கட்டுரை

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல்

ஹசினி லேகம்வசம் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்தச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவை ஏற்படுத்திய எதிர்வினைகளுக்கும் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அத்தகைய எதிர்வினைகள், நமது சமூகத்தில் கல்வி எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதன் பிரதிபலிப்பாகும். அத்துடன், இந்தப் புரிதலையும் அது உருவாக்கும் முன்னுரிமைகளையும், கல்விக் கொள்கைகளில், குறிப்பாக சீர்திருத்தக் கொள்கைகளில், கட்டாயம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தக் கட்டுரையில் எனது நோக்கம், […]

கல்வி சீர்திருத்தங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினைகளைப் பகுப்பாய்வு செய்தல் Read More »

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . .

சிவமோகன் சுமதி கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அதீதப் பரப்புரைகள் சற்றே ஓய்ந்துள்ள போதிலும், அந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கவே செய்கிறது. இங்கு ‘சர்ச்சை’ என்று நான் குறிப்பிடுவது, ஆறாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடப்புத்தகத்தில் இணையவழித் தளத்திற்கான இணைப்பு (link) தவறாக அச்சிடப்பட்டதால் ஏற்பட்ட அந்தத் தவறை அல்ல. அந்தத் துரதிர்ஷ்டவசமானச் சம்பவம் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தேவையற்ற மற்றும் மோசமான தாக்குதல்களைத் தொடுப்பதற்கு வழிவகுத்த போதிலும், சீர்திருத்தங்கள்

கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்கான அழைப்பு: கலந்துரையாடல் தொடர்கிறது . . . Read More »

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா?

ரம்யா குமார் இன்னொரு புதிய அணி மாணவர்கள் எமது பீடத்துக்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்துள்ள இம் மாணவர்கள் எம் பல்கலைக்கழகங்களிலே சமூக மற்றும் இன ஒருங்கியைதலை முன்னேற்ற எமக்குள்ள மகத்தான வாய்ப்பை பற்றி எனக்கு இன்னொருமுறை ஞாபகப்படுத்துகின்றனர். இருப்பினும் கவலைக்கிடமாக, முதல் சில அரையாண்டுகளில் பல மாணவர்கள் ஏனையோரோடு தொடர்புபட்டு செயற்படுவதில்லை. இதன் காரணம் ஒருவர் இன்னொருவர் மொழியை பேசாமலிருப்பது மட்டுமில்லை. எமது சமுதாயத்தின் சமூகங்களிடேயே இன்னமும் தொடரும் ஒருவரை ஒருவர் பற்றியதான

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா? Read More »

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கல்விச் சீர்திருத்தங்கள்

மகேந்திரன் திருவரங்கன் 2026 ஆம் ஆண்டு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி  (NPP) வெற்றியடைந்தபோது நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்தமுடியும் எனும் பெரும் நம்பிக்கை காணப்பட்டது. நல்லாட்சி மற்றும் முறைமை மாற்றம் பற்றிய வாக்குறுதிகளை NPP வழங்கியிருந்ததுடன், இலவச பொதுக்கல்வியை வலுப்படுத்த முன்னிலையில் நின்ற, மொத்த தேசிய உற்பத்தியின் 6% கல்விக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற முனைப்பியக்கத்தில் மும்முரமாக பங்குபற்றிய ஒரு கல்வியாளரை கல்வி அமைச்சராக நியமித்தமை இவ்நம்பிக்கை வலுப்பெற்றதுக்கு ஒரு காரணமாகும். கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நடந்துகொண்டுள்ளது. இதில் உற்சாகப்படுத்தும்

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கல்விச் சீர்திருத்தங்கள் Read More »

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல்

சுமதி சிவமோகன் மிகக்குறுகிய காலப்பகுதியான கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், ‘டிட்வா’ (Detwah) சூறாவளி நம்மிடையே முன்னொரு போதும் இல்லாத அளவிலான ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பகுதியை சுழற்றியடித்துள்ள இப்புயல், பல நூற்றாண்டுகள் பழைமையான கட்டமைப்புகளின் அரண்களைத் தகர்த்தெறிந்துள்ளதோடு, ஒரு காலத்தில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட பகுதிகளையும் தாக்கியுள்ளது. மழை நின்றிருக்கலாம். வெள்ள நீர் வடியும், கடைகள் மீண்டும் திறக்கப்படும், குழாய்களில் தண்ணீர் வரும், நாம் மீண்டும் எமது அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால்,

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல் Read More »

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல்

அகிலன் கதிர்காமர் இலங்கை பொதுக்கல்வி முறைமையின் தனித்தன்மையான பலம் அது பல்கலைக்கழக மட்டம் வரை இலவசமாக காணப்படுவது ஆகும். மேற்குலகம் உட்பட வேறு நாடுகளில் மாணவர் கடன்களின் கனத்த அளவை பார்க்கும்போது எமது இளைஞருக்கு இலவசக் கல்வி எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருந்துள்ளது என்பது தெரிகிறது. வருத்தமளிக்கும் இன்றைய போக்கை பார்க்கும்போது தனியார் பல்கலைக்கழகங்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படும்போது தனியார் மயமாக்கலின் வான்கதவுகள் திறந்து விடப்படும்போது பலருக்கு உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்படும்; விரிவுரையாளர்கள் தனியார்

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல் Read More »

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும்

ஷாமலா குமார் அறிவிக்கப்பட்ட பிரதான பொதுக் கல்வி பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பரிசீலனை செய்து கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணமும் வழங்கப்படாமை இக்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான எனது பிரதான கரிசனைகளில் ஒன்றாகும். பொது/ அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமையை கொண்டவை. இவ்வாறு இருப்பதற்கு பதிலாக, தரம் ஒன்பதில் அறிமுகப்படுத்தவிருக்கும் “சைகோமெட்ரிக்ஸ் சோதனைகளை” நான் கவனம் செலுத்த முயன்றபோது, செய்தித் துணிக்கைகள், கல்வி அமைச்சின் அலுவலர்களுடான உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களையே நான்

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும் Read More »

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள்

உடாரி அபேயசிங்க பல்கலைக்கழகச் சூழல்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சக ஊழியர் உறவு முதல் நுட்பமான பகைமை வரையிலான பல்வேறுபட்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் இளைய உறுப்பினர்களைக் கண்ணியத்துடன் பணியாற்ற உண்மையாகவே அனுமதிக்கின்றனவா என்று கேட்பது அவசியமாகிறது. நமது கல்விச் சூழல்கள், உண்மையிலேயே தகுதியான நியாயம், மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வளர்க்கின்றனவா, அல்லது இந்தக் கொள்கைகளையே தொடர்ந்து சிதைக்கின்றனவா? மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக பகிடிவதை, பாலியல்-பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றி நாம் அடிக்கடி

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள் Read More »

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்

ஹாசினி லேகம்வசம் என்னுடைய தற்போதைய கள ஆய்வுகள் இலங்கையில் விவசாயம் சார் அரசியல் பற்றியதாகும். விவசாயத்தில் என்ன நடக்கின்றது என்பதோடு நேரடியாக தொடர்புபடவிட்டாலும் அங்கே நடப்பவற்றை பாரியளவில் தீர்மானிக்கும் பல விடயங்களை நான் இதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். தினசரி வீட்டு வாழ்க்கையின் இயங்கியல்கள் எவ்வாறு விவசாயம் சார் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை நான் கற்ருக்குக்கொண்டுள்ளேன். விவசாயம் சார் தேவைகளுக்காக எடுக்கப்படும் கடன்கள் விவசாயத்தில்தான் செலவிடப்படுகின்றவா? நெருங்கிய உறவுகள் எவ்வாறு விவசாய நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்றன (உதாரணமாக யார்

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் Read More »

தெரிந்த பேயே  சிறந்ததோ? கல்வியை அரசியல்மயமாக்குவது  தொடர்பான சில கருத்துக்கள்

கௌசல்யா பெரேரா 2024 பொதுத் தேர்தல்களில் பல கல்வியாளர்கள் தேர்தல் மேடைகளில் கலந்து கொண்டனர், மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாராளுமன்றத்தில் காணப்பட்டனர். அவர்களில் சிலர் இப்போது அமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். ஏனையவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வியாளர்களாகிய நாங்கள், பரிச்சயமான முகங்களை செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்த வித ஆச்சரியமுமில்லை. அரசியல்மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இது ஒரு புதிய திருப்பமா? 2012-2014 ஆம் ஆண்டில் எனது கலாநிதி பட்ட ஆராய்ச்சிக்காக கல்வியாளர்களை நேர்காணல் செய்தபோது, அவர்கள் நமது

தெரிந்த பேயே  சிறந்ததோ? கல்வியை அரசியல்மயமாக்குவது  தொடர்பான சில கருத்துக்கள் Read More »