கட்டுரை

அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும்

குணதாஸ அமரசேகரவின் இனிமகே இஹலட (ஏணியில் மேல்நோக்கி) என்ற நூலில்,
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவனான பியதாஸ, கதிர்காமத்தில்
இடம்பெறும் தினசரி தேவபூஜையில் மெய்யுணர்வொன்றை அனுபவிக்கிறார். ஆரம்பத்தில்
நடனக்கலைஞர்களின் துடிப்பான சந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு வலுவான சிற்றின்பத்
தூண்டுதலை உணர்கின்றார். எனினும் சொற்ப நேரத்தில் அத்தகைய உணர்ச்சியையிட்டுக்
குற்றவுணர்வடையும் பியதாஸ, அவ்விடத்தை விட்டுக் கிரி வெஹெரவை நோக்கிச் செல்கிறார்.

பல்கலைக்கழகங்களில் பெண் பெரும்பான்மையும் அதற்கான எதிர்காலமும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களுக்கேற்ப, அவ்வாண்டில் உள்வாங்கப்பட்ட 109,660 மாணவர்களில் 64.3 சதவீதமானோர் பெண்களாவர். பெண்கள் பெரும்பான்மையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றது.

மாணவ ஒன்றியங்களில் மேலாதிக்கமும் அடக்குமுறையும்

அண்மையில் காலி முகத்திடலில் தேசத்தின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைத்துவங்களின் கீழ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் குடிமக்களோ இவற்றிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். ஒரு வருடத்திற்கு முன் இதே இடத்தில் மக்களின் ஆவேசம், ஒற்றுமை, பலம் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்த வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களினின்றும் வெகுதூரமாகவிருந்தது அந் நிகழ்வு.

மாணவர்களைக் கொடியவர்களாக்கும் இலங்கை: கல்வித் தனியார்மயமாக்கத்திற்கானதோர் முயற்சி

தசாப்தங்கள் கணக்கான ஊழல் மற்றும் தூர நோக்கற்ற பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கை இன்று பெரும் கடன் பிரச்சினையில் சிக்குண்டுள்ளது. இவ்வக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்புவதற்காக சர்வதேச நாணய நிதியம் உட்படக் கடன் தர முன்வரும் எந்தவொரு அமைப்பின் எவ்வித நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள எமது அரசாங்கம் தயாராகவுள்ளது.

தர உத்தரவாதம்ஃ நிர்ணயம்

இலங்கை துக்கத்திற்கிடமான பொருளாதார வீழ்ச்சியில் மேலும் வீழ்ந்திடுவதால், பொது
நிதியிலான மாற்றங்களை நியாயப்படுத்தவும், தர உத்தரவாத அதிகரிப்பில் கவனம் செலுத்தவும்
அரச பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. சில பொதுவான தரநிலைகள்
பூர்த்தி செய்யப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதன் மூலம்இ மாநிலப்
பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் ‘தரத்தை’ மேம்படுத்த தரநிர்ணயமானது முயல்கிறது.
விரிவான ஆவணங்கள் அதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன.

மதச்சார்பின்மை: முஸ்லிம் அமைப்பு மற்றும் சிங்கள-பௌத்த அரசியல்
டீல நுசயனெமைய னந ளுடைஎய

இந்த சிறு பகுதியானது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் உள்ள ஒரு
குறிப்பிட்ட வகுப்பறையில் எனக்குக் கிடைத்த ஒரு நினைவகத்தின் கதையை அடிப்படையாகக்
கொண்டது. இந்த குறிப்பிட்ட வகுப்பறையை நான் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும் போது,
அதே நினைவை மீண்டும் மீண்டும் தூண்டுகிறது. நான் இந்த நினைவகத்தை சுயவிமர்சனமாக
திரும்பிப் பார்ப்பதோடு, இந்த சம்பவத்தின் போது என் சுயத்தைப் புரிந்துகொள்வதற்கும் எனது
சிந்தனை செயல்முறையை பகுப்பாய்வு செய்வதற்கும் முயற்சி செய்கிறேன். சுமார் ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்பு, நான் இந்த விரிவுரை அறையைக் கடந்தபோது, ஒரு இளங்கலைப்
பட்டதாரி மாணவி அபாயா அணிந்து, உள் மூலையின் இரண்டு சுவர்களை எதிர்கொண்டு நின்று
கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது ஒரு வழக்கத்திற்கு மாறான காட்சியாகும்.

2022: ஜனநாயகத்தை நோக்கியதோர் திருப்புமுனை

“எமது வெறும் கைகளால் நாம் எமது சமூகத்தை வடிவமைக்கின்றோம்”
-சுமதியின் “தி டயலெக்டிக்” (The Dialectic)
கடந்த தசாப்தத்தில் மிகவும் கடினமானதும், அதேசமயம் பெருமை வாய்ந்ததுமான 2022 ஆம்
ஆண்டு அதன் நிறைவை எட்டுகின்றது. வீடுகளில் எரிவாயு சிலின்டர்கள் வெடிப்பதும், இரசாயன
உரத்திற்கெதிரான தடைவிதிப்பும், நுண் நிதித்திட்டத்துக்கெதிராகப் பெண்கள் போராடுவதுமென
சம்பவங்கள் ஏராளம். 2022 இன் முடிவில்லா வரிசைகள் குறிப்பிடத்தக்கவை.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெண்ணியக் கல்வி

அண்மையில் இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழக்த்தின் (University of Hull) முதுகலை ஆய்வுச்
சமூகத்தைச் சார்ந்தோரோடு பெண்ணியம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தேன்.
இதில் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களிலிருந்து இயற்கை மற்றும்
சமூகவியல் விஞ்ஞானத் துறைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் இவர்கள் பெண்ணியம் தொடர்பான முன்கூட்டிய அறிவைக் கொண்டிருக்கவில்லை
போலும். நான் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம், இயற்கை விஞ்ஞானத்தைச் சேர்ந்த பலர்
பெண்ணியத்தை ஆண்களுக்கெதிரான ஒரு அரசியல் தத்துவமாகக் கருதியமையாகும். அச் சமயம்
அவர்களது முதுகலைப் பட்டத்திற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த இவ்வறிஞர்கள் இவ்வாறு ஏன்
கருதியிருந்தார்கள் என்பதை மீட்டிப் பார்க்கத் தூண்டியது அக்கலந்துரையாடல்.

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார
உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம்
இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார
உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய
நடத்தை விதித்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின்” (பக்கம்.7) சுகாதார
உத்தியோகத்தர்களை தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு செய்வதை
உற்சாகப்படுத்தாமலிருக்கும் அதேவேளை, “புவியியல்ரீதியான சுகாதார
உத்தியோகத்தர்களின் சமமற்ற விநியோகத்தை கருத்திற்கொண்டு அவர்களை
வசதிவாய்ப்புகள் குறைவான பிரதேசங்களில் தக்கவைப்பதற்கான ஆதரவை
வழங்க வேண்டும்” (பக்கம்.8).

எமது நல்வாழ்வுக்கான சுமை: வசைகளின் கதையாடல்களில் வர்க்கம்

தற்போதைய காலகட்டத்தில் எந்த போராட்டமானாலும் கொடூரமான
அடக்குமுறையையும் அந்த இயக்கங்களின் தலைவர்கள் மீதான
திட்டமிடப்பட்ட தாக்குதல்களையும் ஏனைய உறுப்பினர்களை
செயற்படுவதினின்றும் தடுப்பதற்கான பயத்தை ஏற்படுத்தும்
உத்திகளுடனேயும் தான் முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது. சில
வேளைகளில் இதற்கான பலமான ஆயுதமானது உளம்சார்ந்ததாக
இருக்கக்கூடும்; இப்பொருளாதார நெருக்கடி காலங்களில் அதனை சமாளித்து,
இன்னும் அதனை எதிர்த்துப் போராடுவோரிடமிருந்து நெருக்கடியால்
பிழைக்க முடியாதோரை பிரிக்கும் உத்தி. இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்குமிடையில் ஆழமான குழிகளை தோண்டி
இல்லாதவர்களின் இழப்பில் இருப்பவர்களை நோக்கிய பலமான ஈடுபாட்டை
செலுத்துவதன் ஊடாக அரசாங்கம் தனக்கான அணியை தேர்வு
செய்துள்ளதாக கருதலாம். இந்நடவடிக்கை நீதிக்கான போராட்டத்தில்
கூட்டாகவும் வலுவாகவும் நிற்கும் தொழிற்சங்கங்கள், மாணவ மற்றும்
சிவில் அமைப்புகள் போன்ற அமைப்புகளின் மூலங்களை மௌனிக்கச்
செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.