கட்டுரை

சமூக விஞ்ஞானத்துள் நெருக்கடியா அல்லது சமூக விஞ்ஞானத்தின் நெருக்கடியா

ஒரு மாதத்திற்கு முன்னர், நான் இருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து கல்விசார் ஊழியர்கள் 2017-2021 காலப்பகுதிக்குள் வெளியிட்ட ஆய்வுகளின் பட்டியலைக்கோரி ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இத்தகவல்கள் கணக்காய்வு அலுவலகத்தினால் வேண்டப்பட்டிருப்பதாக அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நோக்கம் சமூக விஞ்ஞான பீடங்களின் ஆய்வு வெளியீடுகளை அளவீடு செய்வதாகும். இந்த ஆய்வுகள் எவற்றைப்பற்றியவை அல்லது இந்த ஆய்வுகளின் பங்களிப்பு என்ன போன்ற தகவல்களை விடுத்து எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே மின்னஞ்சலில் கேட்டிருந்த தகவலாகும்.

சமூக விஞ்ஞானத்துள் நெருக்கடியா அல்லது சமூக விஞ்ஞானத்தின் நெருக்கடியா Read More »

விளைவு அடிப்படையான கல்வியும் விடயத்தின் கருப் பொருளும்

இந்தக் கட்டுரையானது இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியின் தர உறுதிப்படுத்தும் செயன்முறை பற்றி இத்தொடரில் எற்கனவே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களின் தொடர்ச்சியாகும். இக்கட்டுரையில் என்னுடைய தனிப்பட்ட கற்கைப் பயிற்சி மற்றும் அனுபவங்களை மீட்டுவதன் ஊடாக நான் தொடுக்கும் முக்கிய வினாவானது “விளைவு அடிப்படையிலான கல்வி” என்ற பதத்தை நாம் எவ்வாறு கிரகித்துள்ளோம் என்பதாகும்.

விளைவு அடிப்படையான கல்வியும் விடயத்தின் கருப் பொருளும் Read More »

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனித மற்றும் சமூக விஞ்ஞானத்தின் குறை மதிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக வட்டாரமானது கடந்த 2021 ஆம் ஆண்டு மனித மற்றும் சமூக விஞ்ஞானப் பல்கலைக்கழகக் கல்வியில் 100 ஆண்டுகளை எட்டியிருந்தது. இந் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு கருத்தரங்கு ஒழுங்குசெய்யப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனித மற்றும் சமூக விஞ்ஞானத்தின் குறை மதிப்பு Read More »

கல்வியில் காலனித்துவ நீக்கமும் தர்க்க ரீதியான சிந்தனையும்

உயர் கல்வியில், குறிப்பாக வரலாறு தொடர்பாக தர்க்க ரீதியான சிந்தனையின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்துகள் ஒரு சிலவற்றை இங்கே பகிர விரும்புகின்றேன்.

கல்வியில் காலனித்துவ நீக்கமும் தர்க்க ரீதியான சிந்தனையும் Read More »

வடக்கிலே சாதியும் கல்வியும்

இன்றைய குப்பிக் கட்டுரை சாதிய‌ ஏற்றத்தாழ்வுகள் வடக்கில் இலவசக் கல்வியை எவ்வாறு சமத்துவமற்றதாக்குகின்றன‌ என்பது பற்றியது. அண்மையில் வட்டுக்கோட்டையில் ஒரு பஞ்சமர் சமூகத்தினர் (பஞ்சமர் என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான ஐந்து சாதிகளின் தொகுப்பாகும்.) சாதிய வன்முறையை எதிர்கொண்டனர்.

வடக்கிலே சாதியும் கல்வியும் Read More »

வட இலங்கையில் கற்பித்தல்: கல்வித் தரப்படுத்தலும் சமத்துவமின்மையும்

கல்விக்கான வாய்ப்பைப் பொறுத்த வரையில் இலங்கையின் முக்கிய மக்கட் தொகை மையங்களுக்கும் அதன் புறத்தே இருப்பவர்களுக்கும் சமனற்ற தன்மையே காணப்படுகின்றது. இங்கு கல்வியின் தரத்திலுள்ள வேறுபாடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதுண்டு. எனினும் கல்வி வாய்ப்பிலுள்ள வேறுபாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் அரிதானவை.

வட இலங்கையில் கற்பித்தல்: கல்வித் தரப்படுத்தலும் சமத்துவமின்மையும் Read More »

மேலாதிக்கங்களும் இனப்பல்வகைமையும்

இன-மத ரீதியில் சிறுபான்மையைச் சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகங்களில்  கொடுக்கப்படும் இடம் யாது? தமது அடையாளங்களையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டுவதற்கான பாதுகாப்பான சூழலோ, சுதந்திரமோ அவர்களுக்கு உள்ளதா?

மேலாதிக்கங்களும் இனப்பல்வகைமையும் Read More »

கல்வியில் காலனித்துவ நீக்கம்

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட சமூகங்களைப் பொறுத்த வரையில் காலனித்துவ நீக்கத்தில் பாரிய பங்கு வகிப்பது கல்வியாகும். மாறாக காலனித்துவம் உண்டாவதிலும் கல்வியின் பங்கு பெரியதாகையால் இது எதேர்ச்சியான ஒரு விடயம் அல்ல. கல்வியை மீள் வடிவமைப்பதில் காலனித்துவ நீக்கத்தை நாம் நாடுகின்றோம்.

கல்வியில் காலனித்துவ நீக்கம் Read More »

சிலருக்கு மட்டுமே கல்வி?

“என்னால் கவனம் செலுத்தவோ, தொடர்ச்சியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கவோ முடிவதில்லை. எனினும் எனது பெற்றோரோ ஆசிரியர்களோ இதனை ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை. எனது நடவடிக்கைகள் வன்முறையாக மாறும் போதே எனது பிரச்சினை இனங்காணப்பட்டது.  நான் சலித்திருந்தேன். ஒன்று திரட்டப்பட்ட எனது விரக்தி உதவிக்கான ஒரு குரலாய் வெளிவந்தது.”- லக்கி, பல்கலைக்கழக மாணவன்.

சிலருக்கு மட்டுமே கல்வி? Read More »

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும்

சிவமோகன் சுமதி எம் மத்தியில் பெரிதும் நிலவி வரும் பேசப்படா வன்முறைகளிலொன்று பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையுமாகும். எமது ஆணாதிக்கம் நிறைந்த அதிகாரத் தாபனங்களில் “பாலினம்” என்பது ஆண், பெண் என்ற இருமமாகவும், பெண்மை என்பது கீழ் நிலையாகவும் கருதப்படுகின்றது. பாலியல் வன்முறையை எதிர்கொள்ள எமது கல்வி வளாகங்களில் பாலினம், பெண்கள் மற்றும் வேறு பாலினத்தாரை ஓரங்கட்டல் போன்றவை தொடர்பான கேள்விகள் தொடுக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறையானது அசாதாரணமான ஒரு விடயமாகவும் இயல்பாகவே காணப்படும் பாலின வேறுபாடுகளால்

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும் Read More »