உலகத்தேவைகளுக்கு ஏற்ப கல்வியை மறுசீரமைத்தல்

ஹசினி லேகம்வசம்

அக்டோபர் மாத தொடக்கத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட பிற
அமைச்சுகளுடன் நடத்திய முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் ஜனாதிபதி
அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் கல்வி முறையை உலகளாவிய
தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார். இது ஒரு நீண்டகாலக் கொள்கை உறுதியின்
மீளுறுதிப்படுத்தலாகும். ஆனால், இத்தகைய முயற்சிகள் எவ்வாறு மீண்டும்
மீண்டும் தோல்வியடைந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளாத
நிலையையும் இது பிரதிபலிக்கிறது.’உலகளாவிய தேவை’ என்பதன் பொருள்,
உலகின் ஒவ்வொரு சமுதாயத்தையும் உலக வணிக மூலதன சந்தையில்
இணைக்கும் நோக்கமாகும்.இந்த சந்தை, ஐரோப்பியர்களின் காலனித்துவ‌
சாகசங்களின் பின் உருவான கடுமையான சமனற்ற விதிகளில் இயங்குகிறது.
இந்த அமைப்பில், இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகள் உலக
மூலதனத்தின் எல்லைகளாகவே கருதப்படுகின்றன. இவை, மூலப்பொருட்கள்,
மலிவான தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை மற்றும் வேளாண்
கழிவுகளை (உதாரணமாக, உயர் பாதுகாப்பு விதிகளை கொண்ட ஐரோப்பிய
ஒன்றிய‌ சந்தையில் ஏற்கப்படாத குறைந்த தரமான நுகர்வுப்பொருட்கள்)
வேறிடம் வீசுவதற்கான இடமாக இருப்பதற்கே எதிர்பார்க்கப்படுகின்றன.இந்த
கட்டுரையில், இலங்கையின் உயர்கல்வி சீரமைப்பின் சமீபத்திய வரலாற்றை
எடுத்துக் காட்டுவதே என் நோக்கம். இதன் மூலம், உலக மூலதன
சந்தைக்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எவ்வாறு
இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதையும், அந்தத் திட்டம் ஏன்
வெற்றியளிக்காமல் இருக்கக்கூடும் என்பதையும் சுருக்கமாக விவாதிக்க
முயலுகிறேன்.

அண்மைய உயர்கல்வித்துறை மீதான சீர்திருத்தங்கள்

இலங்கையில் உயர்கல்வி தனியார் நிதியிலிருந்து (உலக வங்கி மற்றும்
ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட) நன்கொடையாளர் நிதியமைப்புக்குச்
செல்லும் மாற்றம் 1990களின் முடிவில், குறிப்பாக 1997 ஆம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுடன் துவங்கியது.இந்த
சீர்திருத்தங்களை, 1990களின் இறுதியில் நிலவிய அரசியல் சூழ்நிலையில்
வைத்து புரிந்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில், நாடு இனமோதலுடன்
தொடர்புடைய ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கையை அடைய முயற்சித்து
வந்தது, அதன் ஒரு பகுதியாக யுத்தநிறுத்தம் உடன்படிக்கைக்கு வ‌ந்தது.
இதன் விளைவாக, உலக வங்கி போன்ற நிறுவனங்களிலிருந்து அபிவிருத்தி
சார்ந்த உதவிகள் நாட்டுக்குள் வரத் தொடங்கின.ஆனால், இவ்வுதவிகள் பல
வகையான நிபந்தனைகளுடன் வந்தன. அந்த காலகட்டத்தில் நடந்த
கட்டமைப்பு சீரீடு முயற்சிகளும் இவ்விதமான உதவிகளில் பெரிதும்
சார்ந்திருந்தன. எனவே, அந்த நிபந்தனைகளை பின்பற்றுவதே
அவசியமாகியது.பெரிதும் விரிந்த உலகளாவிய சூழ்நிலையில்,
1970களிலிருந்து பல வளர்ந்துவரும் நாடுகளில் அமல்படுத்தப்பட்ட
‘கட்டமைப்பு சீரீட்டு’ கொள்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை
செய்திருந்தன.இதன் மூலம் பெரிய, சிறிய, மைய, புற நாட்டு
பொருளாதாரங்கள் அனைத்தும் உலக மூலதனக் கட்டமைப்புக்குள் கொண்டு
வரப்பட்டன.1990களுக்குள், பொருளாதாரங்களை மூலதனவாத வடிவில்
மேலும் மாற்றும் சூழ்நிலை தயார் நிலையில் இருந்தது, இதன் ஒரு சிறிய
பகுதியாகவே இலங்கை இருந்தது.

