குப்பி டாக்: கட்டுரை

2021 மார்ச் தொடக்கம், இரு வாரங்களுக்கொருமுறை “தி ஐலன்ட்” இல் வெளியிடப்படும் “குப்பி டாக்” கட்டுரைகள், இலவசக் கல்வி, குறிப்பாக உயர்கல்வி பற்றிய செயற்பாடுகள், கலந்துரையாடல் மற்றும் சிந்தனைக்கான தர்க்கரீதியான மேடையாகக் காணப்படுகின்றன. இக் கட்டுரைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முறையே “ஈழ நாடு” மற்றும் “அனித்தா” ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன.

தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா?

உலகளாவிய அளவில் ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்திருக்கின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒக்ஸ்பாம் அறிக்கையொன்றில் (Inequality Inc. ஜனவரி 2024) உலகில் காணப்படும் 43%மான சொத்துகள் 1%மான பணக்காரர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன; பெருங்கொள்ளை நோய்க்காலத்தில் 5 மிகப்பெரும்...

Read More
கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!

கல்வி நெருக்கடியில் இருக்கின்றது. நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி போன்ற அமைப்புகளுக்கு பாரிய நிதிக் கருவூலங்களும் தான தர்மம் வழங்குகின்ற நாட்டமும் அதிகமுள்ள தம்மிக பெரேரா போன்றவர்கள் பெரும் ஆறுதலாக இருப்பார்கள். உண்மையில் உலகளாவிய ரீதியில்...

Read More
வகுப்பறையில் மௌனம் காத்தல்: ‘குறைபாட்டின்’ இயங்கியலை எதிர்த்து
நிற்றல்

வகுப்பறையில் நிலவும் மௌனத்தை நான் முதன்முதலில் கண்டுகொண்ட நிகழ்வை நான் வழமைக்கு மாறாக மிகத்தெளிவாக நினைவில் நிறுத்துகின்றேன். எமது இளங்கலை வகுப்பில் கற்பிக்கும் விரிவுரையாளார்களில் ஒருவர், ஒரு பாடத்தை முன்னதாகவே வாசிக்க வைத்தார். அதன்...

Read More
இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு

மகேந்திரன் திருவரங்கனின் "மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல் செயற்பாடு (15.01.2024)" குப்பி ஆக்கத்தில் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு விமர்சன சிந்தனையை வளார்க்கும் கூடங்களாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். உயர்கல்விக் கூடங்கள் மாணவர்கள் விமர்சன...

Read More
மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு

நாம் இன்னொரு வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இவ்வருடம் எமக்காக பொதித்து வைத்திருப்பது என்னவாக இருக்கும்? எமக்கான எதிர்பார்ப்பு எனும் ஒளியை புதிதாக ஏற்றிவைக்கும் எந்த விடயத்தையும் நாம் தற்போது காண்பதற்கில்லை. நாம் வாழும்...

Read More
இரு இலைகளும் அரும்பும்: கல்வியியலாக‌ மலையகத்தின் வரலாறு

நான் இங்கு ஒரு கவிஞரைப் பற்றி பேச விழைகின்றேன். குறிஞ்சித் தென்னவன் ஒரு தானியங்கி ஆசான். அவர் எமது பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களிலோ ஒரு எழுத்தாளராக ஆகுவதற்கு கற்கவில்லை. அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார். அவரும்...

Read More
‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ எனும் வாக்குறுதி: நம்பிக்கையற்ற சூழல்சார்
குறிப்புகளும் கோரப்படாத ஆலோசனைகளும்

நான் அமரகீர்த்தி லியனகே எழுதிய 'விஷ்வவித்யாலய யனு குமக்த? [பல்கலைக்கழகம் என்பது யாது?] எனும் நூலை வாங்குவதற்காக‌ சரசவி புத்தகசாலையின் ஒரு கிளைக்குள் பிரவேசிதபோது அங்கே ஆங்கிலத்தில் வெளியாகிய நூல்கள் மட்டுமே விற்கப்படும் என...

Read More
இலங்கை பல்கலைக்கழகங்களில் நரம்பியல்பன்முகத்தன்மை, உள்ளீர்க்கும் கல்வி மற்றும் தர உத்தரவாதம்

இந்த ஆக்கம் நரம்பியல்பன்முகத்தன்மை என்ற கருத்தாக்கத்தின் மூலம் எமது கல்வியை மேலும் உள்ளீர்க்கும் வகையில் கற்பனை செய்வதை நிகழ்த்துகின்றது. முதலில் நான் ஆட்டிசம்‍ மன இறுக்க நோயின் நிறமாலையான நரம்பியல்பன்முகத்தன்மை நிலையை குறித்து பேசிவிட்டு...

