ஒடுக்குதலும் எதிர்த்தலும் மற்றும் பல்கலைக்கழகமும்
பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கும் அறிவு உற்பத்திக்குமான திறந்த
தளங்களாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவை சுதந்திரம் மற்றும்
ஜனநாயகத்தின் அரண்களாக தொழிற்பட வேண்டியவையாக
கொள்ளப்படுகின்றன. இருப்பினும் யதார்த்தத்தில் பல்கலைக்கழகங்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் தமக்குள்ளேயும் இடையேயும்
அதிகாரப்படிநிலைகளை கொண்டியங்கும் அமைப்புகளாக காணப்படுகின்றன.