Author name: Hasini Lecamwasam

பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பால்மை சார்ந்த வன்முறைகளை கையாளுதல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), பல்கலைக்கழகம்,
பல்கலைக்கழக பீடங்கள் ஆகியன பாலியல் மற்றும் பால்மை சார்ந்த
வன்முறைகளை (SGBV) கையாள்வதற்கான பல விதிமுறைகளை
கொண்டுவந்தாலும் அவை சமூகத்தில் ஊறித்திளைத்திருப்பதால்
பாதிக்கப்பட்டவர்- பிழைத்தவர்கள் நீதியை கோரும் நடவடிக்கையில்
அவர்கள் தாம் சார்ந்தவர்களால் உணர்வுபூர்வமான ஆதரவை
அனுபவிக்காமல் பெரும்பாலும் தடைகளையே முகங்கொடுக்கின்றனர்.
பொதுவாக உடனிணைபணியாளர்களும் நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களை
காப்பாற்ற களத்தில் குதிப்பது உத்தேசிக்கப்படும் குற்றவாளியின்
பொதுமதிப்பையும் அவர் சார்ந்த அமைப்பின் பொதுமதிப்பையும்
பாதுகாப்பதற்கே. பால் மற்றும் பால்மை ஏற்றத்தாழ்வுகள் ஒருவர் சார்ந்துள்ள
சமூக வகுப்பு, இனம், மதம் மற்றும் பிரதேசம் போன்ற வெவ்வேறு
காரணிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்
ஆகிய இரு தரப்புகளின் அடையாளங்களையும் நிர்ணயிக்கும் அதேவேளை,
மிகைப்படுத்தப்பட்ட அதிகாரப்படிநிலையைக் கொண்ட பல்கலைக்கழகங்கள்
போன்ற அமைப்புகள் இவ்வாறான வன்முறைகளை இயலச்செய்வதோடு
அவற்றை மறைக்கவும் செய்கின்றன. பெண்கள் மட்டுமே இவ்வாறான
வன்முறைகளில் பாதிக்கப்படும் தரப்புகள் அல்ல என்பதோடு ஆண்கள்
மற்றும் சிறுவர்களும் வன்முறை இயக்கவியலில் பாதிக்கப்படுவதையும் நாம்
மனதிலிருத்த வேண்டும்.

புரட்சிகர செயல்கள்: பவர்பாயிண்டின் மறைவு

MIT கல்லூரி மற்றும் ஜெப் பெஸோஸ் (இவரை ஆர்வமற்று
பதிவிடுகின்றேன்) ஆகியோர் பவர்பாயிண்ட்டை தமது வகுப்பறைகளில்
சந்திப்பு கூடங்களிலும் தடை செய்வதற்கு முன்னமே நான் எனது
வகுப்பறைகளில் அதன் பாவனையை தடை செய்து விட்டேன். நான்
வாழ்வதையும் வாழும் கணங்களை ரசிப்பதையும் நேசிப்பவள்; பவர்பாயிண்ட்
எனும் சாவை நோக்கும் அவக்கேடான கொடூரமான படவில்லைக் காட்சியை
நேசிப்பவள் அல்ல. அதன் நாயகன், வில்லன் அல்லது கதாநாயகன்
எல்லாமே அதீத சலிப்புத்தன்மை தான்.

கல்விச் சீர்திருத்தங்கள்: உலகளாவிய தொழிற்சந்தை ஊடான ஒரு பார்வை

உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையின் கல்வி
முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது புதிய அரசாங்கத்தின் பிரதான
குறிக்கோளாகக் காணப்படுகின்றது. இந்த அறிவிப்பானது, தேசிய மக்கள் சக்தியின்
தேர்தல் அறிக்கையில், தொழிற்கல்வியுடன் தொடர்புபடுத்தப்பட்டு முதலில்
இடம்பெற்றது. பின்னர், அக்டோபர் 2024 இல், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,
எமது கல்விமுறை உலகளாவிய கோரிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் கட்டமைக்கப்பட
வேண்டும் என்று கூறினார். பிரதமரும் கல்வி அமைச்சருமாகிய ஹரிணி அமரசூரிய
2024 டிசெம்பரில் ஆற்றிய ஓர் உரையில், தேசிய மற்றும் சர்வதேச தொழிற்சந்தையில்
காணப்படும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை வாய்ந்த பணியாளர்களை
உருவாக்குவதே அபிவிருத்திக்கான தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தின்
பிரதான குறிக்கோள் என தெரிவித்தார். 

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

பாராளுமன்றத்தில் நடைபெறும் கேலிக்கூத்து: கல்வி எதிர் தகைமைகள்

இலங்கையர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை மிகுந்த விருப்பத்துடன்
பாராட்டுகிறார்கள். இந்தத் தகுதிகள், தங்க நகைகள், விலையுயர்ந்த கடிகாரம்
அல்லது மதிப்புமிக்க‌ காலணிகள் போன்ற சொத்துக்களைப் போலவே,
மதிப்பீட்டிற்கான ஒப்பீடுகளுக்கு வாய்ப்பளிக்கின்றன. இது சான்றுகளின்
மூலம், மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளை
எழுப்புகிறது—ஆனால் இது ஒரு உயர் விழுமிய‌ நிலைமையில் இருந்து
நிகழ்கிறது.

அத்தியாவசியமற்ற விடயமொன்றிற்கான வழக்கு

கொழும்பில் நடைபெற்ற ABBA இசைக்குழுவின் பாராட்டு இசைவிழாவைச்
சுற்றியுள்ள சமீபத்திய நிகழ்வுகள், கலையும் ஓய்வையும் பற்றிய
நீண்டகாலக் கேள்விகளை வெளிக்கொணர்ந்தன. மக்கள் விடுதலை
முன்னணியின் சில அரசியல் பிரதிநிதிகள் அந்தக் கச்சேரியில்
பங்கேற்றதற்கான பதில்கள் அனைத்தையும் முழுமையாகப்
பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நான் கூற முடியாது என்றாலும், அதில்
ஆதிக்கமாக இருந்த விமர்சனப் பார்வை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

உலகத்தேவைகளுக்கு ஏற்ப கல்வியை மறுசீரமைத்தல்

அக்டோபர் மாத தொடக்கத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட பிற
அமைச்சுகளுடன் நடத்திய முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் ஜனாதிபதி
அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் கல்வி முறையை உலகளாவிய
தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார். இது ஒரு நீண்டகாலக் கொள்கை உறுதியின்
மீளுறுதிப்படுத்தலாகும். ஆனால், இத்தகைய முயற்சிகள் எவ்வாறு மீண்டும்
மீண்டும் தோல்வியடைந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளாத
நிலையையும் இது பிரதிபலிக்கிறது.’உலகளாவிய தேவை’ என்பதன் பொருள்,
உலகின் ஒவ்வொரு சமுதாயத்தையும் உலக வணிக மூலதன சந்தையில்
இணைக்கும் நோக்கமாகும்.

கல்வியும் எதிர்பார்ப்பு எனும் ஆடம்பரமும்

இந்த ஆக்கமானது 2024 கார்த்திகை மாதம் 9ஆம் திகதி பெண்களுக்கான
ஆய்வு நிறுவனத்தால் கல்விக்கான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய
கொள்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்
அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.