Read More
அரச பல்கலைக்கழகங்களை துண்டாடும் பாதீடு

1930க்குப் பின்னர் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிலைப்படுத்தற்கொள்கைகள் காரணமாக நாட்டின் அரசியல் பொருளாதார நிலை வேகமாக மாறி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில், பொதுவாக கல்வித்துறையும்...

Read More
கவர்ச்சிகரமான உபாத்தியாயர், சில அவதானங்கள்

பியரி போர்தோ: கவர்ச்சி என்பது சமூகக் கோட்பாட்டாளரான பியரி போர்தோவின் கருத்துப்படி ஒரு 'இயல்புநிலையாகும்'‍- ஒருவர் உலகில் தன்னை நிலைநிறுத்தும் பொருட்டு வெளிப்படுத்தும் சில பண்புக்கூறுகளாகும்.

Read More
நிதியீடு மற்றும் சமவாய்ப்புக்கான கொள்கை: உயர்கல்விக்கு கட்டணம்
மேற்கொள்ள வேண்டியோர் யார்?

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில், கல்வி தொடர்பான விவாதங்கள், அதிலும் குறிப்பாக அதிகரித்து வரும் உயர்கல்வி தொடர்பான விவாதங்கள் குழப்பகரமாக இருக்கின்றன. ஒரு வகையில், அவ்விவாதங்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களையும் உள்ளீர்க்க முடியாத நிலையில்...

Read More
ஊனமுற்ற மாணவர்களா அல்லது ஊனமுற்ற பல்கலைக்கழகங்களா?

அதுவொரு தூர்த்துப் பெருக்கப்படாத காற்றோட்டமற்ற, மின்விசிறிகளோ காற்றுப்பதனாக்கிகளோ அற்ற நடைகூடம், யாழ்ப்பாணத்தின் தாங்கொணா வெயிலில் இன்னும் கொதித்துக்கொண்டிருந்த்தது. மாற்றுத்திரனாளிகளான பல்கலைக்கழக மாணவர்கள் இதே சூழ்நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் புதிய பரீட்சை மண்டப அறையின்...

Read More
இலங்கையின் பல்மருத்துவக் கல்வியின் சவால்களை வழிசெலுத்துதல்

உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது இலவசக்கல்வியின் பிரதான கொள்கைகளிலொன்றாகும். 2020ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால், தேர்தல் விஞ்சாபனத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியை 12,000ஆல் அதிகரிக்கும் படி பல்கலைக்கழக மானியங்கள்...

Read More
உயர்கல்வி தனியார்மயமாக்கத்தினூடு பொறுப்பாண்மையை பின்பற்றுதல்

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர்கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நயோமி க்லெயினின் 'பேரழிவு தரும் முதலாளித்துவம்' ஆய்வுரையின் படி நிச்சயமற்ற, ஆற்றொணா காலங்களில் ஏற்படுத்தப்படும் சீரிய மாற்றங்கள்...

Read More
மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?

பல சமூக ஊடகங்களில் தற்போது எடுத்துரைக்கப்படும் விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் பேரா. சம்பத் அமரதுங்க அவர்களின் கருத்தாகும். அதாவது, 70 வீதமான கலைப்பட்டதாரிகளுக்கு (மானிட மற்றும் சமூகவியல் துறைகளில் பட்டம்பெற்று...

Read More
நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது

இரு வாரங்களுக்கு முன்னர், ஐக்கிய ராச்சியத்திலுள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐ.நா பேண்தகு வளார்ச்சி இலக்குகள் தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மாநாட்டின் தலைப்பு "பேண்தகு வளார்ச்சியின் சமநீதியான நிலைமாற்றம்" என்பதாகும். புதுப்பிக்கத்தக்க...

Read More
தனியார் மருத்துவக் கல்லூரிகள்: இலவசக்கல்வி மீதான அடுத்த தாக்குதலா

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு தொடரப்போகும் மாணவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டியற்ற கடக்ன் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பாடநெறிகளின் தரத்தை பேனும் நோக்கில்...

Read More
மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை

அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைப் பற்றி குப்பி குழுமம் கலந்தாலோசித்த போதுதான் இந்த ஆக்கத்திற்கான வித்து மண்ணில் பதியப்பட்டது. சீர்திருத்த பரிந்துரைகள் வெளியிடப்பட்ட உடனேயே நாங்கள் கல்வியியலாளர்கள் உட்பட ஏனையோருடனான கலந்துரையாடல்களில்...

Read More
அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை

இத்தகைய விடயமொன்றை முன்னிருத்தும் சம்பவமொன்று அன்றொருநாள் என் வகுப்பில் நடந்தது‍ "நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியுமாதலால் நீங்கள் ஏன் அந்த விடயை தெரிவு செய்தீர்கள் என்பதற்கான காரணங்களை கூறுங்கள்" என்று...

Read More
மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா?

மானிட மற்றும் சமூகவியல் கற்கைகள் முன்மைய காலங்களைக் காட்டிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்துறைகளில் பெறப்படும் பட்டங்களின் தேவைப்பாடு மற்றும் காலத்தின் பொருத்தப்பாடு என்பன சரமாரியாக கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் மிகவுமே வரையறுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் இத்துறைகளில்...

Read More
வகுப்பறையில் பால்மையும் பாலுணர்வும்

வகுப்பறையானது புலமைத்துவம், பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும் விமர்சனநோக்கை வளப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும். இத்தளமானது பன்மைத்துவமான பாலினங்களை கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் அவர்களின் பாலியல் தேர்வுகளையும் எவ்வித ஒழிவுமறைவுமின்றி சுதந்திரமான வெளிப்படுத்த வாய்ப்பான தளமாக...

Read More
கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை

கௌஷல்யா பெரேரா எழுதிய கடந்த வார குப்பி ஆக்கத்தில் அவர் அரச பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஊழியர்களை ஆட்சேர்த்தல், தக்கவைத்தல் ஆகிய விடயங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைளினால் தொழிலாளர் நலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

Read More
பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…

ஒரு வருடங்களுக்கு முன்னர் (உலக வங்கியால் வழங்கப்பட்ட கடன்களால் நிதியுதவி அளிக்கப்பட்ட) ஒரு பயிற்சிநெறியில் பட்டதாரிகளை உருவாக்குவது கார்களை உற்பத்தி செய்வது போலானது எனச் சொல்லப்பட்டது. வாங்குபவர்கள்- தொழில்வழங்குனர்கள்- அவர்கள் என்ன பெறுகின்றார்கள் என...

Read More
Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும்

கல்வியமைச்சு (MoE), தேசிய விஞ்ஞான அமைப்பு (NSF), தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஆகியன மார்ச் 31ஆம் திகதி கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரியில் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. நிகழ்வில் கலந்துகொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த...

Read More
சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டில் சமூக நலனும் இலவசக் கல்வியும்

கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பதினேழாவது ஒப்பந்தமானது அதற்கு முன்னையவற்றிலும் பார்க்க விபரீதமானதாகும். இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக அதன் வெளிக் கடனைத் தீர்க்கத் தவறிய இத் தருணத்தில் இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமை...

Read More
அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும்

குணதாஸ அமரசேகரவின் இனிமகே இஹலட (ஏணியில் மேல்நோக்கி) என்ற நூலில், கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவனான பியதாஸ, கதிர்காமத்தில் இடம்பெறும் தினசரி தேவபூஜையில் மெய்யுணர்வொன்றை அனுபவிக்கிறார். ஆரம்பத்தில் நடனக்கலைஞர்களின் துடிப்பான சந்தத்தால் ஈர்க்கப்பட்ட...

Read More
பல்கலைக்கழகங்களில் பெண் பெரும்பான்மையும் அதற்கான எதிர்காலமும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களுக்கேற்ப, அவ்வாண்டில் உள்வாங்கப்பட்ட 109,660 மாணவர்களில் 64.3 சதவீதமானோர் பெண்களாவர். பெண்கள் பெரும்பான்மையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய அனைத்துத் துறைகளிலும்...

Read More
மாணவ ஒன்றியங்களில் மேலாதிக்கமும் அடக்குமுறையும்

அண்மையில் காலி முகத்திடலில் தேசத்தின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைத்துவங்களின் கீழ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் குடிமக்களோ இவற்றிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். ஒரு வருடத்திற்கு முன் இதே இடத்தில் மக்களின் ஆவேசம், ஒற்றுமை,...

Read More
மாணவர்களைக் கொடியவர்களாக்கும் இலங்கை: கல்வித் தனியார்மயமாக்கத்திற்கானதோர் முயற்சி

தசாப்தங்கள் கணக்கான ஊழல் மற்றும் தூர நோக்கற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கை இன்று பெரும் கடன் பிரச்சினையில் சிக்குண்டுள்ளது. இவ்வக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்புவதற்காக சர்வதேச நாணய நிதியம் உட்படக் கடன் தர முன்வரும் எந்தவொரு...

Read More
தர உத்தரவாதம்ஃ நிர்ணயம்

இலங்கை துக்கத்திற்கிடமான பொருளாதார வீழ்ச்சியில் மேலும் வீழ்ந்திடுவதால், பொது நிதியிலான மாற்றங்களை நியாயப்படுத்தவும், தர உத்தரவாத அதிகரிப்பில் கவனம் செலுத்தவும் அரச பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. சில பொதுவான தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும்...

Read More
மதச்சார்பின்மை: முஸ்லிம் அமைப்பு மற்றும் சிங்கள-பௌத்த அரசியல்
டீல நுசயனெமைய னந ளுடைஎய

இந்த சிறு பகுதியானது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகுப்பறையில் எனக்குக் கிடைத்த ஒரு நினைவகத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த குறிப்பிட்ட வகுப்பறையை நான் ஒவ்வொரு முறையும்...

Read More
2022: ஜனநாயகத்தை நோக்கியதோர் திருப்புமுனை

"எமது வெறும் கைகளால் நாம் எமது சமூகத்தை வடிவமைக்கின்றோம்" -சுமதியின் "தி டயலெக்டிக்" (The Dialectic) கடந்த தசாப்தத்தில் மிகவும் கடினமானதும், அதேசமயம் பெருமை வாய்ந்ததுமான 2022 ஆம் ஆண்டு அதன் நிறைவை எட்டுகின்றது....

Read More
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியக் கல்வி

அண்மையில் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழக்த்தின் (University of Hull) முதுகலை ஆய்வுச் சமூகத்தைச் சார்ந்தோரோடு பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன். இதில் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலிருந்து இயற்கை மற்றும்...

Read More
மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய நடத்தை விதித்தொகுப்பில்...

Read More
எமது நல்வாழ்வுக்கான சுமை: வசைகளின் கதையாடல்களில் வர்க்கம்

தற்போதைய காலகட்டத்தில் எந்த போராட்டமானாலும் கொடூரமான அடக்குமுறையையும் அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் ஏனைய உறுப்பினர்களை செயற்படுவதினின்றும் தடுப்பதற்கான பயத்தை ஏற்படுத்தும் உத்திகளுடனேயும் தான் முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சில வேளைகளில்...

Read More
‘எனது எதிர்பார்ப்பு தேவையானது, ஆனால் அது மட்டும் போதாது’
பெண்ணியத்தை பல்கலைக்கழகத்தில் கற்றலும் கற்பித்தலும்

நவீன பல்கலைக்கழக கல்வியானது பிரித்தானியரால் 1921ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்டது, இதுவே பின்னர் பொது பல்கலைக்கழக அமைப்பாக விருத்தியடைந்ததோடு கல்வியியலாளார்களும் ஆய்வாளர்களும் உலகளாவிய கல்வியை பெறும் இடமாக மாறியது. 1947இலேயே...

Read More
ஒடுக்குதலும் எதிர்த்தலும் மற்றும் பல்கலைக்கழகமும்

பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கும் அறிவு உற்பத்திக்குமான திறந்த தளங்களாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அரண்களாக தொழிற்பட வேண்டியவையாக கொள்ளப்படுகின்றன. இருப்பினும் யதார்த்தத்தில் பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் தமக்குள்ளேயும் இடையேயும்...

Read More
எதிர்க்கட்சியிலிருந்து மாற்றுத்தீர்வுக்கு ‘அரகலய’வின் இயலாற்றலும் அதன்போக்கும்

நான் இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது 'போராட்டம்' அல்லது 'கிளர்ச்சி' என‌ (தவறாக) மொழிபெயர்க்கப்படும் 'அரகலய'வானது, 'ஜனநாயகவாதி' என்றும் 'தாராளவாதி' என்றும் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதியின் நடப்பு அரசாங்கத்தால் நசுக்கப்பட்டும் பல வழிகளால் கூறுபோடப்பட்டும் வருகின்றது. இப்பத்தியின்...

Read More
இடைவெளியைக் கவனியுங்கள்: GBV கொள்கை மற்றும் உண்மை

Mind the Gap என்ற சொற்றொடர் முதலில் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளை ரயில் கதவுக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனிக்குமாறு எச்சரிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையானது பயணிகளை இடைவெளியில் கவனம்...

Read More
இலவசக்கல்வி எனும் ஆரம்ப அபாய மணி

ஆவணி 21, 2022ல் தேசிய தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர், பெருந்தொற்று மற்றும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல்கலைக்கழக நிர்வாகத்தரப்பில் மாணவர்களை மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குள் எடுப்பதற்கான வாய்ப்புகள்...

Read More
போராட்டத்தை நசுக்குதல்: கல்வி மற்றும் சமூக வகுப்பு மீதான
கலந்துரையாடல்

போராட்டக்காரர்கள் ராஜபக்ஷாக்களை அவர்களின் அதிகாரம், பதவி, தலைமைப் பொறுப்பு என அத்தனையிலும் இருந்து பதவிறங்கச் செய்யும் வகையில் ராஜபக்ஷ ஆட்சியை முறியடித்திருக்கின்றார்கள். இச்சர்வாதிகார வீழ்ச்சியின் பிற்பாடு, ராஜபக்ஷக்களின் கைப்பாவையாக இருக்கும் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்...

Read More
கல்வியும் சுகாதார சேவையும் எதிர்கொள்ளும் நெருக்கடி: ஏன் சர்வதேச
நாணய நிதியம் (IMF) ஒரு தீர்வல்ல‌

மக்கள் மிகத்தீவிரமாக அரசாங்க மாற்றத்தை வேண்டுகின்றார்கள் என்பதற்கு ஜூலை 9ல் நடைபெற்ற பேரணியும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் சாட்சியங்களாக இருக்கின்றன. நாம் அரசாங்கத்தின் பங்காளர்களாக இருப்பதோடு, அதிகாரத்தை துஷ்பிரயோகிப்பதை விடுத்தும் நாட்டின் வளங்களின்...

Read More
‘அரகலயவும்’ (போராட்டமும்) ஒருமைப்பாடும் ஒரு கல்வியியலாளரிடமிருந்து சில சிந்தனைகள்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் சில விடயங்களே எதிர்பார்ப்பை ஊட்டுவனவாக இருக்கின்றன. கடந்துபோன ஆறு மாத‌ங்களில் நாம் நினைத்தும் பார்த்திராத ஒரு இருத்தலியல் நெருக்கடியை இப்போது நாம் சந்திக்கின்றோம். முரண்நகையாக இலங்கை தனது 75ஆவது சுதந்திர...

Read More
பொருளாதார நெருக்கடியில் கல்வி

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் கல்வித்துறையை பாரியளவில் பாதித்துள்ளது. முன்கல்வி மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் வரை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களென அனைவரும் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள். எமது...

Read More
GotaGoHomeமிலிருந்து #அமைப்பு மாற்றத்தை நோக்கி

GotaGoHome பல்தரப்பட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒன்றே அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். புதிய பிரதமரின் நியமனம் நமக்கு எதை உணர்த்த முடியுமாக இருக்கின்றதென்றால், இலங்கையின் சமூக, அரசியல் அமைப்புகளின் மீதான நீண்டகால மாற்றமானது ஏற்படுவதற்கு...

Read More
பல்கலைக்கழகமும் தற்போதைய நெருக்கடியும்

இலங்கையர்கள் ஊழலுக்கெதிரான தமது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது குடும்பத்தாரையும் பதவிவிலகக்கோரி வருகின்றனர். இவ்வாறான கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அதிலும் குறிப்பாக...

Read More
தற்போதைய நெருக்கடிக்கு தேவையான கல்வி

துல்லியமான வார்த்தைகளை கூற முடியாதுள்ளது, ஆனால் அதன் சாரம் இதுதான்: ஒருவர் கூட‌ எமது கல்வி குறித்து திருப்தியாக இல்லை. கல்வியென்பது சிறந்தவொரு உலகம், நாடு மற்றும் எதிர்காலத்தை கற்பனை செய்யவைக்க வேண்டும். ஆனால்...

Read More
#GoHomeGota, ‘போராட்டமும்’ முழக்கமும்

எரந்திகா த சில்வா இலங்கையின் பின்காலனித்துவ வரலாற்றின் திருப்புமுனையான நிகழ்வாக‌அமைந்த காரணத்தால் நான் #GoHomeGota எனும் சிட்டையை பாவிக்கின்றேன்.இலங்கையை ஒரு சீரழிந்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அராஜக,குறுகிய அரசாங்கமொன்றின் பஸ்டீல் சிறையை நொருக்குவதற்காகவீதிகளில் திரண்ட...

Read More
கலைப்பீடங்கள் எதை நோக்கி செல்ல வேண்டும்- ஒரு மறுமொழி
பர்ஸானா ஹனீபா

சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னர் நான் குப்பி அமர்வில் எழுதிய ஆக்கம் எவ்வாறு தற்போதைய நிலையில் கல்வித் தகுதி குறித்த சட்டகம் உட்பட தர உறுதிப்பாட்டு நியமங்கள் என்பன மானிட மற்றும் சமூகவியல் துறை...

Read More
சமூக விஞ்ஞானத்துள் நெருக்கடியா அல்லது சமூக விஞ்ஞானத்தின் நெருக்கடியா

ஒரு மாதத்திற்கு முன்னர், நான் இருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து கல்விசார் ஊழியர்கள் 2017-2021 காலப்பகுதிக்குள் வெளியிட்ட ஆய்வுகளின் பட்டியலைக்கோரி ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இத்தகவல்கள் கணக்காய்வு அலுவலகத்தினால் வேண்டப்பட்டிருப்பதாக அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நோக்கம் சமூக...

Read More
விளைவு அடிப்படையான கல்வியும் விடயத்தின் கருப் பொருளும்

இந்தக் கட்டுரையானது இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியின் தர உறுதிப்படுத்தும் செயன்முறை பற்றி இத்தொடரில் எற்கனவே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களின் தொடர்ச்சியாகும். இக்கட்டுரையில் என்னுடைய தனிப்பட்ட கற்கைப் பயிற்சி மற்றும் அனுபவங்களை மீட்டுவதன் ஊடாக...

Read More
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனித மற்றும் சமூக விஞ்ஞானத்தின் குறை மதிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக வட்டாரமானது கடந்த 2021 ஆம் ஆண்டு மனித மற்றும் சமூக விஞ்ஞானப் பல்கலைக்கழகக் கல்வியில் 100 ஆண்டுகளை எட்டியிருந்தது. இந் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக மனித மற்றும் சமூக விஞ்ஞானக்...

Read More
கல்வியில் காலனித்துவ நீக்கமும் தர்க்க ரீதியான சிந்தனையும்

உயர் கல்வியில், குறிப்பாக வரலாறு தொடர்பாக தர்க்க ரீதியான சிந்தனையின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்துகள் ஒரு சிலவற்றை இங்கே பகிர விரும்புகின்றேன்.

Read More
வடக்கிலே சாதியும் கல்வியும்

இன்றைய குப்பிக் கட்டுரை சாதிய‌ ஏற்றத்தாழ்வுகள் வடக்கில் இலவசக் கல்வியை எவ்வாறு சமத்துவமற்றதாக்குகின்றன‌ என்பது பற்றியது. அண்மையில் வட்டுக்கோட்டையில் ஒரு பஞ்சமர் சமூகத்தினர் (பஞ்சமர் என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான ஐந்து சாதிகளின்...

Read More
வட இலங்கையில் கற்பித்தல்: கல்வித் தரப்படுத்தலும் சமத்துவமின்மையும்

கல்விக்கான வாய்ப்பைப் பொறுத்த வரையில் இலங்கையின் முக்கிய மக்கட் தொகை மையங்களுக்கும் அதன் புறத்தே இருப்பவர்களுக்கும் சமனற்ற தன்மையே காணப்படுகின்றது. இங்கு கல்வியின் தரத்திலுள்ள வேறுபாடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதுண்டு. எனினும் கல்வி வாய்ப்பிலுள்ள...

Read More
மேலாதிக்கங்களும் இனப்பல்வகைமையும்

இன-மத ரீதியில் சிறுபான்மையைச் சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகங்களில்  கொடுக்கப்படும் இடம் யாது? தமது அடையாளங்களையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டுவதற்கான பாதுகாப்பான சூழலோ, சுதந்திரமோ அவர்களுக்கு உள்ளதா?

Read More
கல்வியில் காலனித்துவ நீக்கம்

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட சமூகங்களைப் பொறுத்த வரையில் காலனித்துவ நீக்கத்தில் பாரிய பங்கு வகிப்பது கல்வியாகும். மாறாக காலனித்துவம் உண்டாவதிலும் கல்வியின் பங்கு பெரியதாகையால் இது எதேர்ச்சியான ஒரு விடயம் அல்ல. கல்வியை மீள் வடிவமைப்பதில்...

Read More
சிலருக்கு மட்டுமே கல்வி?

"என்னால் கவனம் செலுத்தவோ, தொடர்ச்சியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கவோ முடிவதில்லை. எனினும் எனது பெற்றோரோ ஆசிரியர்களோ இதனை ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை. எனது நடவடிக்கைகள் வன்முறையாக மாறும் போதே எனது பிரச்சினை இனங்காணப்பட்டது.  நான்...

Read More
பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும்

சிவமோகன் சுமதி எம் மத்தியில் பெரிதும் நிலவி வரும் பேசப்படா வன்முறைகளிலொன்று பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையுமாகும். எமது ஆணாதிக்கம் நிறைந்த அதிகாரத் தாபனங்களில் “பாலினம்” என்பது ஆண், பெண் என்ற இருமமாகவும், பெண்மை...

Read More
கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும்

அரச பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் அல்லது கலைப்பீடங்கள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபடாதுள்ளன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். நாம் எத்தனை ஆய்வுகளில் ஈடுபடுகின்றோம்? அதன் தரம் என்ன? விஞ்ஞானப்...

Read More
இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும்

இலங்கையில் உயர் கல்வியின் மேம்பாடானது மிகவும் காலதாமதமாக்கப்பட்ட விடயம் என்பது சகலரும் அறிந்ததே. எனினும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வெறும் படிவம் நிரப்பும் கட்டமைப்புக்குள் வரையறுத்து, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குட்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை...

Read More
கல்வியின் இராணுவமயமாக்கலும் “நெறிப்படுத்தலின்” வியாபாரமும்

தற்சமயம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களின் பிரதான அரசியல் உந்துசக்தியாக இருந்தது சமுதாயத்தை "நெறிப்படுத்துவது” ஆகும். மக்கள் பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தமைக்குப் பின்னால் நெறிப்படுத்தப்பட்ட சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

Read More
இலவசக் கல்விக்குச் சார்பாக…..

ஷாமலா குமார் எமது நாடானது கட்டியெழுப்பப்பட்டு, தற்போது நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு அதன் சட்டம், பொருளாதாரம், மற்றும் பொது நிறுவனங்களில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் திறவுகோலாக இருப்பது கல்வி....

Read More
அவசர நிலைகளும் புதிய வெளிப்பாடுகளும்: கல்வியில் ஜனநாயகம்

சிவமோகன் சுமதி உலகளாவிய ரீதியிலான கோவிட் நோய்த்தொற்று நிலைமைக்கு மத்தியில் அரை ஆண்டு நிறைவை எமது “குப்பி டாக்” எட்டுகின்றது. கடந்த சில மாதங்களில் கோவிட் நெருக்கடியில் எமது நாடு சிக்குண்டதையும் எமது பொருளாதாரம்...

Read More
தர்க்க ரீதியான சிந்தனையும் பல்கலைக்கழகக் கல்வியின் “மதிப்பும்”

ஹர்ஷன ரம்புக்வெல்ல தர்க்க ரீதியான சிந்தனை என்ற பதத்தைப் பொது மற்றும் உயர் கல்வியில் தற்போது பரவலாகக் காணலாம். கல்வி தொடர்பான கொள்கை அறிக்கைகளில் அதன் பயன்பாடு அதிகம். கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவோர்...

Read More
நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான‌ போராட்டம்

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டமானது மாணவர்கள் தமது கல்வி, அதன் வகிபங்கு, நோக்கங்கள், தாம் பயிலுகின்ற‌ துறை பற்றி விளங்கிக்கொள்ளுவதிலே தாக்கம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தின் மூலமாக (ஆதிக்கமான) கருத்தியலின் இயல்பாக்கமும், சமூகமயமாக்கமும் நிகழும் அதேவேளை, பாடத்திட்டமானது அதிகாரங்களுக்கு...

Read More
ஆங்கிலம் என்ற கேள்வி

நிகொலா பெரேரா வழக்கமான கருத்து: பொதுக் கல்வியானது தோற்றுவிட்டது பெரும்பாலான கலைப் பட்டதாரிகள் வேலையின்றிக் காணப்படுவதற்கான காரணம் அவர்களது ஆங்கிலப் புலமைக் குறைபாடே எனக் கருதுகிறது தனியார் துறை. கலை மற்றும் மனிதநேயப் பட்டமானது...

Read More
பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும்

ரம்யா குமார் பல்கலைக்கழகங்களில் “வன்முறை” எனக் கூறியதும் இயல்பாகவே எமது கலந்துரையாடல்கள் பகிடிவதையின் பால் திரும்பிவிடுகின்றன. சில சமயங்களில் வழக்கமான நடைமுறைகளையோ அதிகாரத்தையோ பின்பற்றாத துணைவேந்தரோ கல்வியாளரோ திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாகப்...

Read More
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம்

கெளஷல்யா ஹேரத் இலங்கையில் உயர் கல்வி மீதான அண்மைக்கால சமூக-அரசியல் வாதங்கள் சந்தைக்கான மனித மூலதனத்தை வழங்கும் புதிய-தாராளவாத நிறுவனங்களாக எமது பல்கலைக்கழங்கள் நோக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. (உலக) பொருளாதாரத்துக்குப் பங்களிக்ககூடிய, பொருத்தமான ஆற்றல்கள், அறிவு,...

Read More
உயர் கல்வியில் “தரம்”

கெளஷல்யா பெரேரா எமது பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மீதான பிரதான முறைப்பாடு அவர்களது “வேலைக்கமர்த்த முடியாத தன்மை” ஆகவுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் உலக வங்கியும் வேலையின்மையைக் குறைந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் புலமைக்குச்...

Read More
“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?”

ஹஸினி லேகம்வாசம் கலைப்பிரிவைச் சார்ந்தோர் தற்போது மேற்கூறிய கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. கேள்விக்கான விடைகளோ எதுவித தெளிவையும் தருவதாக இல்லை. ஆகவே முதலாவதாக இந்தக் கேள்வியையும் அதனை உருவாக்கியுள்ள தவறான கருத்துகள்...

Read More
இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி

ஃபர்ஸானா ஹனிஃபா Image: கொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்  அண்மையில் தேசிய தணிக்கைக் காரியாலயத்தினால் உயர் கல்வி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கலைப்பிரிவுக் கல்வியையும் பட்டதாரிகளின் வேலையின்மையையும் தொடுக்க முற்பட்டது. எமது இன்றைய பகுதி...

Read More
கல்வியும் நல்லிணக்கமும்

அனுஷ்கா கஹந்தகமகே தசாப்தங்களாக நீடித்த யுத்தம், ஆயிரக்கணக்கான இளம் உயிர்களைக் காவுகொண்ட இரு இளைஞர் கலகங்களுக்கு (1971, 1988-89) மத்தியில் இச்சிறு தீவு ஒரு இரத்த ஆற்றையே கண்டுவிட்டது. யுத்தம் முடிந்தபோதும் வன்முறையானது கிறிஸ்தவர்கள்...

Read More
பரவலாகும் பகிடிவதை

ஷாமலா குமார் பகிடிவதை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் பற்றிப் பகிரங்கமாகப் பேசிய மாணவன், வேறு தவறான உள் நோக்கங்களைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான். பகிடிவதை இடம்பெறுவதைக் கண்டு அதை எதிர்த்து கருத்து...

Read More
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு வழுக்கள்

இலங்கையின் கல்வி முறையானது காலங்கடந்தது என இழிவுபடுத்தப்படுவது வழக்கம். இருப்பினும் இலவசப் பொதுக் கல்விக்கான கேள்விக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது.

Read More
கல்வி முன்னிட்ட விவாதத்துக்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்

“இலவசக் கல்வி என்பது வானத்தில் இருக்கும் ஒன்றல்ல. என்னால் அதைத் தொட முடிகிறது, என்னால் அதை உணர முடிகிறது.” அடிப்படை எழுத்தாற்றல் வகுப்பொன்றில் ஒரு மாணவி எழுதிய மேற்கண்ட வரிகள் என்னை எல்லையில்லா ஆச்சரியத்திற்குட்படுத்தின....

Read More