மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?
பல சமூக ஊடகங்களில் தற்போது எடுத்துரைக்கப்படும் விடயம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் பேரா. சம்பத்
அமரதுங்க அவர்களின் கருத்தாகும். அதாவது, 70 வீதமான
கலைப்பட்டதாரிகளுக்கு (மானிட மற்றும் சமூகவியல் துறைகளில்
பட்டம்பெற்று வெளியேறியோர்) நாட்டில் வேலைவாய்ப்பு காணப்படவில்லை
என்ற கருத்தை COPE (அரச தொழில்துறைகளின் செயற்குழு) அமர்வில் அவர்
மேற்கொண்டிருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கலைப்பட்டதாரிகளுக்கிடையில் நிலவும் வேலையில்லாப்பிரச்சினையே
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனக்களுக்கு
காரணம் என்ற கருத்தையும் இவர் முன்வைத்திருக்கின்றார்.