சிறப்புப் பகுதி

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு

ரம்யா குமார் தனது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக பாலியல் தொந்தரவு தொடர்பான ஆரம்ப முறைப்பாட்டை முன்வைத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தின் பின்னர், அன்றைய தற்காலிக விரிவுரையாளரும் இன்றைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி உதாரி அபேசிங்க அவர்களுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது. 2026 மே 8 ஆம் திகதி, உதாரியின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. “1) முதலாவது, பிரதிவாதி [அவரது ஆய்வு மேற்பார்வையாளர்], ஊதியத்துடனோ அல்லது […]

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு Read More »

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள்

அகிலன் கதிர்காமர் தேசியக் கற்பனையாக்கத்தில் கிராமப்புறங்களும் நாட்டின் விளிம்புநிலைப் பிராந்தியங்களும் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை பிராந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்துகின்றது. அவை உயர்கல்வி அமைப்பின் ஒரு ஓரங்கமாக மட்டுமே கருதப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பிராந்திய அரசியல் தேவைகளை சமாளிப்பதற்கான நிறுவனங்களாகவே உருவாக்கப்பட்டன. கிராமப்புற உலகமும் அந்தப் பிராந்தியங்களில் இயங்கும் நிறுவனங்களும் தேசிய அபிவிருத்தி நோக்கிலிருந்து விலக்கப்பட்டமை தற்செயலானதோ தவிர்க்க முடியாததோ அல்ல. மாறாக, வளங்களை உறிஞ்சிக்கொள்ளும் மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஒழுங்கின்

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் Read More »

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்: பகிடிவதையை ஒழிப்பதில் காணாமல் போன இணைப்பு

உதாரி அபேசிங்க அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வொன்றில் பகிடிவதை தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய அண்மைய தீர்ப்பின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறித்த தீர்ப்பில், பகிடிவதையைத் தடுப்பது என்பது சம்பவம் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் மட்டுப்படாத விடயமாகும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தவும் தேவையான ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் இயலுமையுடைய பல்கலைக்கழக மட்டத்திலான கட்டமைப்புகளும் செயன்முறைகளும் அவசியமானவை என உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சட்டம், பல்கலைக்கழக நிர்வாகம், உளவியல் மற்றும் மாணவர் சமூகத்தை

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்: பகிடிவதையை ஒழிப்பதில் காணாமல் போன இணைப்பு Read More »

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை?

கௌசல்யா பெரேரா அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்விசார் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறைகளில் காலம் பெருமளவில் நின்றுபோயிருப்பது போலத் தோன்றுகின்றது. கல்வித் தகைமைகள் காலப்போக்கில் பெருகியதோடு, பல்துறை மற்றும் இடைநிலைத் துறைகளை உள்ளடக்கிய வடிவங்களாகவும் பரிணமித்துள்ளன. எனினும், அவற்றை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் தெரிவுசெயல் நடைமுறைகளும் மதிப்பீட்டு அளவுகோல்களும் குறைந்தபட்சம் 1990களின் இறுதிக்காலத்திலிருந்து மாற்றமின்றி தொடர்கின்றன. இவ்விடயத்தின் சிக்கல்களை ஆராய்வதற்கு முன்னர், தற்போதைய ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் திட்டங்களை சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன். இக்கலந்துரையாடல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC)

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை? Read More »

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல்

ஹசினி லேகம்வசம் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவை ஏற்படுத்திய எதிர்வினைகளுக்கும் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அத்தகைய எதிர்வினைகள், நமது சமூகத்தில் கல்வி எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகும். அத்துடன், இந்தப் புரிதலையும் அது உருவாக்கும் முன்னுரிமைகளையும், கல்விக் கொள்கைகளில், குறிப்பாக சீர்திருத்தக் கொள்கைகளில், கட்டாயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தக் கட்டுரையில் எனது நோக்கம்,

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல் Read More »

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . .

சிவமோகன் சுமதி கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அதீதப் பரப்புரைகள் சற்றே ஓய்ந்துள்ள போதிலும், அந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கவே செய்கிறது. இங்கு ‘சர்ச்சை’ என்று நான் குறிப்பிடுவது, ஆறாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடப்புத்தகத்தில் இணையவழித் தளத்திற்கான இணைப்பு (link) தவறாக அச்சிடப்பட்டதால் ஏற்பட்ட அந்தத் தவறை அல்ல. அந்தத் துரதிர்ஷ்டவசமானச் சம்பவம் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற மற்றும் மோசமான தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழிவகுத்த போதிலும், சீர்திருத்தங்கள்

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . . Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »