Author name: Hasini Lecamwasam

உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கண்டுகொள்ளப்படவேண்டிய விடயங்கள்

முன்வைப்போர்: உதறி அபேயசிங்கே, பர்சனா  ஹனிஃபா, அகிலன் கதிர்காமர், அனுஷ்கா கஹந்தகம, ரம்யா குமார், ஷாம்லா குமார், ஹாஸினி லேகம்வாசம், கௌசல்யா பெரேரா, அருணி சமரக்கூன், சிவமோகன் சுமதி, மகேந்திரன் திருவரங்கன் பல தசாப்தங்களாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாயதன் காரணமாக, எமது கல்விமுறைமை முற்றிலும் உடைந்துபோய், மீள் கட்டியெழுப்பப்படவேண்டிய நிலையிலுள்ளது. அரச ஆரம்ப சிறுவர் கல்வி கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லாத நிலமை, பலவருடங்களாக கவனிக்கப்படாத தொழில்பயிற்சி, பொதுக் கல்வி முகங்கொடுக்கும் பாரிய பிரச்சனைகள் (பரந்துபட்டுகாணப்படும் பணியாளரின்மை, […]

உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கண்டுகொள்ளப்படவேண்டிய விடயங்கள் Read More »

மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி

அகிலன் கதிர்காமர் இலங்கையில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கு சமமாகவுள்ளது என்பது மலையகத்துக்கு பொருந்தாது. ஏனெனில் சுதந்திரத்திற்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அவர்களுக்கு ஒரு சமூகமாகவே இலவசக்கல்வி மறுக்கப்பட்டது என ஒரு தொழில்ச் சங்கவாதி அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக தமிழ் ஆசிரியர்களுடலான கலந்துரையாடலில் கூறினார். கன்னங்கராவின் 1944 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் தொடங்கி இலவசக்கல்வியின் எட்டு தசாப்த மரபுப் புகழை பற்றி நாம் பெருமை கொண்டாலும்கூட, 1980 கள் வரை அரச பாடசாலைகளற்று காணப்பட்ட தப்பிக்கமுடியாத

மலையகத்தில் வாக்குரிமை பறிப்பு, நிலஉரிமையின்மை, கல்வி Read More »

உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா?

ஷாமலா குமார் டிசம்பர் 2024 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC) வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பை அதிகரிப்பதன் மூலம், தனியார் துறை உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசு நிதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்ததாக Sunday Observer செய்தி வெளியிட்டது. 225 சர்வதேச மாணவர்களுடன், அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளதால், பல்கலைக்கழகம் அதன் இலக்கை அடையும் பாதையில் இருப்பதாக VC கூறினார். அவரது கருத்துக்கள், அரச நிதி சார்பிலிருந்து பொது பல்கலைக்கழகங்களை விலகச் செய்யும் தேசியத் திட்டங்களையும்

உயர் கல்விக்கான பொது நிதி: பற்றாக்குறையை நிரப்ப தனியார் நிதியை நாடுகிறதா? Read More »

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவத்தைபற்றி கல்வியால் என்ன செய்யலாம்?

ஹாசினி லேகாம்வசம் சரித டில்ஷானின் தற்கொலை காரணமாக, மீண்டும் ஒருமுறை அரச பல்கலைக்கழகங்கள் பகிடிவதை பற்றிய பிரச்சனை சார்பாக மக்களின் கவனத்தில் வந்துள்ளது. 1998 ம் ஆண்டு 20 ம் இலக்க கல்வி நிறுவனக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை வடிவங்களின் தடை சட்டத்தின் படியும் 1994 ம் ஆண்டு 22 ம் இலக்க துன்புறுத்தல் மற்றும் ஏனைய கொடுமையான, மனிதத்தன்மையற்ற, அல்லது இழிவுபடுத்துகின்ற நடத்தல் அல்லது தண்டனை சட்டத்தின் படியும் எந்த ஒரு பகிடிவதை நடவடிக்கையும்

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவத்தைபற்றி கல்வியால் என்ன செய்யலாம்? Read More »

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல 

கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய சக ஊழியர் ஒருவர், “இலங்கையில் ஆராய்ச்சி கலாசாரம் இல்லை” என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். ஆனால், ஆராய்ச்சி கலாசாரம் இருப்பதன் அர்த்தம் என்ன? அதிகளவு நிதி போதுமானதா? ஆக்கத்திறன்மிக்க மற்றும் அர்த்தமுள்ள ஆராய்ச்சி கலாசாரத்தை நோக்கிச் செயற்படுவதிலிருந்து வேறு என்ன விடயங்கள் நம்மைத் தடுத்தது? அரசு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி கலாசாரத்தை

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல  Read More »

கல்வியில் காலனித்துவ நீக்கம்

ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை 21ம் திகதி அபுதாபியில் காலம்சென்றதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். அனைத்துமே நம்பிக்கையற்று காணப்படட ஒரு நேரத்தில், வினாவலுக்கும் எதிர்ப்புக்குமான ஒரு குரலை கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தும் மற்றும் அதன் ஆதரவாளர்களிலிருந்தும் சிலர்  ஒருமித்த அந்த வேளையிலே, ஹர்ஷண குப்பி குழுவினை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராவார். ஆர்வமும் அர்ப்பணிப்புமுள்ள நடிகராகவும் சிந்திக்கும் கல்வியாளருமாக இருந்த  அவர் குப்பிக்கும் கல்வியல் செயற்பாட்டு சமூகத்துக்கும் செய்த

கல்வியில் காலனித்துவ நீக்கம் Read More »

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல்

செல்வராஜா விஷ்விகா “உள்ளூர் மக்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே இங்கு வேலை செய்ய இந்தியாவிலிருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர்” பதினாறு வயதுடையவராக க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுகின்ற போது இந்த வார்த்தைகளின் தீவிரத்தை நான் ஒருபோதும் உணரவில்லை. நமது நாட்டின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு சிந்தனையாக முன்வைக்கப்பட்ட போது, ஒரு முழு சமூகமும் அவர்களின் போராட்டக் கதையும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை என்னால் உணர முடியவில்லை. அத்துடன், முடிவற்ற

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல் Read More »

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு

அனுஷ்க கஹந்தகமே “தனியார் படிப்பகங்கள், தனியார் பாடசாலைகள், கட்டணத்துக்கு பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவங்கள் என அனைத்துமே சமூக வர்க்கங்களிடையே பெரிதாகும் ஏற்றத்தாழ்வுகளில் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன.” மெய்யாகவே கல்வி இலவசமாக/ சுதந்திரமாக இருக்கவேண்டும். தனியார்மயப்படுத்தலில் இருந்து சுதந்திரமாக இருப்பது மட்டுமன்றி ஒடுக்குமுறை கட்டமைப்புக்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை வலுவாக்குவதாக இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை செய்ய, நடப்புநிலையை சாவால்ப்படுத்த, முக்கியமாக தம்மை ஒடுக்குமுறை செய்யும் கடடமைப்புக்களில் இருந்து விடுவிக்க தேவையான அறிவையும் உபகாரங்களையும் கல்வி வழங்க வேண்டும்.

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு Read More »

அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை

ரம்யா குமார் எமது பல்கலைக்கழகங்கள் அதிகாரப்  படிநிலைகளை கொண்டவையாகக்  காணப்படுகின்றன. ஏற்கனவே வர்க்க, இன, பால்நிலை ரீதியாக காணப்படும் அதிகார சமச்சீரின்மையை மீள்வலுவூட்டுவதோடு, உயர் நிலையில் இருப்பவருக்கு மிகுதியான அதிகாரத்தை வழங்குமிவை உத்தியோகபூர்வ உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வெளிப்படுகின்றன. மருத்துவ துறையில், பேராசிரியர்களை விரிவுரையாளர்களுக்கு மேலாகவும், மருத்துவமனை சார்ந்தோரை மருத்துவமனை சாராதோருக்கு மேலாகவும், விசேட மருத்துவர்களை பொது வைத்தியர்களுக்கு மேலாகவும், இப்படி பல வகைகளில் ஒருவருக்கு மேல் இன்னொருவரை வைத்து செயல்படும் ஒரு “மறை திட்டம்” இளநிலை மாணவர்களை

அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை Read More »

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி

அருணி சமரக்கோன் “வுல்ஸ்டன்கிராப்டின் A Vindication of the Rights of Woman (1972) ஆனது, கல்வியின் மூலம் பெண்களின் அதிகாரமூட்டலை ஆதரிக்கின்றது. இது பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பாங்கான பிம்பங்களுக்கு எதிரான அவரது போராட்டத்தை பிரதிபலிக்கின்றது” நிக்கோலா பெரேராவின் “பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் (SGBV) கையாள்தல்” (18/02/2025) என்ற அண்மைய குப்பி கட்டுரையில், இலங்கையின் உயர்கல்வித்துறையில் பெண்கள் மற்றும் LGBTQ+ சமூகம் உட்பட ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நிறுவனக்

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி Read More »