Author name: Hasini Lecamwasam

உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கண்டுகொள்ளப்படவேண்டிய விடயங்கள்

முன்வைப்போர்: உதறி அபேயசிங்கே, பர்சனா  ஹனிஃபா, அகிலன் கதிர்காமர், அனுஷ்கா கஹந்தகம, ரம்யா குமார், ஷாம்லா குமார், ஹாஸினி லேகம்வாசம், கௌசல்யா பெரேரா, அருணி சமரக்கூன், சிவமோகன் சுமதி, மகேந்திரன் திருவரங்கன் பல தசாப்தங்களாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாயதன் காரணமாக, எமது கல்விமுறைமை முற்றிலும் உடைந்துபோய், மீள் கட்டியெழுப்பப்படவேண்டிய நிலையிலுள்ளது. அரச ஆரம்ப சிறுவர் கல்வி கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லாத நிலமை, பலவருடங்களாக கவனிக்கப்படாத தொழில்பயிற்சி, பொதுக் கல்வி முகங்கொடுக்கும் பாரிய பிரச்சனைகள் (பரந்துபட்டுகாணப்படும் பணியாளரின்மை, […]

உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கண்டுகொள்ளப்படவேண்டிய விடயங்கள் Read More »

கல்வியில் காலனித்துவ நீக்கம்

ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை 21ம் திகதி அபுதாபியில் காலம்சென்றதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். அனைத்துமே நம்பிக்கையற்று காணப்படட ஒரு நேரத்தில், வினாவலுக்கும் எதிர்ப்புக்குமான ஒரு குரலை கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தும் மற்றும் அதன் ஆதரவாளர்களிலிருந்தும் சிலர்  ஒருமித்த அந்த வேளையிலே, ஹர்ஷண குப்பி குழுவினை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராவார். ஆர்வமும் அர்ப்பணிப்புமுள்ள நடிகராகவும் சிந்திக்கும் கல்வியாளருமாக இருந்த  அவர் குப்பிக்கும் கல்வியல் செயற்பாட்டு சமூகத்துக்கும் செய்த

கல்வியில் காலனித்துவ நீக்கம் Read More »

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல்

செல்வராஜா விஷ்விகா “உள்ளூர் மக்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே இங்கு வேலை செய்ய இந்தியாவிலிருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர்” பதினாறு வயதுடையவராக க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுகின்ற போது இந்த வார்த்தைகளின் தீவிரத்தை நான் ஒருபோதும் உணரவில்லை. நமது நாட்டின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு சிந்தனையாக முன்வைக்கப்பட்ட போது, ஒரு முழு சமூகமும் அவர்களின் போராட்டக் கதையும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை என்னால் உணர முடியவில்லை. அத்துடன், முடிவற்ற

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல் Read More »

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு

அனுஷ்க கஹந்தகமே “தனியார் படிப்பகங்கள், தனியார் பாடசாலைகள், கட்டணத்துக்கு பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவங்கள் என அனைத்துமே சமூக வர்க்கங்களிடையே பெரிதாகும் ஏற்றத்தாழ்வுகளில் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன.” மெய்யாகவே கல்வி இலவசமாக/ சுதந்திரமாக இருக்கவேண்டும். தனியார்மயப்படுத்தலில் இருந்து சுதந்திரமாக இருப்பது மட்டுமன்றி ஒடுக்குமுறை கட்டமைப்புக்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை வலுவாக்குவதாக இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை செய்ய, நடப்புநிலையை சாவால்ப்படுத்த, முக்கியமாக தம்மை ஒடுக்குமுறை செய்யும் கடடமைப்புக்களில் இருந்து விடுவிக்க தேவையான அறிவையும் உபகாரங்களையும் கல்வி வழங்க வேண்டும்.

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு Read More »

அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை

ரம்யா குமார் எமது பல்கலைக்கழகங்கள் அதிகாரப்  படிநிலைகளை கொண்டவையாகக்  காணப்படுகின்றன. ஏற்கனவே வர்க்க, இன, பால்நிலை ரீதியாக காணப்படும் அதிகார சமச்சீரின்மையை மீள்வலுவூட்டுவதோடு, உயர் நிலையில் இருப்பவருக்கு மிகுதியான அதிகாரத்தை வழங்குமிவை உத்தியோகபூர்வ உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வெளிப்படுகின்றன. மருத்துவ துறையில், பேராசிரியர்களை விரிவுரையாளர்களுக்கு மேலாகவும், மருத்துவமனை சார்ந்தோரை மருத்துவமனை சாராதோருக்கு மேலாகவும், விசேட மருத்துவர்களை பொது வைத்தியர்களுக்கு மேலாகவும், இப்படி பல வகைகளில் ஒருவருக்கு மேல் இன்னொருவரை வைத்து செயல்படும் ஒரு “மறை திட்டம்” இளநிலை மாணவர்களை

அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை Read More »

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி

அருணி சமரக்கோன் “வுல்ஸ்டன்கிராப்டின் A Vindication of the Rights of Woman (1972) ஆனது, கல்வியின் மூலம் பெண்களின் அதிகாரமூட்டலை ஆதரிக்கின்றது. இது பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பாங்கான பிம்பங்களுக்கு எதிரான அவரது போராட்டத்தை பிரதிபலிக்கின்றது” நிக்கோலா பெரேராவின் “பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் (SGBV) கையாள்தல்” (18/02/2025) என்ற அண்மைய குப்பி கட்டுரையில், இலங்கையின் உயர்கல்வித்துறையில் பெண்கள் மற்றும் LGBTQ+ சமூகம் உட்பட ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நிறுவனக்

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி Read More »

பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பால்மை சார்ந்த வன்முறைகளை கையாளுதல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), பல்கலைக்கழகம்,
பல்கலைக்கழக பீடங்கள் ஆகியன பாலியல் மற்றும் பால்மை சார்ந்த
வன்முறைகளை (SGBV) கையாள்வதற்கான பல விதிமுறைகளை
கொண்டுவந்தாலும் அவை சமூகத்தில் ஊறித்திளைத்திருப்பதால்
பாதிக்கப்பட்டவர்- பிழைத்தவர்கள் நீதியை கோரும் நடவடிக்கையில்
அவர்கள் தாம் சார்ந்தவர்களால் உணர்வுபூர்வமான ஆதரவை
அனுபவிக்காமல் பெரும்பாலும் தடைகளையே முகங்கொடுக்கின்றனர்.
பொதுவாக உடனிணைபணியாளர்களும் நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களை
காப்பாற்ற களத்தில் குதிப்பது உத்தேசிக்கப்படும் குற்றவாளியின்
பொதுமதிப்பையும் அவர் சார்ந்த அமைப்பின் பொதுமதிப்பையும்
பாதுகாப்பதற்கே. பால் மற்றும் பால்மை ஏற்றத்தாழ்வுகள் ஒருவர் சார்ந்துள்ள
சமூக வகுப்பு, இனம், மதம் மற்றும் பிரதேசம் போன்ற வெவ்வேறு
காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்
ஆகிய இரு தரப்புகளின் அடையாளங்களையும் நிர்ணயிக்கும் அதேவேளை,
மிகைப்படுத்தப்பட்ட அதிகாரப்படிநிலையைக் கொண்ட பல்கலைக்கழகங்கள்
போன்ற அமைப்புகள் இவ்வாறான வன்முறைகளை இயலச்செய்வதோடு
அவற்றை மறைக்கவும் செய்கின்றன. பெண்கள் மட்டுமே இவ்வாறான
வன்முறைகளில் பாதிக்கப்படும் தரப்புகள் அல்ல என்பதோடு ஆண்கள்
மற்றும் சிறுவர்களும் வன்முறை இயக்கவியலில் பாதிக்கப்படுவதையும் நாம்
மனதிலிருத்த வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பால்மை சார்ந்த வன்முறைகளை கையாளுதல் Read More »

புரட்சிகர செயல்கள்: பவர்பாயிண்டின் மறைவு

MIT கல்லூரி மற்றும் ஜெப் பெஸோஸ் (இவரை ஆர்வமற்று
பதிவிடுகின்றேன்) ஆகியோர் பவர்பாயிண்ட்டை தமது வகுப்பறைகளில்
சந்திப்பு கூடங்களிலும் தடை செய்வதற்கு முன்னமே நான் எனது
வகுப்பறைகளில் அதன் பாவனையை தடை செய்து விட்டேன். நான்
வாழ்வதையும் வாழும் கணங்களை ரசிப்பதையும் நேசிப்பவள்; பவர்பாயிண்ட்
எனும் சாவை நோக்கும் அவக்கேடான கொடூரமான படவில்லைக் காட்சியை
நேசிப்பவள் அல்ல. அதன் நாயகன், வில்லன் அல்லது கதாநாயகன்
எல்லாமே அதீத சலிப்புத்தன்மை தான்.

புரட்சிகர செயல்கள்: பவர்பாயிண்டின் மறைவு Read More »

கல்விச் சீர்திருத்தங்கள்: உலகளாவிய தொழிற்சந்தை ஊடான ஒரு பார்வை

உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையின் கல்வி
முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது புதிய அரசாங்கத்தின் பிரதான
குறிக்கோளாகக் காணப்படுகின்றது. இந்த அறிவிப்பானது, தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் அறிக்கையில், தொழிற்கல்வியுடன் தொடர்புபடுத்தப்பட்டு முதலில்
இடம்பெற்றது. பின்னர், அக்டோபர் 2024 இல், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,
எமது கல்விமுறை உலகளாவிய கோரிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் கட்டமைக்கப்பட
வேண்டும் என்று கூறினார். பிரதமரும் கல்வி அமைச்சருமாகிய ஹரிணி அமரசூரிய
2024 டிசெம்பரில் ஆற்றிய ஓர் உரையில், தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில்
காணப்படும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை வாய்ந்த பணியாளர்களை
உருவாக்குவதே அபிவிருத்திக்கான தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தின்
பிரதான குறிக்கோள் என தெரிவித்தார். 

கல்விச் சீர்திருத்தங்கள்: உலகளாவிய தொழிற்சந்தை ஊடான ஒரு பார்வை Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »