நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான போராட்டம்
பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டமானது மாணவர்கள் தமது கல்வி, அதன் வகிபங்கு, நோக்கங்கள், தாம் பயிலுகின்ற துறை பற்றி விளங்கிக்கொள்ளுவதிலே தாக்கம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தின் மூலமாக (ஆதிக்கமான) கருத்தியலின் இயல்பாக்கமும், சமூகமயமாக்கமும் நிகழும் அதேவேளை, பாடத்திட்டமானது அதிகாரங்களுக்கு எதிரான செயன்முறைகளை வடிவமைப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளது.