Author name: Hasini Lecamwasam

‘பல்கலைக்கழகம்’ தொடர்பான விடயம்

கல்வியென்பது வெறுமனே சில தகுதிகளையும் திறன்களையும்
பெறுவதற்கான செயன்முறையாக்கப்பட்டு ‘மட்டப்படுத்தும்’ நிலைக்கு வரும்
போது ஆதாரபூர்வமாக அச்செயற்பாடு அரச பல்கலைக்கழக அமைப்பை
தகர்க்கும் செயலாக உருவெடுக்கின்றது: “நீங்கள் செய்யும் காரியங்கள்
குறைந்தளவான நேரத்திலும், குறைந்தளவான இடத்திலும், குறைந்தளவான
பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களாலும், நிகழ்நிலையிலும் கூட வழங்கப்பட
முடியுமாயின் இவற்றை பேணுவதற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றும் பௌதீக
வளங்களுக்கான நியாயப்பாடுதான் என்ன?”

‘பல்கலைக்கழகம்’ தொடர்பான விடயம் Read More »

இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்

பல தசாப்தங்களாக, குறிப்பாக திறந்த பொருளாதார முறைமை
அறிமுகப்படுத்தப்பட்ட 70’களுக்குப் பின்னரான காலத்தில் ஆங்கில மொழிக்
கற்பித்தலானது (ELT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக நாட்டில்
காணப்படுகின்றது. ஆங்கில மொழி கற்பித்தலானது உடனடி மற்றும்
காலத்துக்கு தேவையான தேவையாக பார்க்கபப்டுவதோடு பூகோளமயமாதல்
எனும் பரந்த கருத்தியலில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு
நேரடியாக இணைத்து பார்க்கப்படுகின்றது. இத்தலைப்புடன் கோர்க்கப்படும்
முக்கியத்தை விடுத்து நாட்டில் ஆங்கில மொழிக் கற்பித்தலானது பரவலாக
தோல்வியடைந்த விடயமாக கருதப்படுகின்றது. நாட்டில் ஆங்கிலக் கல்வி
தொடர்பான தோல்விக்கு, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிக்கும்
திறன்மிக்க ஆசிரியர்களின் போதாமை, செயலூக்கம் காணப்படாமை மற்றும்
மாணவர்களிடம் சரியான மனப்பான்மை காணப்படாமை ஆகிய காரணங்கள்
சுட்டிக்காட்டப்படுகின்றன.

இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்
Read More »

தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா?

உலகளாவிய அளவில் ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில்
அதிகரித்திருக்கின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒக்ஸ்பாம்
அறிக்கையொன்றில் (Inequality Inc. ஜனவரி 2024) உலகில் காணப்படும் 43%மான
சொத்துகள் 1%மான பணக்காரர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன;
பெருங்கொள்ளை நோய்க்காலத்தில் 5 மிகப்பெரும் பணக்காரர்கள் தமது
சொத்துகளை இரண்டு மடங்குகளாக பெருக்கிய அதேவேளையில் 5
பில்லியன் மக்கள் மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டார்கள்.
குறைந்துகொண்டே வருகின்ற கூலி (தொழிலாளர்களுக்கானது),
அதிகரித்துக்கொண்டே வருகின்ற வரிச்சலுகைகள் மற்றும் ஏய்ப்புகள்
(பெருநிறுவனங்களுக்கானது மற்றும் பெருநிறுவனங்களால்
மேற்கொள்ளப்படுவது), பொதுச்சேவைகள் தனியார்மயமாக்கப்படுதல் போன்ற
செயற்பாடுகளால் பெருநிறுவங்களில் குவியும் சொத்துகளாலும்
அதிகாரத்தினாலும் அவர்களின் செல்வாக்கு கொள்கைவகுப்புத் தளத்திலும்
அதிகரிப்பதாக ஒக்ஸ்பாம் கூறுகின்றது.

தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா? Read More »

கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!

கல்வி நெருக்கடியில் இருக்கின்றது. நிதிப்பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டுள்ள கல்வி போன்ற அமைப்புகளுக்கு பாரிய நிதிக்
கருவூலங்களும் தான தர்மம் வழங்குகின்ற நாட்டமும் அதிகமுள்ள தம்மிக
பெரேரா போன்றவர்கள் பெரும் ஆறுதலாக இருப்பார்கள். உண்மையில்
உலகளாவிய ரீதியில் 1970களில் இருந்தே நலன்புரி அமைப்புகளுக்கான
அரசாங்க நிதியொதுக்கீடுகள் பாரியளவில் குறைந்து வருவதோடு
இலங்கையில் 1950- 1960களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக
குறைந்திருந்த கல்விக்கான நிதியொதுக்கீடு 2022ஆம் ஆண்டு 1.2%மாக
ஆக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும்
நிகழ்ச்சிநிரல்களை நிறுத்திவிட்டு அந்த இடைவெளிகளில் மூலதன குவிப்பை
ஊக்குவிக்கும் நிகழ்ச்சிநிரல்களை முன்வைப்பதை நியாயப்படுத்தும் நிழல்
பொருளாதார உலகத்தில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருக்கும் மூலதனங்கள்
நிழல் பொருளாதாரம் மூலம் கசியவிடப்பட்டு சமூகத்தின் அடிமட்டத்தில்
இருக்கும் மக்களுக்கு வினைத்திறனான வகையில் செல்லும் வாய்ப்புகள்
இருப்பதாக முறைப்படுத்தும் விவாதங்களை முன்வைக்கின்றார்கள்.

கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!
Read More »

வகுப்பறையில் மௌனம் காத்தல்: ‘குறைபாட்டின்’ இயங்கியலை எதிர்த்து
நிற்றல்

வகுப்பறையில் நிலவும் மௌனத்தை நான் முதன்முதலில் கண்டுகொண்ட
நிகழ்வை நான் வழமைக்கு மாறாக மிகத்தெளிவாக நினைவில்
நிறுத்துகின்றேன். எமது இளங்கலை வகுப்பில் கற்பிக்கும்
விரிவுரையாளார்களில் ஒருவர், ஒரு பாடத்தை முன்னதாகவே வாசிக்க
வைத்தார். அதன் சில பகுதிகளை விளங்கிக் கொள்ள நாம் இரண்டு மூன்று
முறை மீண்டும் வாசிக்க வேண்டியிருந்தது. இளங்கலை வகுப்புப் பருவத்தில்
நாங்கள் துள்ளும் மனநிலையில் இருந்த போது, அந்தப் பாடத்தை
மேலோட்டமாக வாசித்து, வகுப்பில் கலந்துரையாடலுக்கு வரும் போது
யாரோ ஒருவர் கேள்விகளை கேட்டு ஆரம்பிக்கட்டும் என்ற எதிர்பார்ப்பில்
இருந்தோம். நீங்கள் நினைப்பதைப் போல அந்த எதிர்பார்ப்பு சுக்குநூறானது.
எமது விரிவுரையாளர் கடினமான சிந்தனையை தூண்டும்படியான
கேள்வியொன்றைக் கேட்ட மாத்திரத்தில் அதற்கு பொருத்தமான ஏதாவதொரு
விடையை வழங்கும் நோக்கில் நான் உட்பட வகுப்பில் அனைவரும்
பீதியாகிப் போனோம்.

வகுப்பறையில் மௌனம் காத்தல்: ‘குறைபாட்டின்’ இயங்கியலை எதிர்த்து
நிற்றல்
Read More »

இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு

மகேந்திரன் திருவரங்கனின் “மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை
நிகழும் காலத்தில் கற்றல் செயற்பாடு (15.01.2024)” குப்பி ஆக்கத்தில்
பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு விமர்சன சிந்தனையை வளார்க்கும்
கூடங்களாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியிருந்தார். உயர்கல்விக்
கூடங்கள் மாணவர்கள் விமர்சன நோக்கோடு சிந்திக்கும் தளத்திலிருந்து
வெறுமனே செயற்பாடுகளை பூரணப்படுத்தும் குறிப்பெட்டியாக
மாறியிருப்பதை ஆயாசத்தோடு குறிப்பிட்டார். மாணவர்களை அவர்கள் என்ன
கூற விளைகின்றார்கள் என்பதை கேட்பதை விடுத்து அவர்களின் மொழியை
சரிசெய்யும் செவ்கையையும் நான் இதே போன்றதொடு நிலையில் இருந்து
காண்கின்றேன்.

இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு Read More »

மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு

நாம் இன்னொரு வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம்.
இவ்வருடம் எமக்காக பொதித்து வைத்திருப்பது என்னவாக இருக்கும்?
எமக்கான எதிர்பார்ப்பு எனும் ஒளியை புதிதாக ஏற்றிவைக்கும் எந்த
விடயத்தையும் நாம் தற்போது காண்பதற்கில்லை. நாம் வாழும் வரலாற்று
தருணங்களை அதிகரித்து வரும் பெறுமதி சேர் வரிகள், வடகிழக்கில் நிகழும்
நில அபகரிப்புகள், மென்மேலும் சிக்கலாகியுள்ள வாழ்க்கைத்தரத்துக்கு
மத்தியில் ஊசலாடும் மலையக மக்களின் அன்றாட நிலவுகை,
பல்கலைக்கழகங்களில் நாம் காணும் ஒடுக்குமுறை கலாசாரங்கள் மற்றும்
காஸாவில் தொடுக்கப்படும் தொடர்ச்சியான யுத்தம் போன்ற விடயங்களே
அடையாளாப்படுத்துகின்றன. எனது ஆக்கத்தை மனச்சோர்வுடன்
ஆரம்பிப்பதை விடுத்து வேறு மார்க்கமில்லை.

மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு
Read More »

இரு இலைகளும் அரும்பும்: கல்வியியலாக‌ மலையகத்தின் வரலாறு

நான் இங்கு ஒரு கவிஞரைப் பற்றி பேச விழைகின்றேன். குறிஞ்சித்
தென்னவன் ஒரு தானியங்கி ஆசான். அவர் எமது பாடசாலைகளிலோ
பல்கலைக்கழகங்களிலோ ஒரு எழுத்தாளராக ஆகுவதற்கு கற்கவில்லை.
அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும்
இலவசக்கல்விக்காக குரலெழுப்பினாலும் அந்த அமைப்பிலிருந்து விலத்தியே
வைக்கப்பட்டிருந்தனர். அவர் இலங்கை மண்ணில் அவரது வாழ்நாள்
காலத்தில் ஒரு கவிஞராக புகழப்படவில்லை, அவரை அறிந்திருந்தவர்களும்
தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வட்டத்துள் இருந்த வெகுசிலரே.
இப்பத்தியை நிறைவு செய்கையில் அவரின் ஒரு கவிதையின் (ஆங்கில)
மொழிபெயர்ப்பு வடிவத்தை சமர்ப்பிக்கும் நான், எமது வரலாற்றின் வாசிப்பை
சமர்ப்பிப்பதோடு அதன் மூலமான சமூக மற்றும் அரசியல் விடுதலை
தொடர்பான கூட்டுப்பார்வையொன்றையும் உருவாக்குமென
எதிர்பார்க்கின்றேன்.

இரு இலைகளும் அரும்பும்: கல்வியியலாக‌ மலையகத்தின் வரலாறு Read More »

‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ எனும் வாக்குறுதி: நம்பிக்கையற்ற சூழல்சார்
குறிப்புகளும் கோரப்படாத ஆலோசனைகளும்

நான் அமரகீர்த்தி லியனகே எழுதிய ‘விஷ்வவித்யாலய யனு குமக்த?
[பல்கலைக்கழகம் என்பது யாது?] எனும் நூலை வாங்குவதற்காக‌ சரசவி
புத்தகசாலையின் ஒரு கிளைக்குள் பிரவேசிதபோது அங்கே ஆங்கிலத்தில்
வெளியாகிய நூல்கள் மட்டுமே விற்கப்படும் என அறிந்தேன். வெறுமனே
நிறுவனத்தின் பேசும் கிள்ளைகளாக காணப்படும் ஊழியர்களுக்கு ஏனென்ற
காரணம் தெரியவில்லை. ஒருவகையில் இதற்கான காரணம்
தேவையில்லை. இந்நிறுவனம், சுதந்திரம் தொட்டு இயற்றப்பட்டு வரும்
ஒழுங்கற்ற மொழிக்கொள்கைகள் மட்டும் காலனித்துவ உற்பத்தியான
ஆங்கிலத்தில் இருக்கும் எதற்கும் விருப்புத்தெரிவிக்கும் தேசிய
விருப்பத்திற்கும் ஏதுவாக தன்னை தகவமைத்திருக்கின்றது.

‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ எனும் வாக்குறுதி: நம்பிக்கையற்ற சூழல்சார்
குறிப்புகளும் கோரப்படாத ஆலோசனைகளும்
Read More »

இலங்கை பல்கலைக்கழகங்களில் நரம்பியல்பன்முகத்தன்மை, உள்ளீர்க்கும் கல்வி மற்றும் தர உத்தரவாதம்

இந்த ஆக்கம் நரம்பியல்பன்முகத்தன்மை என்ற கருத்தாக்கத்தின் மூலம்
எமது கல்வியை மேலும் உள்ளீர்க்கும் வகையில் கற்பனை செய்வதை
நிகழ்த்துகின்றது. முதலில் நான் ஆட்டிசம்‍ மன இறுக்க நோயின்
நிறமாலையான நரம்பியல்பன்முகத்தன்மை நிலையை குறித்து பேசிவிட்டு
உள்ளீர்க்கும் கல்வி தொடர்பில் இலங்கையில் காணப்படும் சவால்களையும்
அவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை பல்கலைக்கழகங்களில்
காணப்படும் தற்போதைய தர உறுதிப்பாட்டு செயன்முறையில் இருக்கும்
கட்டுப்பாடுகளையும் ஆராய்கின்றேன்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் நரம்பியல்பன்முகத்தன்மை, உள்ளீர்க்கும் கல்வி மற்றும் தர உத்தரவாதம் Read More »