இந்த கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், நாட்டின் மனித
மூலதனத்தை மேம்படுத்தி, “வேலைவாய்ப்பு பெறக்கூடிய, இயலுமை உள்ள
குடிமக்களை” உருவாக்குவதேயாக இருந்தது. இந்த நோக்கத்தில் தான்,
வேலைவாய்ப்பு பெறும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதனால், அதிக
வேலைவாய்ப்பு விகிதத்தை உருவாக்கும் என்று கருதப்படும் STஏம் (இயற்கை
விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பாடப்பிரிவுகள்,
வெளிப்படையாக ஊக்குவிக்கப்படுகின்றன. மாற்றத்தகு திறன்களும்,
கணிசமானளவு திறமையின் அளவீட்டையும் முன்னிலைப்படுத்தும் இந்த
பாடப்பிரிவுகள், ஒருவரின் திறனை ஒரு பொதுவான அளவீட்டு முறையில் அளவிடுவதற்கு ஏற்றதாக உள்ளன – இது உலகளாவிய மூலதனவாதத்தின்
தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய கருவியாகும். உலகளாவிய
வேலைவாய்ப்பு சந்தைகளில் ஒப்பீட்டுத் திறன் முக்கியத்துவம் பெறும்
நிலையில், இந்த மாற்று மிக முக்கியமானதாகிறது. திறனடிப்படையிலான,
அளவிடக்கூடிய கல்வி முறைமையினை நோக்கி நகரும் இந்த
மாற்றத்துடன், உலக சந்தை குறிகாட்டிகளுக்கு (முக்கியமாக கல்வி
மறுசீரமைப்புகளின் வழியாக) வலிமையான பதிலை அளிக்கக் கூடிய
கொள்கை உறுதிப்பாடும் இணைகிறது. இந்த அமைப்பில், “தொழில்” என்பது
நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கும் செழிப்புக்கும் அடிப்படைச்
சரக்காக மாறுகிறது. மேலும், அந்த தொழில் (அதாவது மனித மூலதனம்)
மேம்படுத்தப்படுவதன் மூலமே தேசிய அபிலாஷைகள் நிறைவேற முடியும்
எனவும் வலியுறுத்தப்படுகிறது.

2009 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை வரைபின் (national policy framework)
மூலம் இந்தக் கொள்கை உறுதிப்பாடுகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன. இந்த
வரைவில், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் (HEI) தேவைப்படுகின்றன
என்பது முதன்முறையாக வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது.
இவ்வாண்டே உலக வங்கியின் அரச‌ பல்கலைக்கழகங்களுடன் இணைந்த‌
முதல் திட்டமான (IRQUE) திட்டமும் தொடக்கப்பட்டது. இது, மூலதன
சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிலாளரை
உருவாக்கும் நோக்குடன் மேற்கொண்ட முதல் முயற்சி ஆகும்.
2012 ஆம் ஆண்டில், இந்த நடவடிக்கைகள் இலங்கைத் தகுதிக் கட்ட‌மைப்பு
(SLQF) என்ற புதிய அமைப்பின் மூலம் நிறுவப்பட்டன. இதன் நோக்கம்,
இலங்கையில் வழங்கப்படும் அனைத்து உயர்கல்வித் தகுதிகளையும் ஒரே
முறைமைக்குள் கொண்டு வந்து ஒழுங்குபடுத்துவத்துவதாகும். விரிவாக‌
பார்க்கும்போது, SLQFன் குறிக்கோள், கல்வியின் வடிவமைப்பை
வேலைவாய்ப்பு சந்தை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மாற்றுவதாகும்.
அதாவது, ஒரு குறிப்பிட்ட கல்வி அமைப்பின் கீழ் கற்றுத் தரப்படும்
திறன்கள், வேலைவாய்ப்பு சந்தையில் தேவைப்படும் பணிகளின்
திறன்களுடன் நேரடியாக பொருந்தும்படி அமைக்கப்பட வேண்டும் என்பதே
இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன்மூலம், தேசிய தொழிலாளர்களை உலக மூலதனத்தின் ஆதிக்க சக்திகள் நெறிப்படுத்தும் சந்தைக் கேள்விக்கு
பதிலளிக்கும்படி உருவாக்கி வருவதை தெளிவாகக் காண முடிகிறது.

இதற்குப் பிந்தைய மூன்று முக்கியக் கொள்கைப் பத்திரங்கள்
பின்வருவனவாகும்: 2020 உயர்கல்வி தொடர்பான தேசிய கணக்காய்வகத்தின்
(National Audit Office) அறிக்கை, 2020–2030 தேசியக் கல்விக் கொள்கை வரைவு
(NEPF) மற்றும் அதன் தொடர்ச்சியான, மேலும் விரிவுபடுத்தப்பட்ட வடிவமான
2023–2033 NEPF (NEPF 2023–2033). இவையெல்லாம், இலங்கையின் உயர்கல்வி
துறையில் இந்த மாற்றங்களை மேலும் வேரூன்ற வைப்பதற்காக
உருவாக்கப்பட்டவையாகும்.

“அமெரிக்கா, தானியங்களும் (மற்றும் சோயா எண்ணெயும்) உள்ளிட்ட
உற்பத்தி உதிர்ச்சிகளை தன்னுடைய வெளிநாட்டு கொள்கைப்
பயன்பாடுகளுக்காக, வெளிநாட்டு உதவி மற்றும் ஏற்றுமதி ஊக்கத்திற்காக
(தள்ளுபடி விலையில்) பயன்படுத்தியது. இதன் விளைவாக, முன்பு
தன்னிறைவு கொண்டிருந்த நாடுகள் கூட, (மலிவான) அமெரிக்க
கோதுமையில் சார்ந்துவிடத் தூண்டப்பட்டன. இதே நேரத்தில், அந்தப்
பகுதிகள், உலக சந்தைகளுக்காக தொழில்துறை மற்றும் (முக்கியமாக
களஞ்சியமல்லாத) உணவுப் பொருட்களின் உற்பத்தியில் மேலும்
நிபுணத்துவம் அடையத் தள்ளப்பட்டன. இது, ஆசியா மற்றும்
ஆப்பிரிக்காவின் புதிய சுதந்திர நாடுகளின் குறிக்கோள்கள் கொண்ட வளர்ச்சி
திட்டங்களின் வழியும் நேர்ந்தது, ஏனெனில் அவர்களின் இறக்குமதி பதிலீட்டு
தொழில்மயமாக்கம் ஊடான (import-substituting industrialisation) முக்கிய
வெளிநாட்டு வருமான ஆதாரம், விவசாய மற்றும் கனிம அடிப்படையிலான
ஏற்றுமதிகள் தான். இதனால், பல ஏழை, முதன்மையாக விவசாயத்தை
சார்ந்த நாடுகளுக்கு, **’கத்தரிக்கோல் விளைவு (scissors effect)’ உருவானது. ஒரு
பக்கம், அதிகரிக்கும் உணவுப் பொருள் இறக்குமதி சார்பு காணப்பட்ட
நிலையில், மற்றொரு பக்கம், அவர்களது பாரம்பரிய ஏற்றுமதி பயிர்களுக்கு
எதிரான, நிலையான‌ வீழ்ச்சியடைந்த வர்த்தக விதிகள்
உருவாகத்தொடங்கின‌”

உலகளாவிய பொருளாதார அமைப்பைக் கண்காணிக்கும்போது,
இவ்வகையான முறைமைகள் தொடராமல் இருக்கும் என்பதற்கான
காரணமே இல்லை. நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம்
என்னவெனில், உலக வடக்கு நாடுகளின் நகரங்கள் தற்பொழுது பருவநிலை
மாற்றம் குறித்து அதிக அக்கறையுடன் இருக்கின்றன, மேலும் கார்பன்
பாதிப்பைக் குறைக்கும் பல நடவடிக்கைகளைச் தீவிரமாக பரிசீலித்து
வருகின்றன. இதில் முதன்மையானது, நுகர்வை கட்டுப்படுத்தும்
முயற்சிகளும், ‘வளர்ச்சியை குறைக்கும் (degrowth)’ மாதிரிகளை தீவிரமாக
எடுத்துரைக்கும் முயற்சிகளும் ஆகும். இத்தகைய மாற்றங்கள், உலக மைய
நகரங்களில் இருந்து கிளம்பும் நுகர்வுவாதத் தேவைமுறைக்கான கேள்வியை
வைத்து வளர்ந்து வரும் எங்கள் பொருளாதாரங்களுக்கு மிகக் கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தும். உயர் நுகர்வை சார்ந்த துறைகள், குறிப்பாக
பரவலாக வளர்ந்து வரும் சுற்றுலாதுறை, இதனால் மிகவும்
பாதிக்கப்படைய‌க்கூடும். பல சமூகவியல் மற்றும் மேலாண்மை பீடங்களில்
சுற்றுலா சார்ந்த பாடப்பிரிவுகள் விரிவடைந்ததின் பின்னணியில் இது
தொடர்பான அக்கறை கொண்டு பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இலங்கையின் சுற்றுலா துறையை முழுமையாகப் பயன்படுத்தும்
நோக்கத்துடன் இந்த பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டதால், இத்தகைய
உலகளாவிய மாற்றங்களை அவசரமாக விமர்சனப்பூர்வமாக பரிசீலிக்க
வேண்டும்.

மேலும், வளர்ச்சியடைந்த‌ நாடுகளில் நிலவுகின்ற மற்றொரு பிரச்சனை,
அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோர் வருகையாகும். அதன் விளைவாக
வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்பு பற்றாக்குறை தீவிரமடையும் நிலையானது
இந்தச் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்குகின்றன. இவை, பல சமூக-அரசியல்
பாதிப்புகளை உண்டாக்குகின்றன. குறிப்பாக, அன்றாட வாழ்வில்
இனவெறியின் வேரூன்றல், ஐரோப்பாவில் பல நாடுகளில் வலதுசாரி
அரசியல் வெற்றிகள் என்பவற்றை குறிப்பிடலாம். இத்தகைய மாற்றங்கள்,
எங்கள் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் எமது கல்வி
முறைமையும் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றது.

முடிவாக…

எளிமையாகச் சொல்வதென்றால் – நாம் என்றும் உலக சந்தையின்
சைக்கினைகளை மனப்பூர்வமாக பின்பற்ற முடியாது, பின்பற்றவும் கூடாது.
ஏனெனில், அந்த சந்தை முறைமை, உலக மைய நாகரிகங்களின்
நலன்களுக்கே முதன்மை அளிக்க வடிவமைக்கப்பட்டதாகும்– அது
மற்றவர்களின் நலன்களைத் தியாகம் செய்தும் கூட அந்நிலையை
எட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். எனவே, எங்களுக்கு அவசரமாக
தேவைப்படுவது யாதெனில், உலகளாவிய பொருளாதார அமைப்பில் எங்கள்
உண்மையான நிலையை மதிப்பீடு செய்யும் ஒரு விமர்சனக் கணிப்பாகும்.
அதன் அடிப்படையில் எங்கள் பொருளாதார மற்றும் அரசியல்
முன்னுரிமைகளை மீண்டும் பரிசீலிக்கும் ஒரு தீவிர மீளாய்வு
கட்டாயமானதாகும். மேலும், உள்நாட்டிலேயே வளர்த்தெடுக்கக்கூடிய
துறைகள் எவை என்பதைக் குறித்து — ஏற்றுமதி நோக்கத்தில் அல்லாது,
தக்கவைக்க வேண்டிய‌தொரு தேசிய நலன் நோக்கில்— சிந்திக்க வேண்டிய
கட்டாயம் எமக்குள்ளது. இது, சர்வதேச பொருளாதார உறவுகளை விலக்க
வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நாம் எப்போதும் உலகளாவிய பெரிய மூலதனத்தின் வடிகாலாக‌ மட்டுமே
இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், மேலும், அந்தக் காரணத்தால்
எங்கள் கல்வி திட்டங்களையும் அதற்கேற்ப வடிவமைத்து கொண்டே
போனால்,”பணக்கார நாடுகளுக்கு சளி வந்தால் நமக்கு நியூமோனியா வரும்”
எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.