அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும்
குணதாஸ அமரசேகரவின் இனிமகே இஹலட (ஏணியில் மேல்நோக்கி) என்ற நூலில்,
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவனான பியதாஸ, கதிர்காமத்தில்
இடம்பெறும் தினசரி தேவபூஜையில் மெய்யுணர்வொன்றை அனுபவிக்கிறார். ஆரம்பத்தில்
நடனக்கலைஞர்களின் துடிப்பான சந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு வலுவான சிற்றின்பத்
தூண்டுதலை உணர்கின்றார். எனினும் சொற்ப நேரத்தில் அத்தகைய உணர்ச்சியையிட்டுக்
குற்றவுணர்வடையும் பியதாஸ, அவ்விடத்தை விட்டுக் கிரி வெஹெரவை நோக்கிச் செல்கிறார்.