பல்கலைக்கழகமும் தற்போதைய நெருக்கடியும்
இலங்கையர்கள் ஊழலுக்கெதிரான தமது போராட்டத்தை
தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபாய
ராஜபக்ஷ அவர்களையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது
குடும்பத்தாரையும் பதவிவிலகக்கோரி வருகின்றனர். இவ்வாறான
கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அதிலும் குறிப்பாக
ஒரு அரசாங்கத்தை பதவிவிலகக்கோரும் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கும்
வேளையில் பலமாக அமைந்த ஒரு அரசாங்கத்தின் விதி இத்தகைய சமூக
பொருளாதார இயல்வீழ்ச்சியை எவ்வாறு உருவாக்கியது என்பதே எனது
சிந்தனையாக இருக்கின்றது. இவ்வரசாங்கத்தினுள்ளும் அதற்கு வெளியேயும்
இருக்கின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், ஏனைய களங்கள், நடைமுறைகள்
மற்றும் பொறிமுறைகள் என்ன செய்துகொண்டிருந்தன அல்லது
என்னவாகின? எனது சூழமைவில் இருந்து பார்க்கையில், இவ்வாறான ஒரு
கொடுங்கனவு உருவாகும் வரை பல்கலைக்கழகங்கள் என்ன
செய்துகொண்டிருந்தன?