கட்டுரை

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியக் கல்வி

அண்மையில் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழக்த்தின் (University of Hull) முதுகலை ஆய்வுச்
சமூகத்தைச் சார்ந்தோரோடு பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன்.
இதில் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலிருந்து இயற்கை மற்றும்
சமூகவியல் விஞ்ஞானத் துறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் இவர்கள் பெண்ணியம் தொடர்பான முன்கூட்டிய அறிவைக் கொண்டிருக்கவில்லை
போலும். நான் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம், இயற்கை விஞ்ஞானத்தைச் சேர்ந்த பலர்
பெண்ணியத்தை ஆண்களுக்கெதிரான ஒரு அரசியல் தத்துவமாகக் கருதியமையாகும். அச் சமயம்
அவர்களது முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த இவ்வறிஞர்கள் இவ்வாறு ஏன்
கருதியிருந்தார்கள் என்பதை மீட்டிப் பார்க்கத் தூண்டியது அக்கலந்துரையாடல்.

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார
உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம்
இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார
உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய
நடத்தை விதித்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின்” (பக்கம்.7) சுகாதார
உத்தியோகத்தர்களை தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு செய்வதை
உற்சாகப்படுத்தாமலிருக்கும் அதேவேளை, “புவியியல்ரீதியான சுகாதார
உத்தியோகத்தர்களின் சமமற்ற விநியோகத்தை கருத்திற்கொண்டு அவர்களை
வசதிவாய்ப்புகள் குறைவான பிரதேசங்களில் தக்கவைப்பதற்கான ஆதரவை
வழங்க வேண்டும்” (பக்கம்.8).

எமது நல்வாழ்வுக்கான சுமை: வசைகளின் கதையாடல்களில் வர்க்கம்

தற்போதைய காலகட்டத்தில் எந்த போராட்டமானாலும் கொடூரமான
அடக்குமுறையையும் அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீதான
திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் ஏனைய உறுப்பினர்களை
செயற்படுவதினின்றும் தடுப்பதற்கான பயத்தை ஏற்படுத்தும்
உத்திகளுடனேயும் தான் முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சில
வேளைகளில் இதற்கான பலமான ஆயுதமானது உளம்சார்ந்ததாக
இருக்கக்கூடும்; இப்பொருளாதார நெருக்கடி காலங்களில் அதனை சமாளித்து,
இன்னும் அதனை எதிர்த்துப் போராடுவோரிடமிருந்து நெருக்கடியால்
பிழைக்க முடியாதோரை பிரிக்கும் உத்தி. இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்குமிடையில் ஆழமான குழிகளை தோண்டி
இல்லாதவர்களின் இழப்பில் இருப்பவர்களை நோக்கிய பலமான ஈடுபாட்டை
செலுத்துவதன் ஊடாக அரசாங்கம் தனக்கான அணியை தேர்வு
செய்துள்ளதாக கருதலாம். இந்நடவடிக்கை நீதிக்கான போராட்டத்தில்
கூட்டாகவும் வலுவாகவும் நிற்கும் தொழிற்சங்கங்கள், மாணவ மற்றும்
சிவில் அமைப்புகள் போன்ற அமைப்புகளின் மூலங்களை மௌனிக்கச்
செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.

‘எனது எதிர்பார்ப்பு தேவையானது, ஆனால் அது மட்டும் போதாது’
பெண்ணியத்தை பல்கலைக்கழகத்தில் கற்றலும் கற்பித்தலும்

நவீன பல்கலைக்கழக கல்வியானது பிரித்தானியரால் 1921ஆம் ஆண்டு
சிலோன் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்டது,
இதுவே பின்னர் பொது பல்கலைக்கழக அமைப்பாக விருத்தியடைந்ததோடு
கல்வியியலாளார்களும் ஆய்வாளர்களும் உலகளாவிய கல்வியை பெறும்
இடமாக மாறியது. 1947இலேயே முதலாவது பல்கலைக்கழகமான சிலோன்
பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பின்னர், 1972ஆம் ஆண்டின் 1ஆம்
இலக்க சிலோன் பல்கலைக்கழக சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு
காலனித்துவ, ஆணாதிக்க பெறுமானங்கள் பல்கலைக்கழக
பாடத்திட்டங்களில் வேரூன்றியதோடு நிர்வாக சட்டகத்திலும் ஊடுருவின.

ஒடுக்குதலும் எதிர்த்தலும் மற்றும் பல்கலைக்கழகமும்

பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கும் அறிவு உற்பத்திக்குமான திறந்த
தளங்களாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவை சுதந்திரம் மற்றும்
ஜனநாயகத்தின் அரண்களாக தொழிற்பட வேண்டியவையாக
கொள்ளப்படுகின்றன. இருப்பினும் யதார்த்தத்தில் பல்கலைக்கழகங்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் தமக்குள்ளேயும் இடையேயும்
அதிகாரப்படிநிலைகளை கொண்டியங்கும் அமைப்புகளாக காணப்படுகின்றன.

எதிர்க்கட்சியிலிருந்து மாற்றுத்தீர்வுக்கு ‘அரகலய’வின் இயலாற்றலும் அதன்போக்கும்

நான் இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது ‘போராட்டம்’ அல்லது
‘கிளர்ச்சி’ என‌ (தவறாக) மொழிபெயர்க்கப்படும் ‘அரகலய’வானது,
‘ஜனநாயகவாதி’ என்றும் ‘தாராளவாதி’ என்றும் கூறிக்கொண்டிருக்கும்
ஜனாதிபதியின் நடப்பு அரசாங்கத்தால் நசுக்கப்பட்டும் பல வழிகளால்
கூறுபோடப்பட்டும் வருகின்றது. இப்பத்தியின் நோக்கமாவது, தற்போதைய
இடையாட்சிக்காலம் தொடர்பான எமது கூட்டு எதிர்காலத்துக்கு
தேவைப்படத்தக்க வகையிலான சில சிதறலான அவதானிப்புகளை
மேற்கொள்வதாகும்.

இடைவெளியைக் கவனியுங்கள்: GBV கொள்கை மற்றும் உண்மை

Mind the Gap என்ற சொற்றொடர் முதலில் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளை ரயில்
கதவுக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனிக்குமாறு
எச்சரிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையானது பயணிகளை இடைவெளியில் கவனம்
செலுத்தவும், அதில் விழுந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்
உள்ளது. இந்தக் கட்டுரையில், கொள்கைக்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள
இடைவெளியை, குறிப்பாக SGBV கொள்கைகளுக்கும் நமது பல்கலைக்கழகங்களில் உள்ள
யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை மனதில் கொள்ளுமாறு வாசகர்களைக்
கேட்டுக் கொள்கிறேன்.

இலவசக்கல்வி எனும் ஆரம்ப அபாய மணி

ஆவணி 21, 2022ல் தேசிய தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர், பெருந்தொற்று
மற்றும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
பல்கலைக்கழக நிர்வாகத்தரப்பில் மாணவர்களை மீண்டும்
பல்கலைக்கழகங்களுக்குள் எடுப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக்
கூறப்படுவதாகவும் அதுவரை நிகழ்நிலை கற்கை முறைகளை இடைக்கால
தீர்வாக முன்கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்வதர்கான தொலைத்தொடர்பு கட்டணங்கள் தொடர்பில்
மாணவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தொலைத்தொடர்பு
நிறுவனங்களுடன் சமிக்ஞை அலைகளை பலப்படுத்தும்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதுவரை மாணவர்கள்
சமிக்ஞை கிடைக்கக்கூடிய இடங்களில் நிகழ்நிலை கற்கைகளை
மேற்கொள்ளும்படியும் வேண்டினார்.

போராட்டத்தை நசுக்குதல்: கல்வி மற்றும் சமூக வகுப்பு மீதான
கலந்துரையாடல்

போராட்டக்காரர்கள் ராஜபக்ஷாக்களை அவர்களின் அதிகாரம், பதவி,
தலைமைப் பொறுப்பு என அத்தனையிலும் இருந்து பதவிறங்கச் செய்யும்
வகையில் ராஜபக்ஷ ஆட்சியை முறியடித்திருக்கின்றார்கள். இச்சர்வாதிகார
வீழ்ச்சியின் பிற்பாடு, ராஜபக்ஷக்களின் கைப்பாவையாக இருக்கும் ரணில்
விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஒரு உடைந்த
பெரும்பான்மையோடு பதவியில் அமர்ந்திருக்கின்றார். மக்களின்
ஆணையின்றி பதவியை ஏற்று தன்னை ஜனாதிபதியாக வரிந்திருக்கும்
ரணில் விக்ரமசிங்க, தான் பதவிக்கு வருவதற்கான மூல காரணமான ‘அரகல’
போராட்டத்தை நசுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர்
பதவியேற்று சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே, ஆர்ப்பாட்டக்காரர்கள்
கோட்டா கோ கம (GGG) தளத்தை கலைக்கும் நோக்கில் இருந்தபோதே,
அதிகாலை வேளையொன்றில் ராணுவத்தினரை ஏவி விட்டதோடு அவர்கள்
பெண்கள் மற்றும் வலது குறைந்தோர் உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களை
தாக்கியுமுள்ளனர்.

கல்வியும் சுகாதார சேவையும் எதிர்கொள்ளும் நெருக்கடி: ஏன் சர்வதேச
நாணய நிதியம் (IMF) ஒரு தீர்வல்ல‌

மக்கள் மிகத்தீவிரமாக அரசாங்க மாற்றத்தை வேண்டுகின்றார்கள் என்பதற்கு
ஜூலை 9ல் நடைபெற்ற பேரணியும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும்
சாட்சியங்களாக இருக்கின்றன. நாம் அரசாங்கத்தின் பங்காளர்களாக
இருப்பதோடு, அதிகாரத்தை துஷ்பிரயோகிப்பதை விடுத்தும் நாட்டின்
வளங்களின் சமமான பங்கீட்டுக்கும் ஜனநாயகமானதும்
உள்ளீர்க்கக்கூடியதுமான சமூகத்துக்காகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.