Author name: Hasini Lecamwasam

வகுப்பறையில் மௌனம் காத்தல்: ‘குறைபாட்டின்’ இயங்கியலை எதிர்த்து
நிற்றல்

வகுப்பறையில் நிலவும் மௌனத்தை நான் முதன்முதலில் கண்டுகொண்ட
நிகழ்வை நான் வழமைக்கு மாறாக மிகத்தெளிவாக நினைவில்
நிறுத்துகின்றேன். எமது இளங்கலை வகுப்பில் கற்பிக்கும்
விரிவுரையாளார்களில் ஒருவர், ஒரு பாடத்தை முன்னதாகவே வாசிக்க
வைத்தார். அதன் சில பகுதிகளை விளங்கிக் கொள்ள நாம் இரண்டு மூன்று
முறை மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது. இளங்கலை வகுப்புப் பருவத்தில்
நாங்கள் துள்ளும் மனநிலையில் இருந்த போது, அந்தப் பாடத்தை
மேலோட்டமாக வாசித்து, வகுப்பில் கலந்துரையாடலுக்கு வரும் போது
யாரோ ஒருவர் கேள்விகளை கேட்டு ஆரம்பிக்கட்டும் என்ற எதிர்பார்ப்பில்
இருந்தோம். நீங்கள் நினைப்பதைப் போல அந்த எதிர்பார்ப்பு சுக்குநூறானது.
எமது விரிவுரையாளர் கடினமான சிந்தனையை தூண்டும்படியான
கேள்வியொன்றைக் கேட்ட மாத்திரத்தில் அதற்கு பொருத்தமான ஏதாவதொரு
விடையை வழங்கும் நோக்கில் நான் உட்பட வகுப்பில் அனைவரும்
பீதியாகிப் போனோம்.

இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு

மகேந்திரன் திருவரங்கனின் “மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை
நிகழும் காலத்தில் கற்றல் செயற்பாடு (15.01.2024)” குப்பி ஆக்கத்தில்
பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு விமர்சன சிந்தனையை வளார்க்கும்
கூடங்களாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். உயர்கல்விக்
கூடங்கள் மாணவர்கள் விமர்சன நோக்கோடு சிந்திக்கும் தளத்திலிருந்து
வெறுமனே செயற்பாடுகளை பூரணப்படுத்தும் குறிப்பெட்டியாக
மாறியிருப்பதை ஆயாசத்தோடு குறிப்பிட்டார். மாணவர்களை அவர்கள் என்ன
கூற விளைகின்றார்கள் என்பதை கேட்பதை விடுத்து அவர்களின் மொழியை
சரிசெய்யும் செவ்கையையும் நான் இதே போன்றதொடு நிலையில் இருந்து
காண்கின்றேன்.

மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு

நாம் இன்னொரு வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம்.
இவ்வருடம் எமக்காக பொதித்து வைத்திருப்பது என்னவாக இருக்கும்?
எமக்கான எதிர்பார்ப்பு எனும் ஒளியை புதிதாக ஏற்றிவைக்கும் எந்த
விடயத்தையும் நாம் தற்போது காண்பதற்கில்லை. நாம் வாழும் வரலாற்று
தருணங்களை அதிகரித்து வரும் பெறுமதி சேர் வரிகள், வடகிழக்கில் நிகழும்
நில அபகரிப்புகள், மென்மேலும் சிக்கலாகியுள்ள வாழ்க்கைத்தரத்துக்கு
மத்தியில் ஊசலாடும் மலையக மக்களின் அன்றாட நிலவுகை,
பல்கலைக்கழகங்களில் நாம் காணும் ஒடுக்குமுறை கலாசாரங்கள் மற்றும்
காஸாவில் தொடுக்கப்படும் தொடர்ச்சியான யுத்தம் போன்ற விடயங்களே
அடையாளாப்படுத்துகின்றன. எனது ஆக்கத்தை மனச்சோர்வுடன்
ஆரம்பிப்பதை விடுத்து வேறு மார்க்கமில்லை.

இரு இலைகளும் அரும்பும்: கல்வியியலாக‌ மலையகத்தின் வரலாறு

நான் இங்கு ஒரு கவிஞரைப் பற்றி பேச விழைகின்றேன். குறிஞ்சித்
தென்னவன் ஒரு தானியங்கி ஆசான். அவர் எமது பாடசாலைகளிலோ
பல்கலைக்கழகங்களிலோ ஒரு எழுத்தாளராக ஆகுவதற்கு கற்கவில்லை.
அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும்
இலவசக்கல்விக்காக குரலெழுப்பினாலும் அந்த அமைப்பிலிருந்து விலத்தியே
வைக்கப்பட்டிருந்தனர். அவர் இலங்கை மண்ணில் அவரது வாழ்நாள்
காலத்தில் ஒரு கவிஞராக புகழப்படவில்லை, அவரை அறிந்திருந்தவர்களும்
தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வட்டத்துள் இருந்த வெகுசிலரே.
இப்பத்தியை நிறைவு செய்கையில் அவரின் ஒரு கவிதையின் (ஆங்கில)
மொழிபெயர்ப்பு வடிவத்தை சமர்ப்பிக்கும் நான், எமது வரலாற்றின் வாசிப்பை
சமர்ப்பிப்பதோடு அதன் மூலமான சமூக மற்றும் அரசியல் விடுதலை
தொடர்பான கூட்டுப்பார்வையொன்றையும் உருவாக்குமென
எதிர்பார்க்கின்றேன்.

‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ எனும் வாக்குறுதி: நம்பிக்கையற்ற சூழல்சார்
குறிப்புகளும் கோரப்படாத ஆலோசனைகளும்

நான் அமரகீர்த்தி லியனகே எழுதிய ‘விஷ்வவித்யாலய யனு குமக்த?
[பல்கலைக்கழகம் என்பது யாது?] எனும் நூலை வாங்குவதற்காக‌ சரசவி
புத்தகசாலையின் ஒரு கிளைக்குள் பிரவேசிதபோது அங்கே ஆங்கிலத்தில்
வெளியாகிய நூல்கள் மட்டுமே விற்கப்படும் என அறிந்தேன். வெறுமனே
நிறுவனத்தின் பேசும் கிள்ளைகளாக காணப்படும் ஊழியர்களுக்கு ஏனென்ற
காரணம் தெரியவில்லை. ஒருவகையில் இதற்கான காரணம்
தேவையில்லை. இந்நிறுவனம், சுதந்திரம் தொட்டு இயற்றப்பட்டு வரும்
ஒழுங்கற்ற மொழிக்கொள்கைகள் மட்டும் காலனித்துவ உற்பத்தியான
ஆங்கிலத்தில் இருக்கும் எதற்கும் விருப்புத்தெரிவிக்கும் தேசிய
விருப்பத்திற்கும் ஏதுவாக தன்னை தகவமைத்திருக்கின்றது.

இலங்கை பல்கலைக்கழகங்களில் நரம்பியல்பன்முகத்தன்மை, உள்ளீர்க்கும் கல்வி மற்றும் தர உத்தரவாதம்

இந்த ஆக்கம் நரம்பியல்பன்முகத்தன்மை என்ற கருத்தாக்கத்தின் மூலம்
எமது கல்வியை மேலும் உள்ளீர்க்கும் வகையில் கற்பனை செய்வதை
நிகழ்த்துகின்றது. முதலில் நான் ஆட்டிசம்‍ மன இறுக்க நோயின்
நிறமாலையான நரம்பியல்பன்முகத்தன்மை நிலையை குறித்து பேசிவிட்டு
உள்ளீர்க்கும் கல்வி தொடர்பில் இலங்கையில் காணப்படும் சவால்களையும்
அவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை பல்கலைக்கழகங்களில்
காணப்படும் தற்போதைய தர உறுதிப்பாட்டு செயன்முறையில் இருக்கும்
கட்டுப்பாடுகளையும் ஆராய்கின்றேன்.

அரச பல்கலைக்கழகங்களை துண்டாடும் பாதீடு

1930க்குப் பின்னர் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய
பொருளாதார நெருக்கடியின் விளைவாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்
நிலைப்படுத்தற்கொள்கைகள் காரணமாக நாட்டின் அரசியல் பொருளாதார
நிலை வேகமாக மாறி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில்,
பொதுவாக கல்வித்துறையும் குறிப்பாக பல்கலைக்கழகங்களும் கடும்
சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

கவர்ச்சிகரமான உபாத்தியாயர், சில அவதானங்கள்

பியரி போர்தோ: கவர்ச்சி என்பது சமூகக் கோட்பாட்டாளரான பியரி
போர்தோவின் கருத்துப்படி ஒரு ‘இயல்புநிலையாகும்’‍- ஒருவர் உலகில்
தன்னை நிலைநிறுத்தும் பொருட்டு வெளிப்படுத்தும் சில பண்புக்கூறுகளாகும்.

நிதியீடு மற்றும் சமவாய்ப்புக்கான கொள்கை: உயர்கல்விக்கு கட்டணம்
மேற்கொள்ள வேண்டியோர் யார்?

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில், கல்வி தொடர்பான விவாதங்கள்,
அதிலும் குறிப்பாக அதிகரித்து வரும் உயர்கல்வி தொடர்பான விவாதங்கள்
குழப்பகரமாக இருக்கின்றன. ஒரு வகையில், அவ்விவாதங்கள்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களையும்
உள்ளீர்க்க முடியாத நிலையில் அரச பல்கலைக்கழகங்கள் காணப்படுவதை
சுட்டிக்காட்டுவதோடு இக்காரணத்தால் தனியார் பல்கலைக்கழகங்கள்
ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவையை சுட்டி நிற்கின்றன.

ஊனமுற்ற மாணவர்களா அல்லது ஊனமுற்ற பல்கலைக்கழகங்களா?

அதுவொரு தூர்த்துப் பெருக்கப்படாத காற்றோட்டமற்ற, மின்விசிறிகளோ
காற்றுப்பதனாக்கிகளோ அற்ற நடைகூடம், யாழ்ப்பாணத்தின் தாங்கொணா
வெயிலில் இன்னும் கொதித்துக்கொண்டிருந்த்தது. மாற்றுத்திரனாளிகளான
பல்கலைக்கழக மாணவர்கள் இதே சூழ்நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின்
கலைப்பீடத்தில் புதிய பரீட்சை மண்டப அறையின் நடைகூடத்தில் பரீட்சை
எழுதிக்கொண்டிருப்பதை பார்த்தேன். இந்த இடம் சார்பான பாகுபாட்டை நான்
நான்கு வருடங்களாக கண்டு வருகின்றேன்.