போராட்டத்தை நசுக்குதல்: கல்வி மற்றும் சமூக வகுப்பு மீதான
கலந்துரையாடல்
போராட்டக்காரர்கள் ராஜபக்ஷாக்களை அவர்களின் அதிகாரம், பதவி,
தலைமைப் பொறுப்பு என அத்தனையிலும் இருந்து பதவிறங்கச் செய்யும்
வகையில் ராஜபக்ஷ ஆட்சியை முறியடித்திருக்கின்றார்கள். இச்சர்வாதிகார
வீழ்ச்சியின் பிற்பாடு, ராஜபக்ஷக்களின் கைப்பாவையாக இருக்கும் ரணில்
விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஒரு உடைந்த
பெரும்பான்மையோடு பதவியில் அமர்ந்திருக்கின்றார். மக்களின்
ஆணையின்றி பதவியை ஏற்று தன்னை ஜனாதிபதியாக வரிந்திருக்கும்
ரணில் விக்ரமசிங்க, தான் பதவிக்கு வருவதற்கான மூல காரணமான ‘அரகல’
போராட்டத்தை நசுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர்
பதவியேற்று சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே, ஆர்ப்பாட்டக்காரர்கள்
கோட்டா கோ கம (GGG) தளத்தை கலைக்கும் நோக்கில் இருந்தபோதே,
அதிகாலை வேளையொன்றில் ராணுவத்தினரை ஏவி விட்டதோடு அவர்கள்
பெண்கள் மற்றும் வலது குறைந்தோர் உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களை
தாக்கியுமுள்ளனர்.