எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

கிட்ட தட்ட இரண்டு வருடம் கடந்த நிலையில், இன்று, அண்மைக்கால அரசியல்
மாற்றங்களோடு தொடர்புபடுத்தும் வகையில், அதில் கூறிய சில கருத்துக்களை
மீள்பார்வையிட விரும்புகிறேன். இன்றைய அரசாங்கத்தின் தேர்தல் வெற்றியின் பிறகு, பல
பெண் தலைவர்களின் பங்குபற்றலும், பெண்கள் என பிரத்தியேகமாக
அடையாளப்படுத்தப்படும் ஒரு தொகுதியின் அணிதிரடடலும் காணப்படும் இந்நேரத்தில்,
மதிப்பீடு செய்வதற்கும் கொண்டாடுவதட்கும் நிறைய விடயங்கள் உள்ளது. எம் சமூகத்தில்
உள்ள வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கான நீண்ட பாதையில்,
பாராளுமன்றில் ஏற்பட்டுள்ள பெண் தலைமைத்துவ முன்னேற்றங்கள் முக்கியமானவை. அந்த
கட்டுரையில், பல்கலைக்கழகத்திலிருந்து படடம்பெறும் இளம் பெண்கள் குறிப்பிடத்தக்க
அளவு வன்முறை அச்சுறுத்தலை பெண்கள் முகம்கொடுக்கும் ஓர் உலகில் நுழைகிறார்கள் என
உறுதியாக கூறினேன். அவ்வாறான உலகை அவர்கள் முகங்கொடுக்கவும் மாற்றவும்
தயார்படுத்தவேண்டிய தேவை உள்ளது என நான் எடுத்துரைத்தேன். பெண்கள் பெரியளவான
தலைமைத்துவ இடங்களை எடுப்பது அவ்வகையான மாற்றத்துக்கு முக்கியமானதாகும். திறமை
வாய்ந்த அனுபவமுள்ள பெண்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பாராளுமன்றம்
செல்லவதற்கு ஆதரவு வழங்கியதன் மூலமாக புது அரசாங்கம் அவ்வகையான மாற்றத்தின்
தொடக்கத்தை சாத்தியமாகியுள்ளது. இந்த நிரலானது, இம்மாற்றத்தை
கண்டுகொள்ளவதாகவும் ஆதரிப்பதாகவும் இருப்பதோடு, எமது பெண் பால் மாணவர்களுக்கு
இதன் விளைவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முயல்கிறது.

கமகே மற்றும் டஸ்ஸநாயகே அண்மையில் ஹிமல் சவுத் ஏசியன் இல் (Himal South Asian)
சுட்டிக்காட்டியது போல், முன்னைய முயற்சிகளை விட, முக்கியமான வகையில் வேறுபாடும்
விதத்தில், பெண் வாக்காளர்களை முனைப்பாக NPP அணிதிரட்டியது. சம்பளம் வழங்கப்படாத
பெண்களின் பராமரிப்பு வேலைகள், பெண்களின் உடல் சார்ந்த சொல்லாடல்களின் பால்
நிலைசார் நிலை போன்றவற்றை சுட்டிக்காட்டி, அவர்கள் பெண்களை அணிதிரட்டினார்கள்.
ஏற்கனவே வேறு விடயங்களில் வெற்றிகண்ட இலங்கைப் பெண்கள் அரசியலில் தலைமை
பதவிகளை எடுக்க தயாராக இருந்ததை NPP பயன்படுத்திக்கொண்டது. (பெண்கள் குழுக்கள்
பல தசாப்த்தங்களாக தமக்கு கூடிய பிரநிதித்துவம் வேண்டுமென தொந்தரவு செய்தவண்ணம்
இருந்துள்ளனர்.) 2024, நவம்பர் 14 பொதுத்தேர்தலுக்கு 36 பெண் வேட்ப்பாளர்களை NPP
முன்மொழிந்தது. அதில் 20 பேர் தெரிவு செய்யப்பட்ட்னர். சட்ட சபையில் பெண்களின்
எண்ணிக்கை சுதந்திரத்திலிருந்து இதுவரை காலமும் அற்ப 5 வீதத்தையும் ஒரு போதும்
தாண்டாததாக இருந்தபோது, இன்று அது 10 சதவீதத்தை அண்மித்துள்ளது. இருப்பினும்,
அமைச்சரவையில், இதைவிட, பெரிய தலைமைத்துவ பொறுப்புகளுக்கும் பிரதி
அமைச்சர்க்கவளாவும் இப்பெண்களின் திறன்களை கண்டுகொள்ளாமல் போனது
ஏமாற்றமாகவே இருந்தது. ஹரிணி அமரசூரிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சராகவும், சரோஜா பால்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சராகவுமென ஆக இரண்டு
பெண்களே அமைச்சரவையில் தலைமை வகிக்க தகுதி உடையோராகக் கொள்ளப்பட்டுள்னர்.

நீண்டகாலமாக (சிங்கள) ஆண் பாலினத்துடையோரின் ஒரு கோட்டையாக இருந்துவந்துள்ள
எமது பாராளுமன்றம், எமது நாட்டுக்கு தேவையான தலைமைத்துவத்தின் முன்மாதிரியாக
அரிதாகவே இருந்துள்ளது. பெண்கள், பாலியல் மற்றும் பால்நிலை சிறுபான்மையினர்
குரல்களை கேக்கக்கூடியதாக அது அரிதாகவே இருந்துள்ளது. ஒரே பாலை உடையோர்
இடையிலான பாலியலுறவுவை தடை செய்யும் விக்டோரியன் யுக சட்ட்ங்கள் இன்னும்
சடடப்புத்தகங்களில் உள்ளன. 1950 களில் இருந்தே பிரச்சனைக்குரிய ஒரு எச்சமாகவுள்ள
முஸ்லீம் விவாகம் விவாகரத்து சட்டம் (MMDA) பல தசாப்தங்களாக
சவாலுக்குட்படுத்தப்படாமல் இருந்துள்ளது. பெண்களுக்கு சார்பான எந்த ஒரு சட்டவாக்கமும்
கடின போராடத்தினாலேயே கிடைக்கபெறபட்டுள்ளது. உண்மையை சொல்லப்போனால்,
பெண்கள் மீதான மிகவும் பாராபட்சமான, அவர்களை இழிவுபடுத்தும் மற்றும்
பொருட்படுத்தாத சில சொல்லாடலின் மையப்புள்ளியாக பாராளுமன்றம் இருந்துள்ளது.
பெண்கள் பற்றி பாராளுமன்றில் பேசும் விதம், பெண்கள் மற்றும் ஊடக கூட்டின் (Women and
Media Collective) ஒரு 2016 இல் வெளியிட்ட வெளியீட்டில் ஆவணப்படுத்தபட்டுள்ளது.)
சட்டவாக்கம் பற்றி இப்போது கதைத்பது அவசரப்படுவதாக இருக்கும்போதும், புதிய பெண்
பாராளுமன்ற உறுபினர்களின் பங்கின் ஒரு விளைவாக, பெண்கள் மீதான சொல்லாடலில் ஒரு
அவதானிக்க கூடிய வித்தியாசமானது காணப்படுகிறது. மேலும், பெண் பாராளுமன்ற
உறுப்பினர்களின் சில பங்களிப்புகள் கடன் மேல்சீரமைப்பு தொடக்கம் சமூக பாதுகாப்புக்கள்
வரையான பிரச்சனைகள் பற்றிய முக்கியமான வாதங்களுக்கு இட்டுச்சென்றுள்ளன.

தன்னுடைய முதலாவது பாராளுமன்ற உரையில், பெண்களின் உழைப்பில் நாடு
தங்கியிருப்பதாகவும் இருப்பினும் அவர்களுக்கு சொற்ப உரிமைகளையும்
அந்தஸ்த்துக்களையும் வழங்குவதோடு அவர்களை துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதாக
NPP பாராளுமன்ற உறுப்பினர் கௌஷல்யா அரியரட்னே எடுத்துரைத்தார். பெண்கள் மற்றும்
இரு பால் ஈர்ப்பு கொண்டோர், பால்நிலை சிறுபான்யினர்கள் முகங்கொடுக்கும் பாரபட்சங்கள்
தொடர்பாக, திருத்தம் செய்ய வேண்டிய பல சட்டங்கள் பற்றி அவர் அங்கு கூடியிருந்தோருக்கு
ஞாபகபடுத்தினார். MMDA ஐ திருத்தம் செய்ய தவறியமை, நுண் கடன்களை
கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை கொண்டுவராமை என்பன முன்னய அரசாங்கங்கள்
பொறுப்புக்கூறவேண்டிய பிரச்சனைகள் என சுட்டிக்காட்டினார். புதிய அரசாங்கம் IMF உடன்
மீள்பேச்சுவார்த்தை நடத்தவேண்டாம் என முடிவெடுத்தமையை விக்கிரமசிங்கவின் திட்டத்தை
தொடர்ந்து முன்னெடுப்பதாக சித்தரிப்பதற்கு எதிராக, மக்களின் சுமைகளை அதிகரிப்பது
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமில்லை எனவும் மாறாக, முன்னர் பொருதாளாதார
நடவடிக்கைகளிலிருந்து விலத்தி வைக்கப்பட்டிருந்தோரின் பங்களிப்பை ஊக்குவிப்பதாகவும்
NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர கூறினார். IMF சீர்திருத்தம் பற்றி நாம்
எவ்வித கருத்தை கொண்டிருந்தாலும், அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி எப்படியான
விமர்சனங்களை நாம் கொண்டிருந்தாலும், நாடு முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சனைகள்
பற்றிய கலந்துரையாடல்களை அறியரத்னே, ஹேமச்சந்திர, மற்றும் ஏனையோர்
தூக்கிக்காட்டியமை கட்டாயமாக அங்கிகரிக்கவேண்டிய விடயமாகும்.

ஹரிணி அமரசூரிய, பிரதமராக இருப்பதோடு கல்வி அமைச்சராகவுமுள்ளார். கலவியில்
தன்னுடைய நீண்டகால செயல்முனைவுகளை தொடரும் வகையில், இடர்பாடுகளை
முகங்கொடுக்கும் எமது கல்வித்துறையை மேம்படுத்த அவரால் முடியுமானால், வெறுமனே
எதிர்கால மாணவர்களுக்கு என்று மாத்திரமல்லாமல், பெண்களின் தலைமைத்துவத்திற்கே அது
முக்கிய பங்களிப்பாக அமையும். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா
பால்ராஜ்க்கும் ஒரு சவால் உள்ளது. பொதுவாக, பெண்கள் தொடர்பான அனைத்து
பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டிய மாபெரும் பொறுப்பு வழங்கப்பட்ட பெண்கள் அமைச்சின்
பாதீட்டு ஒதுக்கீடு கடந்த அரசாங்கத்தின் கீழ் 50 % குறைந்தது. வழமையாகவே தன்னுடைய
பொறுப்புகளை நிறைவேற்ற தேவையான ஆதரவு இதற்க்கு சொற்பமாகவே
கிடைத்துவந்துள்ளது. வலிமையான மாற்றத்துக்கு தேவையான மாற்றங்களை
கொண்டுவரக்கூடிய பெண்ணிய ஆற்றல் வளங்கள் இல்லாத ஒன்றாகவே நீண்டகாலமாகே
இது இருந்து வந்துள்ளதோடு, சமூக சேவைகளன்றி வேறு எதுவும் பெரிதாக
வழங்கிக்கொண்டுள்ளதாகவில்லை. பெண்களின் அரசியல் அணிதிரட்டலுக்காக செயற்பட்ட
அமரசூரிய, பால்ராஜ், மற்றும் ஏனைய பெண் தலைவர்களைக் கொண்ட இந்த அரசின் கீழ்
இந்த நிலை மாறும் எனும் எதிர்பார்க்கப்படுகிறது. NPP இந்த பெண் தலைவர்கள் வளர்ந்துள்ள
முற்போக்கான பண்பாண்மைகளைப் பற்றி அமைச்சு பிரதிபலிக்கவேண்டும். பல
தசாப்தங்களாக தான் ஈடுபட்டிருந்த அடிமட்ட பெண்ணிய செயல்முனைவுகளிருந்து வரும்
தன்னுடைய தூரநோக்கு பார்வையை உட்சேர்ப்பதற்கான நிலை சரோஜா பால்ராஜ்க்கு
கட்டாயம் இருக்கவேண்டும். தலைமைத்துவ பொறுப்புகளிலுள்ள பெண்களின்
எதிர்பார்ப்புக்கள் முக்கியமானது. அவர்கள் தமது இலக்குகளை அடைவது
அரசாங்கத்திலுருந்தும் பொதுமக்களிடமிருந்தும் அவர்கள் பெறும் ஆதரவை பொறுத்தது.

பலம் வாய்ந்த பெண்கள் பாராளுமன்றத்தில் இருப்பதற்கு பதிலளிக்கையில், மத்தியதர, உயர்
வர்க்கங்களை சார்ந்தோரின் வீட்டு வரவேற்பறைகள் அவர்களின் திறமை பற்றியோ அல்லது
மாற்றத்தை கொண்டுவரக்கூடிய தாக்கம் பற்றியோ ஈடுபாடாக இருந்ததில்லை. வாக்குறுதி
அளிக்கப்படும் மற்றும் வாழப்படும் மாற்றத்துக்கு வழங்கப்ப்டும் புகழ்ச்சியால்
கோபப்படுத்தப்பட்டு, பிரதமரின் பாலியல் நோக்குநிலை பற்றியே கூடுதலான கருத்தாடல்கள்
காணப்படடன. பாராளுமன்றில் பேசும் இளம் உறுப்பினர்களுக்கு எதிரான பதில் இன்னும்
உக்கிரமானதாக காணப்பட்ட்து. அதில் இருவர் பாலியல் ரீதியான பொலிச்செய்தி
அறிக்கைகளை இலக்கானார்கள். அவ்வாறான ஒன்றில், ஒரு பாராளுமன்ற உறுப்பினரது எனக்
கூறும் ஒரு சமூகவலைத்தள கணக்கு ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர், கொழும்பு புறநகர்
பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தன்னோடு பாலுறவு வைத்தாக சொன்னது. இன்னொன்றில்,
அரசாங்கத்தின் இன்னொரு பெண் பாராளுமன்ற உறுப்பினரோடு கள்ள பாலியல் தொடர்பில்
தனது துணைவர் இருப்பதாக அவரின் மனைவி போலீசுக்கு முறைப்பாடுவழங்கியதாக
கூறப்படுகிறது. சமூக வலைத்தளம் மற்றும் ஒரு முதன்மை பத்திரிக்கை அந்த பெண்
உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டு இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. அவ்வாறான
பதிவுகளில் பெயர் வெளியிடப்படுவர்களுக்கு புகலிடம் என எதுவுமில்லை. அத்தோடு,
தனிப்படட எதிர் விளைவுகளை பற்றி பயப்படாமல், அவ்வாறான பதிவுகள் பெரும்
மகிழ்ச்சியுடன் பகிரப்படுகின்றன. இவ்வாறான செய்திகள் மற்றும் மிகைப்படுத்தல்கள் சமூக
வலைத்தளங்களில் காணப்படும் ஒரு பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றன. அதாவது,
அவ்வாறான துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தாமை மற்றும் எமது சமூகத்திலுள்ள
கட்டுக்கடங்காத வன்முறையான பெண்வெறுப்பு என்பவற்றையாகும்.

அரசியல் தலைமை நீண்டகாலமாக பெண்களை இழிவாக நடத்தியமை மற்றும் அவர்களை
கண்டுகொள்ளாமை, எமது பொது அமைப்புகளிலும் தினசரி வாழ்க்கையிலும் வந்துள்ளன.
இந்நாட்டில் நெருக்கமாகப் பழகும் துணைவரினால் இடம்பெறும் அதிகளவான
வன்முறைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரரா
திணைக்களத்தின் 2016 ம் ஆண்டு அறிக்கையை பார்க்கவும்) போலீஸ் மற்றும் பெண்களின்
இன்னல்களுக்கு பதிலளிக்கும் ஏனைய அரச நிறுவங்களும் பாலியல் மற்றும் பால் நிலை
அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் நடந்தந்தமையும்
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வர்க்க இன வேறுபாடுகளை கடந்து, ஊடகத்திலும் ஏனைய
இடங்களிலும் பெண்களுக்கு எதிராக வீசப்படும் அவதூறுகள் பற்றி எந்தவித வடிகட்டலையும்
ஆண் பாலினத்தோர் பொதுவாகவே கொண்டிருப்பதில்லை போல தென்படுகிறது. அவதூறு
படுத்தும் மற்றும் துஸ்பிரயோகம் சார் விடயங்களையே வெளியிடுவதில் ஊடகங்களுக்கும் எந்த
மனவுறுத்தல்களும் இல்லை.

எனவே, எமது மாணவர்கள் நுழையப்போகும் உலகம் தீயதாகவும் வன்முறைகள் அதிகம்
நிகழக்கூடியதுமாக உள்ளது. பெண்வெறுப்பு கலாச்சாரத்தை மாற்றுவதற்கு சட்ட சீர்திருத்தம்,
ஒழுஙக்குமுறைகள் தேவைப்படுவதோடு, நீண்ட காலமும் தேவைப்படும். எனவே, எம்
மாணவரிகள் அவ்வாறான எதிர்கால செயல்முறைகளில் பங்காளிப்பதற்கும் அவற்றை
தலைமை தாங்கவுவதற்கும் தயாராக இருக்கவேண்டும். இருப்பினும், சிந்தனைமிக்க மற்றும்
திறமையான பாராளுமன்றில் தற்போதுள்ள பெண்கள் எம் மாணவர்களுக்கு
முன்னுதாரணமானவர்கள். அத்தோடு, அரசியல் தலைமைத்துவம் இப்போது அனைத்து
பெண்களும் ஆசைப்படக்கூடியவொன்று. செய்யவதற்கு இன்னும் அதிக வேலைகள்
இருப்பினும், நம்பிக்கை தருவதற்கும் அதிக விடயங்கள் இந்த புது வருடத்தில் உள்ளது.

பார்சான ஹனிஃபா