Author name: Hasini Lecamwasam

மதச்சார்பின்மை: முஸ்லிம் அமைப்பு மற்றும் சிங்கள-பௌத்த அரசியல்
டீல நுசயனெமைய னந ளுடைஎய

இந்த சிறு பகுதியானது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் உள்ள ஒரு
குறிப்பிட்ட வகுப்பறையில் எனக்குக் கிடைத்த ஒரு நினைவகத்தின் கதையை அடிப்படையாகக்
கொண்டது. இந்த குறிப்பிட்ட வகுப்பறையை நான் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும் போது,
அதே நினைவை மீண்டும் மீண்டும் தூண்டுகிறது. நான் இந்த நினைவகத்தை சுயவிமர்சனமாக
திரும்பிப் பார்ப்பதோடு, இந்த சம்பவத்தின் போது என் சுயத்தைப் புரிந்துகொள்வதற்கும் எனது
சிந்தனை செயல்முறையை பகுப்பாய்வு செய்வதற்கும் முயற்சி செய்கிறேன். சுமார் ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த விரிவுரை அறையைக் கடந்தபோது, ஒரு இளங்கலைப்
பட்டதாரி மாணவி அபாயா அணிந்து, உள் மூலையின் இரண்டு சுவர்களை எதிர்கொண்டு நின்று
கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது ஒரு வழக்கத்திற்கு மாறான காட்சியாகும்.

2022: ஜனநாயகத்தை நோக்கியதோர் திருப்புமுனை

“எமது வெறும் கைகளால் நாம் எமது சமூகத்தை வடிவமைக்கின்றோம்”
-சுமதியின் “தி டயலெக்டிக்” (The Dialectic)
கடந்த தசாப்தத்தில் மிகவும் கடினமானதும், அதேசமயம் பெருமை வாய்ந்ததுமான 2022 ஆம்
ஆண்டு அதன் நிறைவை எட்டுகின்றது. வீடுகளில் எரிவாயு சிலின்டர்கள் வெடிப்பதும், இரசாயன
உரத்திற்கெதிரான தடைவிதிப்பும், நுண் நிதித்திட்டத்துக்கெதிராகப் பெண்கள் போராடுவதுமென
சம்பவங்கள் ஏராளம். 2022 இன் முடிவில்லா வரிசைகள் குறிப்பிடத்தக்கவை.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியக் கல்வி

அண்மையில் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழக்த்தின் (University of Hull) முதுகலை ஆய்வுச்
சமூகத்தைச் சார்ந்தோரோடு பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன்.
இதில் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலிருந்து இயற்கை மற்றும்
சமூகவியல் விஞ்ஞானத் துறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் இவர்கள் பெண்ணியம் தொடர்பான முன்கூட்டிய அறிவைக் கொண்டிருக்கவில்லை
போலும். நான் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம், இயற்கை விஞ்ஞானத்தைச் சேர்ந்த பலர்
பெண்ணியத்தை ஆண்களுக்கெதிரான ஒரு அரசியல் தத்துவமாகக் கருதியமையாகும். அச் சமயம்
அவர்களது முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த இவ்வறிஞர்கள் இவ்வாறு ஏன்
கருதியிருந்தார்கள் என்பதை மீட்டிப் பார்க்கத் தூண்டியது அக்கலந்துரையாடல்.

அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் கொடுங்கோன்மையான அரசிற்கெதிராக விஸ்வரூபம் எடுத்ததோரின் மக்கள் போராட்டத்தை 2022 கண்டிருந்தது. பாரதூரமானதோர் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஊழல், தவறான ஆட்சி, பொருளாதாரத்தின் முறையற்ற கையாளுகை என்பவற்றிற்கெதிராகவும், ஜனநாயகத்தின் மேம்பாட்டைக் கோரியும் மக்கள் குரல் எழுப்பினர். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசோ, அரசியல் கலாசாரத்திலும், பொருளாதார ரீதியான பொறுப்புக்கூறலிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதை விடுத்து, அடக்குமுறையின் பால் திரும்பியுள்ளது.  அரசாங்கத்துக்கெதிராக மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் …

அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு Read More »

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார
உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம்
இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார
உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய
நடத்தை விதித்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின்” (பக்கம்.7) சுகாதார
உத்தியோகத்தர்களை தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு செய்வதை
உற்சாகப்படுத்தாமலிருக்கும் அதேவேளை, “புவியியல்ரீதியான சுகாதார
உத்தியோகத்தர்களின் சமமற்ற விநியோகத்தை கருத்திற்கொண்டு அவர்களை
வசதிவாய்ப்புகள் குறைவான பிரதேசங்களில் தக்கவைப்பதற்கான ஆதரவை
வழங்க வேண்டும்” (பக்கம்.8).

எமது நல்வாழ்வுக்கான சுமை: வசைகளின் கதையாடல்களில் வர்க்கம்

தற்போதைய காலகட்டத்தில் எந்த போராட்டமானாலும் கொடூரமான
அடக்குமுறையையும் அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீதான
திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் ஏனைய உறுப்பினர்களை
செயற்படுவதினின்றும் தடுப்பதற்கான பயத்தை ஏற்படுத்தும்
உத்திகளுடனேயும் தான் முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சில
வேளைகளில் இதற்கான பலமான ஆயுதமானது உளம்சார்ந்ததாக
இருக்கக்கூடும்; இப்பொருளாதார நெருக்கடி காலங்களில் அதனை சமாளித்து,
இன்னும் அதனை எதிர்த்துப் போராடுவோரிடமிருந்து நெருக்கடியால்
பிழைக்க முடியாதோரை பிரிக்கும் உத்தி. இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்குமிடையில் ஆழமான குழிகளை தோண்டி
இல்லாதவர்களின் இழப்பில் இருப்பவர்களை நோக்கிய பலமான ஈடுபாட்டை
செலுத்துவதன் ஊடாக அரசாங்கம் தனக்கான அணியை தேர்வு
செய்துள்ளதாக கருதலாம். இந்நடவடிக்கை நீதிக்கான போராட்டத்தில்
கூட்டாகவும் வலுவாகவும் நிற்கும் தொழிற்சங்கங்கள், மாணவ மற்றும்
சிவில் அமைப்புகள் போன்ற அமைப்புகளின் மூலங்களை மௌனிக்கச்
செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.

‘எனது எதிர்பார்ப்பு தேவையானது, ஆனால் அது மட்டும் போதாது’
பெண்ணியத்தை பல்கலைக்கழகத்தில் கற்றலும் கற்பித்தலும்

நவீன பல்கலைக்கழக கல்வியானது பிரித்தானியரால் 1921ஆம் ஆண்டு
சிலோன் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்டது,
இதுவே பின்னர் பொது பல்கலைக்கழக அமைப்பாக விருத்தியடைந்ததோடு
கல்வியியலாளார்களும் ஆய்வாளர்களும் உலகளாவிய கல்வியை பெறும்
இடமாக மாறியது. 1947இலேயே முதலாவது பல்கலைக்கழகமான சிலோன்
பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பின்னர், 1972ஆம் ஆண்டின் 1ஆம்
இலக்க சிலோன் பல்கலைக்கழக சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு
காலனித்துவ, ஆணாதிக்க பெறுமானங்கள் பல்கலைக்கழக
பாடத்திட்டங்களில் வேரூன்றியதோடு நிர்வாக சட்டகத்திலும் ஊடுருவின.

ஒடுக்குதலும் எதிர்த்தலும் மற்றும் பல்கலைக்கழகமும்

பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கும் அறிவு உற்பத்திக்குமான திறந்த
தளங்களாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவை சுதந்திரம் மற்றும்
ஜனநாயகத்தின் அரண்களாக தொழிற்பட வேண்டியவையாக
கொள்ளப்படுகின்றன. இருப்பினும் யதார்த்தத்தில் பல்கலைக்கழகங்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் தமக்குள்ளேயும் இடையேயும்
அதிகாரப்படிநிலைகளை கொண்டியங்கும் அமைப்புகளாக காணப்படுகின்றன.

எதிர்க்கட்சியிலிருந்து மாற்றுத்தீர்வுக்கு ‘அரகலய’வின் இயலாற்றலும் அதன்போக்கும்

நான் இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது ‘போராட்டம்’ அல்லது
‘கிளர்ச்சி’ என‌ (தவறாக) மொழிபெயர்க்கப்படும் ‘அரகலய’வானது,
‘ஜனநாயகவாதி’ என்றும் ‘தாராளவாதி’ என்றும் கூறிக்கொண்டிருக்கும்
ஜனாதிபதியின் நடப்பு அரசாங்கத்தால் நசுக்கப்பட்டும் பல வழிகளால்
கூறுபோடப்பட்டும் வருகின்றது. இப்பத்தியின் நோக்கமாவது, தற்போதைய
இடையாட்சிக்காலம் தொடர்பான எமது கூட்டு எதிர்காலத்துக்கு
தேவைப்படத்தக்க வகையிலான சில சிதறலான அவதானிப்புகளை
மேற்கொள்வதாகும்.

இடைவெளியைக் கவனியுங்கள்: GBV கொள்கை மற்றும் உண்மை

Mind the Gap என்ற சொற்றொடர் முதலில் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளை ரயில்
கதவுக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனிக்குமாறு
எச்சரிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையானது பயணிகளை இடைவெளியில் கவனம்
செலுத்தவும், அதில் விழுந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்
உள்ளது. இந்தக் கட்டுரையில், கொள்கைக்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள
இடைவெளியை, குறிப்பாக SGBV கொள்கைகளுக்கும் நமது பல்கலைக்கழகங்களில் உள்ள
யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை மனதில் கொள்ளுமாறு வாசகர்களைக்
கேட்டுக் கொள்கிறேன்.