கல்வியும் சுகாதார சேவையும் எதிர்கொள்ளும் நெருக்கடி: ஏன் சர்வதேச
நாணய நிதியம் (IMF) ஒரு தீர்வல்ல
மக்கள் மிகத்தீவிரமாக அரசாங்க மாற்றத்தை வேண்டுகின்றார்கள் என்பதற்கு
ஜூலை 9ல் நடைபெற்ற பேரணியும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும்
சாட்சியங்களாக இருக்கின்றன. நாம் அரசாங்கத்தின் பங்காளர்களாக
இருப்பதோடு, அதிகாரத்தை துஷ்பிரயோகிப்பதை விடுத்தும் நாட்டின்
வளங்களின் சமமான பங்கீட்டுக்கும் ஜனநாயகமானதும்
உள்ளீர்க்கக்கூடியதுமான சமூகத்துக்காகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.









