Author name: Hasini Lecamwasam

அத்தியாவசியமற்ற விடயமொன்றிற்கான வழக்கு

கொழும்பில் நடைபெற்ற ABBA இசைக்குழுவின் பாராட்டு இசைவிழாவைச்
சுற்றியுள்ள சமீபத்திய நிகழ்வுகள், கலையும் ஓய்வையும் பற்றிய
நீண்டகாலக் கேள்விகளை வெளிக்கொணர்ந்தன. மக்கள் விடுதலை
முன்னணியின் சில அரசியல் பிரதிநிதிகள் அந்தக் கச்சேரியில்
பங்கேற்றதற்கான பதில்கள் அனைத்தையும் முழுமையாகப்
பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நான் கூற முடியாது என்றாலும், அதில்
ஆதிக்கமாக இருந்த விமர்சனப் பார்வை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அத்தியாவசியமற்ற விடயமொன்றிற்கான வழக்கு Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உலகத்தேவைகளுக்கு ஏற்ப கல்வியை மறுசீரமைத்தல்

அக்டோபர் மாத தொடக்கத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட பிற
அமைச்சுகளுடன் நடத்திய முன்னேற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் ஜனாதிபதி
அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் கல்வி முறையை உலகளாவிய
தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தினார். இது ஒரு நீண்டகாலக் கொள்கை உறுதியின்
மீளுறுதிப்படுத்தலாகும். ஆனால், இத்தகைய முயற்சிகள் எவ்வாறு மீண்டும்
மீண்டும் தோல்வியடைந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளாத
நிலையையும் இது பிரதிபலிக்கிறது.’உலகளாவிய தேவை’ என்பதன் பொருள்,
உலகின் ஒவ்வொரு சமுதாயத்தையும் உலக வணிக மூலதன சந்தையில்
இணைக்கும் நோக்கமாகும்.

உலகத்தேவைகளுக்கு ஏற்ப கல்வியை மறுசீரமைத்தல் Read More »

கல்வியும் எதிர்பார்ப்பு எனும் ஆடம்பரமும்

இந்த ஆக்கமானது 2024 கார்த்திகை மாதம் 9ஆம் திகதி பெண்களுக்கான
ஆய்வு நிறுவனத்தால் கல்விக்கான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய
கொள்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்
அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.

கல்வியும் எதிர்பார்ப்பு எனும் ஆடம்பரமும் Read More »

புதிய ஜனநாயகத்தில் பழைய போக்குகள்: கல்விக்கான பாதை

உண்மையில் தற்போதைய நிலை புதியது. நாடு கொண்டாட்ட மனநிலையில்
இருக்கும் சூழல். நாம் ஒரு புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை
பெற்றிருக்கின்றோம். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட அவர்களின் பாராளுமன்ற
பெரும்பான்மை பல எதிர்பார்ப்புகளை சுமந்து நிற்கின்றது. நமது
ஜனாதிபதிக்கு அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி கிடைக்காவிடினும்
இவ்வருட ஜனாதிபதித்தேர்தல் பல புதினங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேநேரத்தில் நாம் வாழும் காலசூழலும் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டியது. 2022ல் ஏற்பட்ட “அரகலய‍- போராட்டம்- ஸ்ட்ரக்ல்’ன்” பின்னர்
நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் இதுவேயாகும். இலங்கையின்
சுதந்திரத்தின் பின்னர் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சி ஆகியவற்றினதும் அவற்றின் கூட்டணிகள் பிளவுக் கட்சிகள்
என்பவற்றினதும் மேடையாகவே இலங்கையின் அரசியல் களம்
காணப்பட்டது. திசாநாயக்க அவர்களின் மூலம் நாம் புது முகம், புது சமூக
வகுப்பொன்றின் முகம், எதிர்பார்க்கப்படும் ஊழலற்ற ஆட்சி என புதிய பல
அம்சங்களை எதிர்கொள்கின்றோம்.

புதிய ஜனநாயகத்தில் பழைய போக்குகள்: கல்விக்கான பாதை Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »

இருமநிலையை தகர்த்தல்: பல்கலைக்கழகங்களில் பால்மை பல்வகைமை
மற்றும் உள்ளீர்ப்பை ஏற்றுக்கொள்ளல்

அண்மையில் எனக்கு விஷ்னு வாசு அவர்கள் எழுதிய ‘சாரி எந்தபு பிரிமி’
(சாரி அணிந்த ஆண்கள்) நூலை வாசிக்கக் கிடைத்தது. இந்நூல்
இலங்கையில் வாழும் பால்புதுமையினர் குறித்த வாழ்வனுபவங்களின் மீது
வெளிச்சத்தை பாய்ச்சியது. எமது நாட்டில் வழக்கொழுங்காக காணப்படும்
ஈரின பாலியல்பு நடத்தைக்கு இயைபாக இராத காரணத்தாலேயே தத்தமது
குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டின் சட்ட வரைபு ஆகியவற்றால்
புறக்கணிக்கப்பட்டு அமைப்புரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும்
மக்களை குறித்த நெஞ்சை பிளிகின்ற பதிவே இந்நூலாகும்.

இருமநிலையை தகர்த்தல்: பல்கலைக்கழகங்களில் பால்மை பல்வகைமை
மற்றும் உள்ளீர்ப்பை ஏற்றுக்கொள்ளல்
Read More »

நிகழ்பாலுறவாளர்கள் கவனிக்கப்பட்ட வேண்டியவர்கள்:
பல்கலைக்கழகங்களில் நேர்மறையான தளங்களை உருவாக்குதல்

நான் கொழும்பு மருத்துவ பீடத்தால் வழங்கப்படும் பால்மை மற்றும்
சுகாதாரம் குறித்தான பட்டப்பின்கற்கை நிலையத்தில் கற்பிக்கின்றேன். நான்
ஒருங்கிணைந்து வழங்கும் பால்மை பதில்வினை சார் சுகாதார அமைப்பு
தொடர்பான மாதிரி அலகில் ஏனைய விடயங்கள் உட்பட
நிகழ்பாலுறவாளார்கள் சுகாதார அமைப்பில் முகங்கொடுக்கும் அனுபவங்கள்
குறித்தும் நாங்கள் கலந்துரையாடுவோம். இந்நிலை மிகவும் மந்தமானது.
இந்த மாதிரி அலகை கற்பிக்கும் பல செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி
மிகப்பெரும்பாலான சுகாதார ஊழியர்களுக்கு பால்/ பால்மை பதில்வினை
சார்ந்த ரீதியில் சேவைகளை வழங்குவது குறித்து எந்தவிட புலனுமில்லை.

நிகழ்பாலுறவாளர்கள் கவனிக்கப்பட்ட வேண்டியவர்கள்:
பல்கலைக்கழகங்களில் நேர்மறையான தளங்களை உருவாக்குதல்
Read More »

பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்

பொதுப்பல்கலைக்கழகங்களை நாம் பொதுவாக அறிவு உற்பத்தி மற்றும்
அறிவுசார் விசாரணைக்குமான தளங்களாகவே காண்கின்றோம். எமது
அதிகமான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களின் கல்விசார்
பங்களிப்புகளை ஆய்வுசெய்வதிலும் அவை வழங்கும் கல்வியில் எவ்வாறு
மேம்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதிலுமே சுழன்றுகொண்டிருக்கும்
வேளையில், பல்கலைக்கழகங்கள் எனும் அமைப்பு மற்றும் அதன்
தொழிற்பாடு பலரின் முயற்சி மற்றும் உழைப்பால் உருவானது என்பதையும்
அத்தகையோரின் நலன்புரி மற்றும் நல்வாழ்வு தொடர்பில் போதிய அழுத்தம்
வழங்கப்படுவதில்லை என்பதுமே உண்மையாகும்.

பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்
Read More »