Author name: Hasini Lecamwasam

விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும்

நந்தக மதுரங்க கலுகம்பிட்டிய ஒரு விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்னவெனில், தன்னை ஒரு சமூக உயிரியாக வரையறுக்கும் அதே யதார்த்தங்களையே விமர்சன ரீதியாக அணுக வேண்டிய கட்டாயமாகும். தாம் ஆய்வு செய்யும் பொருளைப் பற்றிக் கருத்துரைக்கத் தொடங்கும் அந்தக் கணமே, அதன் அதிர்வலைகள் ஏதோ ஒரு வடிவில் அவருடைய சொந்த இருப்பையும் தாக்காமல் இருக்காது. மானுடவியல் துறைகளில் இயங்கும் அறிஞர்கள், அவர்கள் ஆய்வு செய்கின்ற உலகின் ஓர் அங்கமாகவே பல […]

விமர்சன நோக்குடைய‌ மானுடவியல் அறிஞரின்சுமையும் வலிமையும் Read More »

கல்விசார் ஆட்சேர்ப்பிலுள்ள குறைபாடுகளும் விலக்கல்களும்

மகேந்திரன் திருவரங்கன் ஒரு அரசுப் பல்கலைக்கழகம், சமூகத்திற்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதன் கல்வியாளர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. கற்பித்தல், கல்விசார் பணியாளர்களின் முதன்மைப் பொறுப்பாக இருந்தாலும், அவர்கள் ஆய்வுப்பணிகளையும் முன்னெடுப்பதோடு, வகுப்பறைக் கற்றலைத் தாண்டி சமூகத்தின் பரந்த பிரச்சினைகள் குறித்த உரையாடல்களில் தாமும் மாணவர்களும் சுதந்திரமாகப் பங்கேற்கக்கூடிய உயிரோட்டமிக்க அறிவியல் வெளியாக பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்துவதிலும் மையப்பங்கு வகிக்கின்றனர். எனவே, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவுசார் பண்பாடும் கல்விசார் நேர்மையும் அதன் கல்வியாளர்கள் தங்கள் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதிலேயே

கல்விசார் ஆட்சேர்ப்பிலுள்ள குறைபாடுகளும் விலக்கல்களும் Read More »

ஆழ்ந்த தேடல் முக்கியத்துவம் பெறும் தருணம்: கல்வியும் அதன் பிளவுகளும்

சிவமோகன் சுமதி இலவசக் கல்வி எமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து எண்பது ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அது இலங்கையின் அரசியல் சுதந்திரத்திற்கும் முந்தைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மிகத் தெளிவான நோக்கங்களில் ஒன்று, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சமமான கல்வி வாய்ப்பை வழங்குவதாகும். இன்று எமது பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியான நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஏற்றுமதிப் பயிர்களைச் சார்ந்திருந்த பொருளாதாரம், தற்போது நிலையற்ற உற்பத்தித் துறையையும் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் ஏற்றுமதியையும் பெரிதும் சார்ந்திருக்கிறது.

ஆழ்ந்த தேடல் முக்கியத்துவம் பெறும் தருணம்: கல்வியும் அதன் பிளவுகளும் Read More »

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு

ரம்யா குமார் தனது ஆய்வு மேற்பார்வையாளருக்கு எதிராக பாலியல் தொந்தரவு தொடர்பான ஆரம்ப முறைப்பாட்டை முன்வைத்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தின் பின்னர், அன்றைய தற்காலிக விரிவுரையாளரும் இன்றைய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி உதாரி அபேசிங்க அவர்களுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது. 2026 மே 8 ஆம் திகதி, உதாரியின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. “1) முதலாவது, பிரதிவாதி [அவரது ஆய்வு மேற்பார்வையாளர்], ஊதியத்துடனோ அல்லது

பல்கலைக்கழகக் கட்டமைப்புகள் தோல்வியடையும் போது: பாலியல் தொந்தரவு வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலையீடு Read More »

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள்

அகிலன் கதிர்காமர் தேசியக் கற்பனையாக்கத்தில் கிராமப்புறங்களும் நாட்டின் விளிம்புநிலைப் பிராந்தியங்களும் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை பிராந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்துகின்றது. அவை உயர்கல்வி அமைப்பின் ஒரு ஓரங்கமாக மட்டுமே கருதப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் பிராந்திய அரசியல் தேவைகளை சமாளிப்பதற்கான நிறுவனங்களாகவே உருவாக்கப்பட்டன. கிராமப்புற உலகமும் அந்தப் பிராந்தியங்களில் இயங்கும் நிறுவனங்களும் தேசிய அபிவிருத்தி நோக்கிலிருந்து விலக்கப்பட்டமை தற்செயலானதோ தவிர்க்க முடியாததோ அல்ல. மாறாக, வளங்களை உறிஞ்சிக்கொள்ளும் மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஒழுங்கின்

பிராந்தியப் பல்கலைக்கழகங்கள் Read More »

பல்கலைக்கழக மாணவர்

ஷாமலா குமார் அண்மையில், கல்வியியல் சுதந்திரம் பற்றியதும் உயர் கல்விக் கொள்கை பற்றியதுமென இரண்டு ஆய்வு நடவைகளில் ஈடுபட்டிருந்தவேளையில், நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கூறியதை நான் செவி மடுத்தலிருந்து உருவானதே இந்தக் கட்டுரை. மாணவர்களோடு பேசும்போது, அவர்களின் பயத்தை அசட்டை செய்ய முடியாது. தமது எதிர்காலத்தை பற்றிய மனப்பதற்றங்களுடனும் தமது பல்கலைக்கழக கல்வி போதாது எனும் பயத்துடனும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்விவயில் ஈடுபடவேண்டியுள்ளது. இதெல்லாவற்றயும் அவர்களின் குடும்பங்கள் முகங்கொள்ளும் இன்னல்களை சமாளித்தபடி அவர்கள் செய்யவேண்டியுள்ளது. மாணவர்களின் மனப்பதற்றங்கள்

பல்கலைக்கழக மாணவர் Read More »

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்: பகிடிவதையை ஒழிப்பதில் காணாமல் போன இணைப்பு

உதாரி அபேசிங்க அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வொன்றில் பகிடிவதை தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய அண்மைய தீர்ப்பின் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறித்த தீர்ப்பில், பகிடிவதையைத் தடுப்பது என்பது சம்பவம் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் மட்டுப்படாத விடயமாகும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தவும் தேவையான ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் இயலுமையுடைய பல்கலைக்கழக மட்டத்திலான கட்டமைப்புகளும் செயன்முறைகளும் அவசியமானவை என உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சட்டம், பல்கலைக்கழக நிர்வாகம், உளவியல் மற்றும் மாணவர் சமூகத்தை

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்: பகிடிவதையை ஒழிப்பதில் காணாமல் போன இணைப்பு Read More »

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை?

கௌசல்யா பெரேரா அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்விசார் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறைகளில் காலம் பெருமளவில் நின்றுபோயிருப்பது போலத் தோன்றுகின்றது. கல்வித் தகைமைகள் காலப்போக்கில் பெருகியதோடு, பல்துறை மற்றும் இடைநிலைத் துறைகளை உள்ளடக்கிய வடிவங்களாகவும் பரிணமித்துள்ளன. எனினும், அவற்றை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் தெரிவுசெயல் நடைமுறைகளும் மதிப்பீட்டு அளவுகோல்களும் குறைந்தபட்சம் 1990களின் இறுதிக்காலத்திலிருந்து மாற்றமின்றி தொடர்கின்றன. இவ்விடயத்தின் சிக்கல்களை ஆராய்வதற்கு முன்னர், தற்போதைய ஆட்சேர்ப்பு முறைகள் மற்றும் திட்டங்களை சுருக்கமாக விளக்க விரும்புகின்றேன். இக்கலந்துரையாடல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC)

அரச பல்கலைக்கழகங்களுக்கு கல்வியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – காலாவதியான தெரிவுசெயல் நடைமுறைகளால் சிக்கலுறும் நிலை? Read More »

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல்

ஹசினி லேகம்வசம் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவை ஏற்படுத்திய எதிர்வினைகளுக்கும் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அத்தகைய எதிர்வினைகள், நமது சமூகத்தில் கல்வி எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகும். அத்துடன், இந்தப் புரிதலையும் அது உருவாக்கும் முன்னுரிமைகளையும், கல்விக் கொள்கைகளில், குறிப்பாக சீர்திருத்தக் கொள்கைகளில், கட்டாயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தக் கட்டுரையில் எனது நோக்கம்,

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல் Read More »

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . .

சிவமோகன் சுமதி கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அதீதப் பரப்புரைகள் சற்றே ஓய்ந்துள்ள போதிலும், அந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கவே செய்கிறது. இங்கு ‘சர்ச்சை’ என்று நான் குறிப்பிடுவது, ஆறாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடப்புத்தகத்தில் இணையவழித் தளத்திற்கான இணைப்பு (link) தவறாக அச்சிடப்பட்டதால் ஏற்பட்ட அந்தத் தவறை அல்ல. அந்தத் துரதிர்ஷ்டவசமானச் சம்பவம் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற மற்றும் மோசமான தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழிவகுத்த போதிலும், சீர்திருத்தங்கள்

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . . Read More »