும்
வயிற்றோடு கற்க வரும் மாணவர்கள், பொருளாதார நெருக்கடியை
தோள்களில் சுமந்திருக்கும் நிலையில் அவற்றை விடுத்தே நாங்கள் எமது
கற்பித்தலை தொடர்கின்றோம். பலஸ்தீனர்களின் இறப்பை குறித்து நாம்
பேசுவதில்லை; பலஸ்தீன பல்கலைக்கழகங்கள் வெறும் இடிந்த
சிதிலங்களாக எஞ்சியிருப்பதை நாம் பேசுவதில்லை; எமது சமூகங்களுக்கு
இடையில் நடத்தப்படும் வன்முறைகள் குறித்தும் கூட நாம் பேசுவதில்லை.
எமது கல்வி குறுகியதாகவும் யதார்த்தத்திலிருந்து விலகியதாகவுமே
உள்ளது.

கல்வித்துறை நெருக்கடிகளை அரசாங்கங்கள் கண்டுகொள்ளாத சூழ்நிலையில்
முறையான கல்வியை வழங்கும் பாரிய பொறுப்பு குடும்பங்களின் கைகளில்
மொத்தமாக வீழ்கின்றது. கல்விக்கான அணுகலில் பெற்றோர் ‘சிறந்த’
பாடசாலைகளுக்காக போட்டி போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலை
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டும்
அதேவேளை சில பாடசாலைகள் அடிப்படை வளாங்களுக்காக போராடிக்
கொண்டிருக்கும் நிலையில் சில பாடசாலைகள் சமூகத்தின் உயர்
அடுக்குகளை அடைவதற்கான கடவுச்சீட்டுகளாக இயங்கிக்
கொண்டிருக்கின்றன. பெற்றோர் அதிகரித்து வரும் கல்விச்செலவுகளை
சமாளிக்க முடியாமல் திணரும் வேளையில் நலன்புரி அமைப்புகளும்
அவர்களை கைவிடும் சூழலில் புலன் வலுவீனங்களை உடைய
மாணவர்களின் பெற்றோரும் பெரும் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

ஒரு கனவு

கல்வித்துறையில் இருந்து நாம் மேலும் எதிர்பார்க்கலாமா? எமது
மாற்றங்கள் நன்மையானதாக இருக்க வேண்டும், ஆனால் அதன் அர்த்தம்
என்ன? எமது கல்வி எமது அபிலாஷைகளின் மற்றும் சமூக
கட்டமைப்புகளின் மாற்றங்களை ஏற்படுத்தும் ஊடகமாக இருக்க வேண்டும்,
அதேநேரத்தில், எமது தேவைகளை பூர்த்தி செய்யும் முகவராகவும் இருக்க வேண்டும். எனது கனவானது எமது கல்வி நிறுவனங்கள் சமூக நீதிக்கான
கருவிகள், நிறுவனங்கள் மற்றும் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும்
என்பதோடு எமது கல்வி ஜனநாயகம் மற்றும் அதன் கொள்கைகளை மேலும்
வலுச்சேர்க்கும் நிறுவனங்கள், சமூகங்கள், மற்றும் நடைமுறைகளை
ஏற்படுத்தும் விடயமாகவும் அதேநேரத்தில், எமது பல்கலைக்கழகங்கள்
தற்போது காணப்படும் அதிகார அமைப்புகளை தக்கவைக்கவும்
அதேநேரத்தில் அவற்றை மாற்றவும் வல்லமை உடைய அமைப்புகள்
என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியுமானதாக இருப்பதாகும். இது அரசியல்
புரிதலாக இருப்பதோடு, அப்புரிதலானது மாற்றுக்கருத்துகள், சமூக
அதிகாரப்படிநிலைகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக பிளவுக்கோடுகளை
அறிந்திருப்பதில் தங்கியிருக்கின்றது. இந்த அரசியல் விடுதலையை அவாவும்
அரசியலாக இருப்பதோடு சமூக உறவுகளை பலப்படுத்தி ஒன்றுபடுத்தி அதன்
மூலம் அணிதிரள்வை ஏற்படுத்தும் அரசியலாகும்.

மாற்றத்தை ஏற்படுத்த விளையும் எந்தவொரு முயற்சிக்கும் கல்விக்கான
அணுகல் கட்டாயமானதாக இருப்பதோடு எந்த வளங்களுக்கான அணுகல்
எந்த காரணத்துக்காக யாரிடம் இருக்கின்றது, இதிலிருந்து தவிர்க்கப்பட்டோர்
யார், ஏன் தவிர்க்கப்பட்டிருக்கின்றனர் போன்ற கேள்விகளும் கட்டாயம்
கேட்கப்பட வேண்டியவை. அணுகல் என்பது சமூக வகுப்பு, பால் போன்ற
அம்சங்களால் ஆளப்பட்டு வழங்கப்படும் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கு
மறுக்கப்படும் சூழலிலும் எம்மிடம் காணப்படும் சமூக அதிகார
கட்டமைப்புகளை அவை பலப்படுத்தும் சூழலிலும் ஏற்கனவே
விளிம்புநிலையில் வாழும் மக்கள் மேலும் வலிதற்றவர்களாக மாறுவதோடு
மாற்றத்துக்கான கல்வியும் சாத்தியமற்றதாக இருக்கின்றது.
இதனால் இந்தக்கனவு இலவசக்கல்வி மீதான ஆழ்ந்த ஈடுபாட்டுடனேயே
ஆரம்பிக்கின்றது. முன்னைய வருடங்களில் அரசாங்கத்தின்
பல்கலைக்கழகங்களுக்கான நிதியீடு குறைக்கப்பட்டமையால் அவை, அரச
நிதியீட்டத்துக்கு பகரமாக பணமீட்டும் வர்த்தக நிறுவனங்களாக மாறி
விட்டன. இதன் விளைவாக, கற்றல் மற்றும் ஆய்வுப் பணிகளை விடுத்து
ஒய்யாரமான புதிய கற்கைநெறிகளையும் இன்னபிற சந்தைநேய
உற்பத்திகளுக்காகவும் நேரத்தையும் உழைப்பையும் செல‌வழிக்கும் நிலை உருவாகியுள்ளது. மிக கவலைக்குரிய விடயம் யாதெனில், கட்டணம்
வசூழிக்கப்பட்டு வழங்கப்படும் கற்கைநெறிகள் கல்வி அமைப்பில் தற்போது
பரவலாக்கப்பட்டிருப்பதும் ஏலவே வறுமைக்குட்பட்டிருக்கும் இலங்கை
மக்களில் பலருக்கு அவ்வாறான கற்கைநெறிகள் மேலும் அணுக முடியாத
சூழ்நிலை உருவாகுவதும் ஆகும்.

சுதந்திரமான பல்கலைக்கழகம் மிகவும் வெளிப்படையானதாகவும், எல்லா
கருத்துகளையும் வரவேற்கும், எமது சமூகத்தில் காணப்படும் செயலற்ற
தன்மைகளையும் அவற்றை பலப்படுத்தும் அமைப்பை விமர்சிப்பதையும்
வரவேற்கும் தளங்களாக இருக்க வேண்டும். சமூக அக்கறை குறித்த
அசௌகரியமான கேள்விகளை கேட்பதற்கு கல்வியியலாளார்களுக்கு
தைரியமாக சிந்திப்பதற்கும் பேசுவதற்குமான தளங்கள் வேண்டும்.
உயர்நிலை கட்டுப்பாடுகளுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்,
ஆசிரியர்கள் அளவிடக்கூடிய கல்வி முடிவுகளை அடைந்துள்ளதாக நிரூபிக்க
வேண்டி இருக்கின்றனர், மேலும் ஆராய்ச்சிக்காக வெளியீட்டு
மதிப்பெண்களை பெற வேண்டும். அதே நேரத்தில், மாணவர்கள் கடுமையான
வேலைச்சுமைகள் மற்றும் நெகிழ்வற்ற நேர அட்டவணைகளில் தங்கள்
நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலைமை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள்
இவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கு வெகுவாக வித்தியாசமானவையாகத்
தோன்றுகின்றன.

கல்வி வன்முறையிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டிய ஒன்று, அவ்வன்முறை
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் அடாவடித்தனம்
ஆகியவற்றிலிருந்து புறக்கணிக்கணிப்புக்கு உள்ளாக்கப்படும்
விடயங்களிலிருந்து வெளித்தள்ளும் வன்முறை வரை உள்ளடக்கப்படும்.
உதாரணமாக, ஒரு கிராமத்தின் வாழ்வியலுக்கு பௌத்த விகாரையின்
இருப்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடும் ஒரு ஆசிரியர்,
பன்மைத்துவத்தை தவிர்ப்பதும், இதன் மூலம் பௌத்த விகாரைகள் இல்லாத
கிராமங்கள் வாழ்வியலிலிருந்து தகுதி நீக்கம் அல்லது குறைப்பு செய்யப்படும்
நிலையும் ஏற்படுகின்றது. கல்வி இலட்சியரீதியாகவும் அர்த்தமுள்ளதாகவும்
இருக்க வேண்டி இருப்பதோடு, அது அனைத்து அமைப்பு மற்றும் வாழ்வுமுறைகளை சேர்ந்த மாணவர்களுக்கும் ‘நல்வாழ்க்கைக்கான’
சாத்தியங்களை உருவாக்கும் தளமாக இருக்க வேண்டும்.

இறுதியாக, தற்காலத்தில் வழங்கப்படும் தொழில்நுட்ப அடிப்படையிலான,
அத்தகைய செறிவு கொண்ட பாடத்திட்டங்கள் வழங்காத சமூக
ஏற்றத்தாழ்வுகள் பற்றிய மொழியை சரியாக விளங்கக்கூடிய வகையிலான
மானுட மற்றும் சமூகவியல் கற்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டி
இருப்பதோடு அவற்றின் மூலம் மாணவ/ ஆசிரியர் தொடர்பும்
விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறான பாடநெறிகளை வழங்கும்
நிறுவனங்கள் வெறுமனே அரசாங்கத்தின் இயலாமையால் விஞ்ஞான
கற்கைநெறிகளை பூரணப்படுத்த முடியாத மாணவர்களின் உறைவிடமாக
அன்றி பயன்மிக்கனவாக இருத்தல் வேண்டும். சமூகவியல் கற்கைநெறிகள்
தளபாடங்களை பொருத்தவரையில் பெருமளவிலான தேவையற்று
இருக்கின்றனவே ஒழிய மாணவர்களின் கருத்தாக்கங்களை சரிவர அணுகி
அவர்களின் மற்றும் அவர்கள் சூழ் உள்ள சமூகங்களின் யதார்த்தங்களை
சரிவர அணுக உதவக்கூடிய சரியான ஆசிரிய படையணி இதற்கு
அவசியமாகும்.

நாம் எங்கு ஆரம்பிப்பது?

எமது கல்வி அமைப்பில் நாம் பிழையான விடயங்களை பார்க்கும்
இயல்புநிலைக்கு ஆட்பட்டிருப்பினும், மகிழ்ச்சி அடையக்கூடிய சில நல்ல
விடயங்களும் இருக்கின்றன. அண்மையில் தேசிய கல்விக் கொள்கை
வரைவுக்கு (,2023) துலங்கலாக உருவாக்கப்பட்ட துறைசார் மேற்பார்வைக்
குழு, பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தது. கல்விக்கொள்கை
கட்டாயமாக பின்வரும் விடயங்களை ஏற்பிசைக்க வேண்டும்; இலவசக்கல்வி
அடிப்படை கொள்கையாகும்; கல்வி என்பது அடிப்படை மனித் உரிமையாகும்;
சமத்துவம் மற்றும் நீதி ஆகியன அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி
அமைப்பின் வழமைகள் மற்றும்; கல்வி என்பது மாணவர்கள் தமக்கான
அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் நிலையிலேயே முழுமையாக
உணரப்படுகின்றது. இது மிக முக்கியமான கருத்தாகும்.

நாட்டில் இருந்து வரும் வலுவான கல்விக் கட்டமைப்பின் சுவடுகளை நாம்
கட்டாயமாக அங்கீகரிக்க வேண்டும். நன்கு உருவாகியுள்ள பள்ளிகள்,
பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் நிதியுதவி அமைப்புகள்
ஆகியவை ஒரு திடமான அமைப்பை வழங்குகின்றன. கல்விக்கான
பொதுமக்கள் நிதியுதவி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு
எல்லையை குறித்த‌ சுதந்திரத்தை வழங்கி, ஒரு மேம்பட்ட கல்வி
அமைப்பை உருவாக்க, கடினமான கேள்விகளை கேட்க, மேலும்
நன்மைகளை எதிர்பார்க்க வாய்ப்பு வழங்குகிறது.

‘அரகலய’ போராட்டம் மக்களுடன் ஆலோசிக்க வேண்டிய தேவை குறித்த
கோரிக்கைகளை எழுப்பியது. 2012 ஆம் ஆண்டு FUTA (பல்கலைக்கழக
ஆசிரியர்கள் சங்கம்) நடத்திய “மில்லியன் கையொப்பம்” இயக்கத்தின் போது,
கல்வியை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து மக்கள் வெளிப்படுத்திய
ஆழமான மற்றும் பல பரிமாணங்களை கொண்ட பதில்கள், கல்வி
மறுசீரமைப்புகள் மக்களின் சிந்தனைகளைக் கேட்பதிலிருந்தே துவங்க
வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மாற்றத்தை உருவாக்கக்கூடிய
கல்வி அமைப்பை உருவாக்க, அது பரந்த ஒத்துழைப்பை உருவாக்கக்கூடிய
ஒரு ஆலோசனைச் செயல்முறையிலிருந்தே துவங்க வேண்டும் என
நம்புகிறேன். இத்தகைய முயற்சி கல்வி நிறுவனங்களின் மீது பொதுமக்கள்
வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கலாம், மேலும் அரசு மக்களின்
ஆசைகளை தடுக்காமல், அவர்களுக்கு சேவை செய்வதாக உணர்ச்சி
ஏற்படுத்தலாம்.

நாம் மறுசீரமைப்புக்காக முயலும்போது, கடந்த பல தசாப்தங்களில்
முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புகளின் அடிப்படையாக இருந்த
கணிப்புக்களையும் கவனத்தில் எடுக்க‌ வேண்டும். எடுத்துக்காட்டாக,
தொழில்நுட்பமும் வேலைவாய்ப்பும் என்பவற்றை மட்டும் மையமாகக்
கொண்டு முன்னெடுக்கப்படும் நடப்பு அம்சங்கள் நமக்கு நன்மை தருகிறதா?
தரச் சான்றிதழ்கள் மற்றும் ஒருமைப்பாடான நிர்ணயங்கள், கல்வியில்
மாணவர்களும் ஆசிரியர்களும் வகிக்க வேண்டிய பங்களிப்புகளை
மேம்படுத்துகிறதா அல்லது குறைக்கிறதா? முடிவுகளை அளவிடுவது எப்போதும் சாத்தியமா? எடுத்துக்காட்டாக, புதுமையான யோசனைகளை
ஆய்வின் பேரின்பத்தையும், அழகின் மகத்துவத்தையும், மனித நேய
ஒற்றுமையின் உணர்வையும் எவ்வாறு அளவிட முடியும்? எளிமையாகக்
கூறின், “அறிவு ஊழியர்கள்” என்று ஆசிரியர்களை வகைப்படுத்தும் நிறுவன
மேலாண்மை கோட்பாடுகள், நிர்வாக இலக்குகளை பூர்த்தி செய்வதற்காக
மட்டுமே கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்காக அவர்கள் பங்கு
வகிக்கும்படி செய்வதன் மூலம், நாம் விழைய நாடும் பல்கலைக்கழகங்களை
உருவாக்க முடிகிறதா?

