பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு
ரம்யா குமார் தனது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக பாலியல் தொந்தரவு தொடர்பான ஆரம்ப முறைப்பாட்டை முன்வைத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தின் பின்னர், அன்றைய தற்காலிக விரிவுரையாளரும் இன்றைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி உதாரி அபேசிங்க அவர்களுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது. 2026 மே 8 ஆம் திகதி, உதாரியின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. “1) முதலாவது, பிரதிவாதி [அவரது ஆய்வு மேற்பார்வையாளர்], ஊதியத்துடனோ அல்லது […]







