கல்விச் சீர்திருத்தங்கள்: உலகளாவிய தொழிற்சந்தை ஊடான ஒரு பார்வை
உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையின் கல்வி
முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது புதிய அரசாங்கத்தின் பிரதான
குறிக்கோளாகக் காணப்படுகின்றது. இந்த அறிவிப்பானது, தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் அறிக்கையில், தொழிற்கல்வியுடன் தொடர்புபடுத்தப்பட்டு முதலில்
இடம்பெற்றது. பின்னர், அக்டோபர் 2024 இல், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,
எமது கல்விமுறை உலகளாவிய கோரிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் கட்டமைக்கப்பட
வேண்டும் என்று கூறினார். பிரதமரும் கல்வி அமைச்சருமாகிய ஹரிணி அமரசூரிய
2024 டிசெம்பரில் ஆற்றிய ஓர் உரையில், தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில்
காணப்படும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை வாய்ந்த பணியாளர்களை
உருவாக்குவதே அபிவிருத்திக்கான தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தின்
பிரதான குறிக்கோள் என தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள்: உலகளாவிய தொழிற்சந்தை ஊடான ஒரு பார்வை Read More »









