கட்டுரை

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?

பல சமூக ஊடகங்களில் தற்போது எடுத்துரைக்கப்படும் விடயம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் பேரா. சம்பத்
அமரதுங்க அவர்களின் கருத்தாகும். அதாவது, 70 வீதமான
கலைப்பட்டதாரிகளுக்கு (மானிட மற்றும் சமூகவியல் துறைகளில்
பட்டம்பெற்று வெளியேறியோர்) நாட்டில் வேலைவாய்ப்பு காணப்படவில்லை
என்ற கருத்தை COPE (அரச தொழில்துறைகளின் செயற்குழு) அமர்வில் அவர்
மேற்கொண்டிருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கலைப்பட்டதாரிகளுக்கிடையில் நிலவும் வேலையில்லாப்பிரச்சினையே
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனக்களுக்கு
காரணம் என்ற கருத்தையும் இவர் முன்வைத்திருக்கின்றார்.

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?
Read More »

நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது

இரு வாரங்களுக்கு முன்னர், ஐக்கிய ராச்சியத்திலுள்ள ஹல்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐ.நா பேண்தகு வளார்ச்சி இலக்குகள்
தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மாநாட்டின் தலைப்பு “பேண்தகு வளார்ச்சியின் சமநீதியான நிலைமாற்றம்”
என்பதாகும். புதுப்பிக்கத்தக்க சக்திக்கான புத்தாக்க தொழில்நிட்பம் பற்றி
இயற்கை விஞ்ஞானிகள் பலர் தனியார் நிறுவனக்களால் நிதியுதவி
அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை பெறுமையாக
அரங்கேறி பேசிக்கொண்டிருந்தார்கள்.

நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது Read More »

தனியார் மருத்துவக் கல்லூரிகள்: இலவசக்கல்வி மீதான அடுத்த தாக்குதலா

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு தொடரப்போகும்
மாணவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டியற்ற கடக்ன்
கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி
நிறுவனங்களில் வழங்கப்படும் பாடநெறிகளின் தரத்தை பேனும் நோக்கில்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) தர உறுதிப்பாட்டு
மன்றமொன்றை நிறுவும் சீர்திருத்தமொன்று பல்கலைக்கழகங்கள்
சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்: இலவசக்கல்வி மீதான அடுத்த தாக்குதலா Read More »

மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை

அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைப்
பற்றி குப்பி குழுமம் கலந்தாலோசித்த போதுதான் இந்த ஆக்கத்திற்கான
வித்து மண்ணில் பதியப்பட்டது. சீர்திருத்த பரிந்துரைகள் வெளியிடப்பட்ட
உடனேயே நாங்கள் கல்வியியலாளர்கள் உட்பட ஏனையோருடனான
கலந்துரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்; இதனால் விளைய
இருக்கும் சீரழிவுகளையும் உணரத்தலைப்பட்டோம். இருப்பினும்
பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் இது குறித்த கலந்துரையாடல்கள்
ஆரம்பிக்கப்படவில்லை.

மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை
Read More »

அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை

இத்தகைய விடயமொன்றை முன்னிருத்தும் சம்பவமொன்று அன்றொருநாள்
என் வகுப்பில் நடந்தது‍ “நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று உங்கள்
எல்லோருக்கும் தெரியுமாதலால் நீங்கள் ஏன் அந்த விடயை தெரிவு
செய்தீர்கள் என்பதற்கான காரணங்களை கூறுங்கள்” என்று கூறினேன். அந்த
நேரத்தில், இரண்டாம் மொழி கற்பிக்கப்படும் என் வகுப்பறையில் உள்ள
மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட தெரிவுகளுக்கான காரணங்கள்
மற்றும் எவ்வாறு அவர்கள் அத்தெரிவுகளை நோக்கி உந்தப்பட்டார்கள்
போன்ற விடயங்களை கிரகிக்கும் சூழலை உருவாக்கி விட்டதாக நான்
நினைத்தேன்.

அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை
Read More »

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா?

மானிட மற்றும் சமூகவியல் கற்கைகள் முன்மைய காலங்களைக் காட்டிலும்
விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்துறைகளில் பெறப்படும் பட்டங்களின்
தேவைப்பாடு மற்றும் காலத்தின் பொருத்தப்பாடு என்பன சரமாரியாக
கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் மிகவுமே
வரையறுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் இத்துறைகளில் மேற்கொள்ளும்
பட்டப்படிப்புகளுக்காக செலவளிக்கப்படும் (அல்லது வீணாக்கப்படும்) நிதி,
உண்மையில் அர்த்தமுள்ள செலவீடா என்பது பலராலும் எழுப்பப்படும்
வினாவாக மாறியுள்ளது.

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா? Read More »

வகுப்பறையில் பால்மையும் பாலுணர்வும்

வகுப்பறையானது புலமைத்துவம், பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும்
விமர்சனநோக்கை வளப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும். இத்தளமானது
பன்மைத்துவமான பாலினங்களை கொண்ட ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களையும் அவர்களின் பாலியல் தேர்வுகளையும் எவ்வித
ஒழிவுமறைவுமின்றி சுதந்திரமான வெளிப்படுத்த வாய்ப்பான தளமாக இருக்க
வேண்டும். இருப்பினும் இலங்கையில் காணப்படும் வகுப்பறைகள் பால்மை
மற்றும் பாலுணர்வு சார் படித்தரங்களை மீளுருவாக்கும் சமூக அமைப்பை
போன்ற நுண் உலகமாகவே காணப்படுகின்றது.

வகுப்பறையில் பால்மையும் பாலுணர்வும் Read More »

கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை

கௌஷல்யா பெரேரா எழுதிய கடந்த வார குப்பி ஆக்கத்தில் அவர் அரச
பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஊழியர்களை ஆட்சேர்த்தல், தக்கவைத்தல்
ஆகிய விடயங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைளினால் தொழிலாளர்
நலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை Read More »

பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…

ஒரு வருடங்களுக்கு முன்னர் (உலக வங்கியால் வழங்கப்பட்ட கடன்களால்
நிதியுதவி அளிக்கப்பட்ட) ஒரு பயிற்சிநெறியில் பட்டதாரிகளை
உருவாக்குவது கார்களை உற்பத்தி செய்வது போலானது எனச்
சொல்லப்பட்டது. வாங்குபவர்கள்- தொழில்வழங்குனர்கள்- அவர்கள் என்ன
பெறுகின்றார்கள் என தெரிய வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…
Read More »

Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும்

கல்வியமைச்சு (MoE), தேசிய விஞ்ஞான அமைப்பு (NSF), தேசிய கல்வி
நிறுவகம் (NIE) ஆகியன மார்ச் 31ஆம் திகதி கொழும்பிலுள்ள ரோயல்
கல்லூரியில் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. நிகழ்வில்
கலந்துகொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அவர்கள்
2024இலிருந்து STEAM கல்வியை (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,
கலை, கணிதம்) அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கமானது
இலங்கையின் கல்வி அமைப்பை மாற்றியமைக்கப்போவதாகக் கூறினார்.
STEAMஆனது இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான அமைப்பை (NSF)
மையப்புள்ளியாக நியமித்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட STEMஐ
(விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) விட
வித்தியாசாமானது.

Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும் Read More »