கட்டுரை

உயர் கல்வியில் “தரம்”

கெளஷல்யா பெரேரா எமது பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மீதான பிரதான முறைப்பாடு அவர்களது “வேலைக்கமர்த்த முடியாத தன்மை” ஆகவுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் உலக வங்கியும் வேலையின்மையைக் குறைந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் புலமைக்குச் சமானப்படுத்தியுள்ளன. இவ்வாறான பலவீனங்களுக்கான காரணம் கல்வி மீதான அரச முதலீட்டின் பற்றாக்குறை எனப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எமது அரசாங்கமோ “வேலைக்கமர்த்தக் கூடிய” ஒரு பட்டதாரி அரச நிதியாலன்றி 2003 இலிருந்து உலக வங்கி மூலம் பெறப்படும் சுமார் 180 மில்லியன் USD […]

உயர் கல்வியில் “தரம்” Read More »

“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?”

ஹஸினி லேகம்வாசம் கலைப்பிரிவைச் சார்ந்தோர் தற்போது மேற்கூறிய கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. கேள்விக்கான விடைகளோ எதுவித தெளிவையும் தருவதாக இல்லை. ஆகவே முதலாவதாக இந்தக் கேள்வியையும் அதனை உருவாக்கியுள்ள தவறான கருத்துகள் மூன்றையும் நோக்குவோம்: முதலாவது, ஒருவர் இறுதியில் என்ன தொழிலில் ஈடுபடுகிறாரோ அது அவரது கல்வியின் நேரடிப் பிரதிபலிப்பு என்ற ஊகம். இரண்டாவது, பட்டதாரிகளின் தொழில் விருப்பங்கள் உட்பட தொழிற்சந்தையின் பல உண்மை யதார்த்தங்களை “வேலைக்கமர்த்த முடியாமை” என்ற விவரணம் மறைத்துள்ளது. மூன்றாவது,

“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?” Read More »

இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி

ஃபர்ஸானா ஹனிஃபா Image: கொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்  அண்மையில் தேசிய தணிக்கைக் காரியாலயத்தினால் உயர் கல்வி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கலைப்பிரிவுக் கல்வியையும் பட்டதாரிகளின் வேலையின்மையையும் தொடுக்க முற்பட்டது. எமது இன்றைய பகுதி இவ்வறிக்கை தொடர்பாக பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் சிலர் முன்வைத்த மறுமொழியினை அடிப்படையாகக் கொண்டதாகும். கல்வி ரீதியான கொள்கைகள் பெரும்பாலும் பற்றாக்குறையான ஆய்வுகள், தவறான முன்னுரிமைகள், குறைபாடுள்ள பகுப்பாய்வுகளால் உந்தப்படுவதால் இவ்வறிக்கையின் சில கருத்துக்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இலங்கையின் கலைப்பிரிவுக் கல்வியைப் பொறுத்தவரையில்

இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி Read More »

கல்வியும் நல்லிணக்கமும்

அனுஷ்கா கஹந்தகமகே தசாப்தங்களாக நீடித்த யுத்தம், ஆயிரக்கணக்கான இளம் உயிர்களைக் காவுகொண்ட இரு இளைஞர் கலகங்களுக்கு (1971, 1988-89) மத்தியில் இச்சிறு தீவு ஒரு இரத்த ஆற்றையே கண்டுவிட்டது. யுத்தம் முடிந்தபோதும் வன்முறையானது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எனத் தடையின்றித் தொடர்கின்றது. அவற்றுக்கு மேலதிகமாக அண்மையில் சூட்கேஸ் ஒன்றினுள் தலையின்றிக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் போன்ற எண்ணற்ற கோரச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. யுத்தத்திற்குப் பின்பும்

கல்வியும் நல்லிணக்கமும் Read More »

பரவலாகும் பகிடிவதை

ஷாமலா குமார் பகிடிவதை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் பற்றிப் பகிரங்கமாகப் பேசிய மாணவன், வேறு தவறான உள் நோக்கங்களைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான். பகிடிவதை இடம்பெறுவதைக் கண்டு அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கனிஷ்ட கல்வியாளர் பகிடிவதை செய்வோர் மட்டுமன்றி ஏனைய கல்வியாளர்களாலும் கண்டிக்கப்படுகிறார். பகிடிவதையைத் தடுப்பதற்காக பாடுபட்ட பீட உறுப்பினர், மாணவர்களிடையே பிரிவினையை உண்டுபடுத்தியதாகப் பழி சுமத்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறார். பகிடிவதை தொடர்பாக நடத்திய மதிப்பாய்வொன்றில் “இப்போதாவது எம்மால் பகிடிவதை பற்றி பேசக்கூடியதாகவுள்ளது,” என

பரவலாகும் பகிடிவதை Read More »

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு வழுக்கள்

இலங்கையின் கல்வி முறையானது காலங்கடந்தது என இழிவுபடுத்தப்படுவது வழக்கம். இருப்பினும் இலவசப் பொதுக் கல்விக்கான கேள்விக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு வழுக்கள் Read More »

கல்வி முன்னிட்ட விவாதத்துக்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்

“இலவசக் கல்வி என்பது வானத்தில் இருக்கும் ஒன்றல்ல. என்னால் அதைத் தொட முடிகிறது, என்னால் அதை உணர முடிகிறது.” அடிப்படை எழுத்தாற்றல் வகுப்பொன்றில் ஒரு மாணவி எழுதிய மேற்கண்ட வரிகள் என்னை எல்லையில்லா ஆச்சரியத்திற்குட்படுத்தின. இலவசக் கல்வி தொடர்பான ஒரு கருத்து இவ்வளவு எளிமையாக, தத்துவபூர்வமாக, சிந்தனையைத் தூண்டும் வண்ணம் முன்வைக்கப்பட்டதை நான் இதுவரை கண்டதில்லை. செய்த்திதாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அரசியல்வாதிகள், கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நடாத்திவரும் சொற்போர்களுக்கு மத்தியில், புதிதாகக் கற்று, தன்னுடையதுதான்

கல்வி முன்னிட்ட விவாதத்துக்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல் Read More »