கட்டுரை

மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை

அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைப்
பற்றி குப்பி குழுமம் கலந்தாலோசித்த போதுதான் இந்த ஆக்கத்திற்கான
வித்து மண்ணில் பதியப்பட்டது. சீர்திருத்த பரிந்துரைகள் வெளியிடப்பட்ட
உடனேயே நாங்கள் கல்வியியலாளர்கள் உட்பட ஏனையோருடனான
கலந்துரையாடல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்; இதனால் விளைய
இருக்கும் சீரழிவுகளையும் உணரத்தலைப்பட்டோம். இருப்பினும்
பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் இது குறித்த கலந்துரையாடல்கள்
ஆரம்பிக்கப்படவில்லை.

மக்கள்நேய பல்கலைக்கழகமும் தேசிய நெருக்கடியும்
சிறப்பு பத்தி/ ஜூலை
Read More »

அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை

இத்தகைய விடயமொன்றை முன்னிருத்தும் சம்பவமொன்று அன்றொருநாள்
என் வகுப்பில் நடந்தது‍ “நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று உங்கள்
எல்லோருக்கும் தெரியுமாதலால் நீங்கள் ஏன் அந்த விடயை தெரிவு
செய்தீர்கள் என்பதற்கான காரணங்களை கூறுங்கள்” என்று கூறினேன். அந்த
நேரத்தில், இரண்டாம் மொழி கற்பிக்கப்படும் என் வகுப்பறையில் உள்ள
மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட தெரிவுகளுக்கான காரணங்கள்
மற்றும் எவ்வாறு அவர்கள் அத்தெரிவுகளை நோக்கி உந்தப்பட்டார்கள்
போன்ற விடயங்களை கிரகிக்கும் சூழலை உருவாக்கி விட்டதாக நான்
நினைத்தேன்.

அனுசரித்தல், இணங்குதல் மற்றும் உடந்தையாயிருத்தல்: ஒரு இளம்
கல்வியியலாளரின் பார்வை
Read More »

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா?

மானிட மற்றும் சமூகவியல் கற்கைகள் முன்மைய காலங்களைக் காட்டிலும்
விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இத்துறைகளில் பெறப்படும் பட்டங்களின்
தேவைப்பாடு மற்றும் காலத்தின் பொருத்தப்பாடு என்பன சரமாரியாக
கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் மிகவுமே
வரையறுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் இத்துறைகளில் மேற்கொள்ளும்
பட்டப்படிப்புகளுக்காக செலவளிக்கப்படும் (அல்லது வீணாக்கப்படும்) நிதி,
உண்மையில் அர்த்தமுள்ள செலவீடா என்பது பலராலும் எழுப்பப்படும்
வினாவாக மாறியுள்ளது.

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சிக்கலானவையா? Read More »

வகுப்பறையில் பால்மையும் பாலுணர்வும்

வகுப்பறையானது புலமைத்துவம், பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும்
விமர்சனநோக்கை வளப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும். இத்தளமானது
பன்மைத்துவமான பாலினங்களை கொண்ட ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களையும் அவர்களின் பாலியல் தேர்வுகளையும் எவ்வித
ஒழிவுமறைவுமின்றி சுதந்திரமான வெளிப்படுத்த வாய்ப்பான தளமாக இருக்க
வேண்டும். இருப்பினும் இலங்கையில் காணப்படும் வகுப்பறைகள் பால்மை
மற்றும் பாலுணர்வு சார் படித்தரங்களை மீளுருவாக்கும் சமூக அமைப்பை
போன்ற நுண் உலகமாகவே காணப்படுகின்றது.

வகுப்பறையில் பால்மையும் பாலுணர்வும் Read More »

கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை

கௌஷல்யா பெரேரா எழுதிய கடந்த வார குப்பி ஆக்கத்தில் அவர் அரச
பல்கலைக்கழகங்களில் கல்விசார் ஊழியர்களை ஆட்சேர்த்தல், தக்கவைத்தல்
ஆகிய விடயங்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைளினால் தொழிலாளர்
நலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கல்விசார் ஊழியர்களை கவர்தலும் தக்கவைத்தலும்: இளம் விரிவுரையாளர்களின் பார்வை Read More »

பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…

ஒரு வருடங்களுக்கு முன்னர் (உலக வங்கியால் வழங்கப்பட்ட கடன்களால்
நிதியுதவி அளிக்கப்பட்ட) ஒரு பயிற்சிநெறியில் பட்டதாரிகளை
உருவாக்குவது கார்களை உற்பத்தி செய்வது போலானது எனச்
சொல்லப்பட்டது. வாங்குபவர்கள்- தொழில்வழங்குனர்கள்- அவர்கள் என்ன
பெறுகின்றார்கள் என தெரிய வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக
இருந்தால்…
Read More »

Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும்

கல்வியமைச்சு (MoE), தேசிய விஞ்ஞான அமைப்பு (NSF), தேசிய கல்வி
நிறுவகம் (NIE) ஆகியன மார்ச் 31ஆம் திகதி கொழும்பிலுள்ள ரோயல்
கல்லூரியில் ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. நிகழ்வில்
கலந்துகொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அவர்கள்
2024இலிருந்து STEAM கல்வியை (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,
கலை, கணிதம்) அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கமானது
இலங்கையின் கல்வி அமைப்பை மாற்றியமைக்கப்போவதாகக் கூறினார்.
STEAMஆனது இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான அமைப்பை (NSF)
மையப்புள்ளியாக நியமித்து அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட STEMஐ
(விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) விட
வித்தியாசாமானது.

Mcகல்வி: STEM/STEAM கல்வியில் காணப்படும் சிக்கல்களும் சவால்களும் Read More »

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டில் சமூக நலனும் இலவசக் கல்வியும்

கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பதினேழாவது ஒப்பந்தமானது
அதற்கு முன்னையவற்றிலும் பார்க்க விபரீதமானதாகும். இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக
அதன் வெளிக் கடனைத் தீர்க்கத் தவறிய இத் தருணத்தில் இவ்வொப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டமை அதற்கான காரணம் எனலாம். இலங்கைக்கும் அதன் அந்நியக்
கடனாளர்களுக்கும் இடையே, கடன் மீள்கட்டமைப்புத் தொடர்பாக சர்வதேச நாணய
நிதியமானது மத்தியஸ்தம் செய்கின்றது. இதனால் இலங்கை கணிசமான அந்நிய முதலீட்டைப்
பெற்றாலும், நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட நேர்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டில் சமூக நலனும் இலவசக் கல்வியும் Read More »

அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும்

குணதாஸ அமரசேகரவின் இனிமகே இஹலட (ஏணியில் மேல்நோக்கி) என்ற நூலில்,
கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவனான பியதாஸ, கதிர்காமத்தில்
இடம்பெறும் தினசரி தேவபூஜையில் மெய்யுணர்வொன்றை அனுபவிக்கிறார். ஆரம்பத்தில்
நடனக்கலைஞர்களின் துடிப்பான சந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு வலுவான சிற்றின்பத்
தூண்டுதலை உணர்கின்றார். எனினும் சொற்ப நேரத்தில் அத்தகைய உணர்ச்சியையிட்டுக்
குற்றவுணர்வடையும் பியதாஸ, அவ்விடத்தை விட்டுக் கிரி வெஹெரவை நோக்கிச் செல்கிறார்.

அநுசரிப்புக் கலாசாரமும் உடல்-உள நெறிப்படுத்தலும் Read More »

பல்கலைக்கழகங்களில் பெண் பெரும்பான்மையும் அதற்கான எதிர்காலமும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களுக்கேற்ப, அவ்வாண்டில் உள்வாங்கப்பட்ட 109,660 மாணவர்களில் 64.3 சதவீதமானோர் பெண்களாவர். பெண்கள் பெரும்பான்மையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் பெண் பெரும்பான்மையும் அதற்கான எதிர்காலமும் Read More »