நான் நம்புவது என்னவெனில், இந்த மறுசீரமைப்பு முயற்சிகள்
வழித்தவறியவையாகவும் தூரநோக்கு அற்றவையாகவும் உள்ளன. கல்வியில்
நாம் என்ன மாற்றங்களை விரும்புகிறோம் என்பது குறித்து நிதானமாக
சிந்தித்து நேர்மையுடன் நின்று முக்கியமான கேள்விகளை கேட்டு, மீண்டும்
ஆரம்பிப்பது அவசியம் என்று நான் எளிமையாக பரிந்துரை செய்கிறேன்.
கடந்த அரசாங்கங்கள் முன்மொழிந்த மறுசீரமைப்புகளுடன் ஒத்த
வடிவங்களில் பிற நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து நாம்
கற்றுக்கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக, இப்போது முன்னெடுக்கப்படும்
கல்வி மறுசீரமைப்புகள் வெளிப்புற நிதியளிப்பாளர்களால் இயக்கப்படுகின்றன;
உண்மையான மறுசீரமைப்புகள் நடைபெற, அரசாங்கம் பிறர்மீது
நம்பிக்கையிலாமல், தனது சொந்த நிதியை கல்விக்கு மாற்றுவது
அவசியமாகும்.

சிக்கலான காலங்களில் பாரிய விடயங்களை நோக்கி எட்டுவைத்தல்

நீண்ட காலமாக, இந்த நாட்டின் கல்வியைப் பற்றிய எங்கள் உரையாடலும்
உணர்வும் பெரும்பாலும் உதவியற்ற நிலையை மட்டுமே பிரதிபலித்து
வந்தது. நம்மை நம்பிக்கையற்றவர்களாக மாற்றுவதில் சில சக்திவாய்ந்த
தரப்புகள் திட்டமிட்ட பங்கை வகித்துள்ளன — நமக்கு அதிகமானதை
விரும்பும் உரிமையே இல்லையெனவும், நம்பிக்கையை ஒரு சிரமமிக்க
கனவாகவுமே நாம் எண்ண வேண்டும் என்பதையும் நம்முள் ஊட்டி
வந்துள்ளனர். இருப்பினும், இதற்கு மாற்று வழிகள் உள்ளன. இச்சிக்கலான காலங்களில், நம் நெருக்கடிகளை நாம் சந்திக்க வேண்டிய சமூகத்தின்
ஆழமான குறைபாடுகளைக் காணும் வாய்ப்பாகவும், நாம் ஏற்கனவே
கொண்டிருக்கும் பலங்களைக் கொண்டு புதிய தளங்களை அமைக்கும்
சந்தர்ப்பமாகவும் பார்க்கலாம். நாம் நிதானமாக சிந்தித்து, நிலவும்
பிரச்சனைகளை மீண்டும் பரிசீலித்து, நம் கல்வி அமைப்பில் சிறப்பை நோக்கி
முன்கொண்டு செல்ல‌ வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் அதற்கு நாம்
கனவு காண வேண்டும். எனவே, நாம் ஒரு தெளிவான பார்வையை
உருவாக்கியும், அதை நோக்கி செல்லக்கூடிய தைரியமான கல்விக்
கொள்கையை வடிவமைக்கவும் வேண்டுமென நான் முன்மொழைகிறேன்.