Author name: Hasini Lecamwasam

நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான‌ போராட்டம்

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டமானது மாணவர்கள் தமது கல்வி, அதன் வகிபங்கு, நோக்கங்கள், தாம் பயிலுகின்ற‌ துறை பற்றி விளங்கிக்கொள்ளுவதிலே தாக்கம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தின் மூலமாக (ஆதிக்கமான) கருத்தியலின் இயல்பாக்கமும், சமூகமயமாக்கமும் நிகழும் அதேவேளை, பாடத்திட்டமானது அதிகாரங்களுக்கு எதிரான செயன்முறைகளை வடிவமைப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளது.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு வழுக்கள்

இலங்கையின் கல்வி முறையானது காலங்கடந்தது என இழிவுபடுத்தப்படுவது வழக்கம். இருப்பினும் இலவசப் பொதுக் கல்விக்கான கேள்விக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது.