அரச ஆனால் பொதுப் பல்கலைக்கழகங்கள் இல்லை, தனியார் ஆனால்
பல்கலைக்கழகங்கள் இல்லை: அவ்வாறாயின் இலங்கையில் காணப்படுபவை
என்ன?
கொழும்பு பல்கலைக்கழக ஆய்விதழில் (2021, தொகுதி 2 வெளியீடு 1)
வெளிவந்த பன்டுக்க கருணாநாயக்க எழுதிய “கல்வியின் மூன்று முக்கிய
பகுதிகளும் ‘மெக்பல்கலைக்கழகங்களும்: சில விளக்கவுரைகள்” என்ற
ஆக்கமானது மெக்பலகலைக்கழகங்களின் திடீர் வளர்ச்சி குறித்தும், வெபேரிய
அணுகுமுறையான கருவியியல் பகுத்தறிவுவாத அணுகுமுறையைக்
கொண்ட அவற்றின் இலக்கான ‘இயங்குதிறனை’ நோக்கிய செயற்பாடு
குறித்தும் அலசுகின்றார்.








