சிறப்புப் பகுதி

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை?

கௌசல்யா பெரேரா அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்விசார் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறைகளில் காலம் பெருமளவில் நின்றுபோயிருப்பது போலத் தோன்றுகின்றது. கல்வித் தகைமைகள் காலப்போக்கில் பெருகியதோடு, பல்துறை மற்றும் இடைநிலைத் துறைகளை உள்ளடக்கிய வடிவங்களாகவும் பரிணமித்துள்ளன. எனினும், அவற்றை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் தெரிவுசெயல் நடைமுறைகளும் மதிப்பீட்டு அளவுகோல்களும் குறைந்தபட்சம் 1990களின் இறுதிக்காலத்திலிருந்து மாற்றமின்றி தொடர்கின்றன. இவ்விடயத்தின் சிக்கல்களை ஆராய்வதற்கு முன்னர், தற்போதைய ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் திட்டங்களை சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன். இக்கலந்துரையாடல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) […]

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை? Read More »

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல்

ஹசினி லேகம்வசம் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவை ஏற்படுத்திய எதிர்வினைகளுக்கும் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அத்தகைய எதிர்வினைகள், நமது சமூகத்தில் கல்வி எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகும். அத்துடன், இந்தப் புரிதலையும் அது உருவாக்கும் முன்னுரிமைகளையும், கல்விக் கொள்கைகளில், குறிப்பாக சீர்திருத்தக் கொள்கைகளில், கட்டாயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தக் கட்டுரையில் எனது நோக்கம்,

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல் Read More »

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . .

சிவமோகன் சுமதி கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அதீதப் பரப்புரைகள் சற்றே ஓய்ந்துள்ள போதிலும், அந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கவே செய்கிறது. இங்கு ‘சர்ச்சை’ என்று நான் குறிப்பிடுவது, ஆறாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடப்புத்தகத்தில் இணையவழித் தளத்திற்கான இணைப்பு (link) தவறாக அச்சிடப்பட்டதால் ஏற்பட்ட அந்தத் தவறை அல்ல. அந்தத் துரதிர்ஷ்டவசமானச் சம்பவம் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற மற்றும் மோசமான தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழிவகுத்த போதிலும், சீர்திருத்தங்கள்

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . . Read More »

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா?

ரம்யா குமார் இன்னொரு புதிய அணி மாணவர்கள் எமது பீடத்துக்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்துள்ள இம் மாணவர்கள் எம் பல்கலைக்கழகங்களிலே சமூக மற்றும் இன ஒருங்கியைதலை முன்னேற்ற எமக்குள்ள மகத்தான வாய்ப்பை பற்றி எனக்கு இன்னொருமுறை ஞாபகப்படுத்துகின்றனர். இருப்பினும் கவலைக்கிடமாக, முதல் சில அரையாண்டுகளில் பல மாணவர்கள் ஏனையோரோடு தொடர்புபட்டு செயற்படுவதில்லை. இதன் காரணம் ஒருவர் இன்னொருவர் மொழியை பேசாமலிருப்பது மட்டுமில்லை. எமது சமுதாயத்தின் சமூகங்களிடேயே இன்னமும் தொடரும் ஒருவரை ஒருவர் பற்றியதான

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா? Read More »

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கல்விச் சீர்திருத்தங்கள்

மகேந்திரன் திருவரங்கன் 2026 ஆம் ஆண்டு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி  (NPP) வெற்றியடைந்தபோது நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்தமுடியும் எனும் பெரும் நம்பிக்கை காணப்பட்டது. நல்லாட்சி மற்றும் முறைமை மாற்றம் பற்றிய வாக்குறுதிகளை NPP வழங்கியிருந்ததுடன், இலவச பொதுக்கல்வியை வலுப்படுத்த முன்னிலையில் நின்ற, மொத்த தேசிய உற்பத்தியின் 6% கல்விக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற முனைப்பியக்கத்தில் மும்முரமாக பங்குபற்றிய ஒரு கல்வியாளரை கல்வி அமைச்சராக நியமித்தமை இவ்நம்பிக்கை வலுப்பெற்றதுக்கு ஒரு காரணமாகும். கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நடந்துகொண்டுள்ளது. இதில் உற்சாகப்படுத்தும்

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கல்விச் சீர்திருத்தங்கள் Read More »

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல்

சுமதி சிவமோகன் மிகக்குறுகிய காலப்பகுதியான கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், ‘டிட்வா’ (Detwah) சூறாவளி நம்மிடையே முன்னொரு போதும் இல்லாத அளவிலான ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பகுதியை சுழற்றியடித்துள்ள இப்புயல், பல நூற்றாண்டுகள் பழைமையான கட்டமைப்புகளின் அரண்களைத் தகர்த்தெறிந்துள்ளதோடு, ஒரு காலத்தில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட பகுதிகளையும் தாக்கியுள்ளது. மழை நின்றிருக்கலாம். வெள்ள நீர் வடியும், கடைகள் மீண்டும் திறக்கப்படும், குழாய்களில் தண்ணீர் வரும், நாம் மீண்டும் எமது அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால்,

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல் Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »