Author name: Hasini Lecamwasam

‘அரகலயவும்’ (போராட்டமும்) ஒருமைப்பாடும் ஒரு கல்வியியலாளரிடமிருந்து சில சிந்தனைகள்

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் சில விடயங்களே எதிர்பார்ப்பை
ஊட்டுவனவாக இருக்கின்றன. கடந்துபோன ஆறு மாத‌ங்களில் நாம்
நினைத்தும் பார்த்திராத ஒரு இருத்தலியல் நெருக்கடியை இப்போது நாம்
சந்திக்கின்றோம். முரண்நகையாக இலங்கை தனது 75ஆவது சுதந்திர
தினத்தில் காலடியெடுத்து வைக்க இன்னும் ஒரு வருடமே இருக்கின்றது.
ஏழு தசாப்தங்களை அண்டும் எமது பின்காலனிய தேச உருவாக்கத்திலும்
நாம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற எதிர்காலம் ஒரு நாடாக நாம்
பெருமைகொள்ளத்தக்க விடயமாக காணப்படவில்லை.

பொருளாதார நெருக்கடியில் கல்வி

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் கல்வித்துறையை
பாரியளவில் பாதித்துள்ளது. முன்கல்வி மாணவர்கள் தொடக்கம்
பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் வரை மாணவர்கள், ஆசிரியர்கள்
மற்றும் கல்விசாரா ஊழியர்களென அனைவரும் எதிர்பாராத பல சிக்கல்களை
எதிர்கொண்டிருக்கின்றார்கள். எமது கல்விநிலையங்களும் அடிக்கடி ஏற்படும்
மின்வெட்டு, காகிதாதிகள் மற்றும் இரசாயனங்கள் போன்ற கற்றலுக்கு
தேவையான பொருட்களின் தட்டுப்பாடு போன்றவற்றால் கல்வி
நடவடிக்கைளை தொடர்ந்தும் நடத்த முடியாமல் திண்டாடுகின்றன.

GotaGoHomeமிலிருந்து #அமைப்பு மாற்றத்தை நோக்கி

GotaGoHome பல்தரப்பட்ட கோரிக்கைகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒன்றே அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். புதிய பிரதமரின் நியமனம்
நமக்கு எதை உணர்த்த முடியுமாக இருக்கின்றதென்றால், இலங்கையின்
சமூக, அரசியல் அமைப்புகளின் மீதான நீண்டகால மாற்றமானது
ஏற்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கலாம் என்பதும் தற்போதைய
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை எட்டுவது மட்டும் அதற்கான வழியாக
அமைய முடியாது என்பதுமாகும்.

பல்கலைக்கழகமும் தற்போதைய நெருக்கடியும்

இலங்கையர்கள் ஊழலுக்கெதிரான தமது போராட்டத்தை
தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபாய
ராஜபக்ஷ அவர்களையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது
குடும்பத்தாரையும் பதவிவிலகக்கோரி வருகின்றனர். இவ்வாறான
கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அதிலும் குறிப்பாக
ஒரு அரசாங்கத்தை பதவிவிலகக்கோரும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கும்
வேளையில் பலமாக அமைந்த ஒரு அரசாங்கத்தின் விதி இத்தகைய சமூக
பொருளாதார இயல்வீழ்ச்சியை எவ்வாறு உருவாக்கியது என்பதே எனது
சிந்தனையாக இருக்கின்றது. இவ்வரசாங்கத்தினுள்ளும் அதற்கு வெளியேயும்
இருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், ஏனைய களங்கள், நடைமுறைகள்
மற்றும் பொறிமுறைகள் என்ன செய்துகொண்டிருந்தன அல்லது
என்னவாகின? எனது சூழமைவில் இருந்து பார்க்கையில், இவ்வாறான ஒரு
கொடுங்கனவு உருவாகும் வரை பல்கலைக்கழகங்கள் என்ன
செய்துகொண்டிருந்தன?

தற்போதைய நெருக்கடிக்கு தேவையான கல்வி

துல்லியமான வார்த்தைகளை கூற முடியாதுள்ளது, ஆனால் அதன் சாரம்
இதுதான்: ஒருவர் கூட‌ எமது கல்வி குறித்து திருப்தியாக இல்லை.
கல்வியென்பது சிறந்தவொரு உலகம், நாடு மற்றும் எதிர்காலத்தை கற்பனை
செய்யவைக்க வேண்டும். ஆனால் எமது கல்வி அமைப்பை தக்கவைக்கவும்
அதனை விமர்சனமின்றி வெற்றுப்பார்வையோடு நோக்கவுமே
வழியமைக்கிறது.

#GoHomeGota, ‘போராட்டமும்’ முழக்கமும்

எரந்திகா த சில்வா இலங்கையின் பின்காலனித்துவ வரலாற்றின் திருப்புமுனையான நிகழ்வாக‌அமைந்த காரணத்தால் நான் #GoHomeGota எனும் சிட்டையை பாவிக்கின்றேன்.இலங்கையை ஒரு சீரழிந்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அராஜக,குறுகிய அரசாங்கமொன்றின் பஸ்டீல் சிறையை நொருக்குவதற்காகவீதிகளில் திரண்ட மக்கள் மீதான அதீத மரியாதையின் நிமத்தம் நான்இச்சிட்டையை பயன்படுத்துகின்றேன். அனைத்து சமூகப் படித்தரங்களையும்சேர்ந்த மக்கள் “பொது எதிரியான” ராஜபக்ஷக்களுக்கு எதிராகஒன்றுதிரண்டனர். போராட்டத்துக்கான நியாயங்களாக பல முழக்கங்கள்வெளிப்பட்டன. அனைவரையும் உள்ளீர்க்கக்கூடிய, பன்மைத்தன்மையுள்ள,சமத்துவநோக்குள்ள ஒரு போராட்டம் வேண்டுமென்றால் அம்முழக்கங்கள்கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும். #GoHomeGota போராட்டமென …

#GoHomeGota, ‘போராட்டமும்’ முழக்கமும் Read More »

கலைப்பீடங்கள் எதை நோக்கி செல்ல வேண்டும்- ஒரு மறுமொழி
பர்ஸானா ஹனீபா

சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன்னர் நான் குப்பி அமர்வில் எழுதிய ஆக்கம்
எவ்வாறு தற்போதைய நிலையில் கல்வித் தகுதி குறித்த சட்டகம் உட்பட தர
உறுதிப்பாட்டு நியமங்கள் என்பன மானிட மற்றும் சமூகவியல் துறை சார்ந்த
அறிவில் (H மற்றும் SS) குறைந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளன என
எழுதினேன் (தி ஐலன்ட், 1 பெப்ரவரி, 2022).

சமூக விஞ்ஞானத்துள் நெருக்கடியா அல்லது சமூக விஞ்ஞானத்தின் நெருக்கடியா

ஒரு மாதத்திற்கு முன்னர், நான் இருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து கல்விசார் ஊழியர்கள் 2017-2021 காலப்பகுதிக்குள் வெளியிட்ட ஆய்வுகளின் பட்டியலைக்கோரி ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இத்தகவல்கள் கணக்காய்வு அலுவலகத்தினால் வேண்டப்பட்டிருப்பதாக அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நோக்கம் சமூக விஞ்ஞான பீடங்களின் ஆய்வு வெளியீடுகளை அளவீடு செய்வதாகும். இந்த ஆய்வுகள் எவற்றைப்பற்றியவை அல்லது இந்த ஆய்வுகளின் பங்களிப்பு என்ன போன்ற தகவல்களை விடுத்து எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே மின்னஞ்சலில் கேட்டிருந்த தகவலாகும்.

விளைவு அடிப்படையான கல்வியும் விடயத்தின் கருப் பொருளும்

இந்தக் கட்டுரையானது இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியின் தர உறுதிப்படுத்தும் செயன்முறை பற்றி இத்தொடரில் எற்கனவே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களின் தொடர்ச்சியாகும். இக்கட்டுரையில் என்னுடைய தனிப்பட்ட கற்கைப் பயிற்சி மற்றும் அனுபவங்களை மீட்டுவதன் ஊடாக நான் தொடுக்கும் முக்கிய வினாவானது “விளைவு அடிப்படையிலான கல்வி” என்ற பதத்தை நாம் எவ்வாறு கிரகித்துள்ளோம் என்பதாகும்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனித மற்றும் சமூக விஞ்ஞானத்தின் குறை மதிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக வட்டாரமானது கடந்த 2021 ஆம் ஆண்டு மனித மற்றும் சமூக விஞ்ஞானப் பல்கலைக்கழகக் கல்வியில் 100 ஆண்டுகளை எட்டியிருந்தது. இந் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக மனித மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வியின் தற்போதைய நிலை குறித்து ஒரு கருத்தரங்கு ஒழுங்குசெய்யப்பட்டது.