கட்டுரை

இணைபாடவிதான செயற்பாடுகளின் நோக்கம் நலிவடைந்து செல்கின்றதா?

மகேந்திரன் திருவரங்கன் பாடசாலை என்பது வெறுமனே முறைசார் வகுப்பறைக் கற்றலுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. விளையாட்டு, இலக்கியம், மற்றும் கலைகளிலே மாணவர் தமது ஆர்வத்தை ஆராய்வதற்கும், வழற்பதற்கும் கூர்மையாக்குவதற்க்குமுரிய இடமுமாக அதுவுள்ளது. பொழுதுபோக்கு தேவைகளுக்கு இணைபாடவிதான செயற்பாடுகள் முக்கியமானவை என்பதால் அவை பற்றி பாடசாலைகள் விசேட கவனம் செலுத்துகின்றன. இணைபாடவிதான செயற்பாடுகளிலே பங்குபற்றுவதன்மூலம், ஆக்கத்திறன் மீதான ஒரு நீண்ட கால தாகத்தயும் ஏனையோரோடு இணைந்து செயற்படுவதில் ஒரு ஆழமான ஆர்வத்தையும் மாணவர்கள் வளர்க்கிறார்கள். இவ் அனுகூலங்களை இணைபாடவிதான செயற்பாடுகள் வழங்கினாலும்கூட, […]

இணைபாடவிதான செயற்பாடுகளின் நோக்கம் நலிவடைந்து செல்கின்றதா? Read More »

அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்?

ரம்யா குமார், ஷாமல குமார், சுமதி சிவமோகன் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: “academic freedom” எனும் ஆங்கில வார்த்தை இந்த கட்டுரையில் பல்கலைக்கழத்தில் கற்றல், கற்பித்தல், விமர்சன சிந்தை போன்றவற்றின் சுதந்திரத்தை சுற்றிய ஒரு எண்ணக்கருவாக சித்தரிக்கப்படுகிறது. எனவே இந்த பதத்தை “அறிவுச் சுதந்திரம்” என மொழிபெயர்த்திருப்பது பல்கலைக்கழக சூழலை மனதில் வைத்தே ஆகும். அதுபோலவே, “அறிவுப் பொறுப்புக்கூறல்”, “அறிவுசார் பணியாளர்கள்” என நான் மொழிபெயர்த்திருப்பது “academic  accountability”, “academic” எனும் ஆங்கில பதங்களாகும். “சுதந்திரத்தை நடைமுறைப் படுத்தும்

அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? Read More »

ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல்

சுமதி சிவமோகன் ஏன் புத்தகங்கள் ஏமாற்றுகின்றன? ஏன் அகரவரிசையில் ஒவ்வோர் எழுத்தும் சங்கிலியிடப்பட்டிருக்கிறது எல்லா மனித வாய்களும் கடிவாளமிடப்பட்டுள்ளன? அதோனிஸ் எழுதிய கான்சர்ட்டோ அழ-குட்ஸ் எனும் புத்தத்தில் “பாலஸ்தீனம் பற்றி” எனும் கவிதையிலிருந்து (ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தவர் காலீத் மட்டவா) இந்தக் கவிஞர் கெட்டப்பதைப்போல் ஏன் அகரவரிசையில் எல்லா எழுத்துக்களும் சங்கிலியிடப்பட்டிருக்கின்றன? இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முயன்றால் இதனை நான் ஒரு அறிதலியல் மற்றும் கற்பித்தலியல்சார் பிரச்சனையாக எழுப்பவேண்டும். அத்தோடு நான் இதனை பாலஸ்தீனம் பற்றிய

ஓ பாலஸ்தீன், பாலஸ்தீன்: கல்வியை விடுவித்தல் Read More »

மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி

அகிலன் கதிர்காமர் இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக தமிழ் ஆசிரியர்களுடலான கலந்துரையாடலில் கூறினார். கன்னங்கராவின் 1944 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் தொடங்கி இலவசக்கல்வியின் எட்டு தசாப்த மரபுப் புகழை பற்றி நாம் பெருமை கொண்டாலும்கூட, 1980 கள் வரை அரச பாடசாலைகளற்று காணப்பட்ட தப்பிக்கமுடியாத

மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி Read More »

உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா?

ஷாமலா குமார் டிசம்பர் 2024 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC) வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறை உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசு நிதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்ததாக Sunday Observer செய்தி வெளியிட்டது. 225 சர்வதேச மாணவர்களுடன், அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதால், பல்கலைக்கழகம் அதன் இலக்கை அடையும் பாதையில் இருப்பதாக VC கூறினார். அவரது கருத்துக்கள், அரச நிதி சார்பிலிருந்து பொது பல்கலைக்கழகங்களை விலகச் செய்யும் தேசியத் திட்டங்களையும்

உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா? Read More »

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவத்தைபற்றி கல்வியால் என்ன செய்யலாம்?

ஹாசினி லேகாம்வசம் சரித டில்ஷானின் தற்கொலை காரணமாக, மீண்டும் ஒருமுறை அரச பல்கலைக்கழகங்கள் பகிடிவதை பற்றிய பிரச்சனை சார்பாக மக்களின் கவனத்தில் வந்துள்ளது. 1998 ம் ஆண்டு 20 ம் இலக்க கல்வி நிறுவனக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை வடிவங்களின் தடை சட்டத்தின் படியும் 1994 ம் ஆண்டு 22 ம் இலக்க துன்புறுத்தல் மற்றும் ஏனைய கொடுமையான, மனிதத்தன்மையற்ற, அல்லது இழிவுபடுத்துகின்ற நடத்தல் அல்லது தண்டனை சட்டத்தின் படியும் எந்த ஒரு பகிடிவதை நடவடிக்கையும்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவத்தைபற்றி கல்வியால் என்ன செய்யலாம்? Read More »

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல 

கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய சக ஊழியர் ஒருவர், “இலங்கையில் ஆராய்ச்சி கலாசாரம் இல்லை” என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். ஆனால், ஆராய்ச்சி கலாசாரம் இருப்பதன் அர்த்தம் என்ன? அதிகளவு நிதி போதுமானதா? ஆக்கத்திறன்மிக்க மற்றும் அர்த்தமுள்ள ஆராய்ச்சி கலாசாரத்தை நோக்கிச் செயற்படுவதிலிருந்து வேறு என்ன விடயங்கள் நம்மைத் தடுத்தது? அரசு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி கலாசாரத்தை

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல  Read More »

கல்வியில் காலனித்துவ நீக்கம்

ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை 21ம் திகதி அபுதாபியில் காலம்சென்றதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். அனைத்துமே நம்பிக்கையற்று காணப்படட ஒரு நேரத்தில், வினாவலுக்கும் எதிர்ப்புக்குமான ஒரு குரலை கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தும் மற்றும் அதன் ஆதரவாளர்களிலிருந்தும் சிலர்  ஒருமித்த அந்த வேளையிலே, ஹர்ஷண குப்பி குழுவினை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராவார். ஆர்வமும் அர்ப்பணிப்புமுள்ள நடிகராகவும் சிந்திக்கும் கல்வியாளருமாக இருந்த  அவர் குப்பிக்கும் கல்வியல் செயற்பாட்டு சமூகத்துக்கும் செய்த

கல்வியில் காலனித்துவ நீக்கம் Read More »

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல்

செல்வராஜா விஷ்விகா “உள்ளூர் மக்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே இங்கு வேலை செய்ய இந்தியாவிலிருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர்” பதினாறு வயதுடையவராக க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுகின்ற போது இந்த வார்த்தைகளின் தீவிரத்தை நான் ஒருபோதும் உணரவில்லை. நமது நாட்டின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு சிந்தனையாக முன்வைக்கப்பட்ட போது, ஒரு முழு சமூகமும் அவர்களின் போராட்டக் கதையும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை என்னால் உணர முடியவில்லை. அத்துடன், முடிவற்ற

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல் Read More »

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு

அனுஷ்க கஹந்தகமே “தனியார் படிப்பகங்கள், தனியார் பாடசாலைகள், கட்டணத்துக்கு பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவங்கள் என அனைத்துமே சமூக வர்க்கங்களிடையே பெரிதாகும் ஏற்றத்தாழ்வுகளில் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன.” மெய்யாகவே கல்வி இலவசமாக/ சுதந்திரமாக இருக்கவேண்டும். தனியார்மயப்படுத்தலில் இருந்து சுதந்திரமாக இருப்பது மட்டுமன்றி ஒடுக்குமுறை கட்டமைப்புக்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை வலுவாக்குவதாக இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை செய்ய, நடப்புநிலையை சாவால்ப்படுத்த, முக்கியமாக தம்மை ஒடுக்குமுறை செய்யும் கடடமைப்புக்களில் இருந்து விடுவிக்க தேவையான அறிவையும் உபகாரங்களையும் கல்வி வழங்க வேண்டும்.

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு Read More »