சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டில் சமூக நலனும் இலவசக் கல்வியும்
கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பதினேழாவது ஒப்பந்தமானது
அதற்கு முன்னையவற்றிலும் பார்க்க விபரீதமானதாகும். இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக
அதன் வெளிக் கடனைத் தீர்க்கத் தவறிய இத் தருணத்தில் இவ்வொப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டமை அதற்கான காரணம் எனலாம். இலங்கைக்கும் அதன் அந்நியக்
கடனாளர்களுக்கும் இடையே, கடன் மீள்கட்டமைப்புத் தொடர்பாக சர்வதேச நாணய
நிதியமானது மத்தியஸ்தம் செய்கின்றது. இதனால் இலங்கை கணிசமான அந்நிய முதலீட்டைப்
பெற்றாலும், நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நேர்கின்றது.