கட்டுரை

மேலாதிக்கங்களும் இனப்பல்வகைமையும்

இன-மத ரீதியில் சிறுபான்மையைச் சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகங்களில்  கொடுக்கப்படும் இடம் யாது? தமது அடையாளங்களையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டுவதற்கான பாதுகாப்பான சூழலோ, சுதந்திரமோ அவர்களுக்கு உள்ளதா?

கல்வியில் காலனித்துவ நீக்கம்

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட சமூகங்களைப் பொறுத்த வரையில் காலனித்துவ நீக்கத்தில் பாரிய பங்கு வகிப்பது கல்வியாகும். மாறாக காலனித்துவம் உண்டாவதிலும் கல்வியின் பங்கு பெரியதாகையால் இது எதேர்ச்சியான ஒரு விடயம் அல்ல. கல்வியை மீள் வடிவமைப்பதில் காலனித்துவ நீக்கத்தை நாம் நாடுகின்றோம்.

சிலருக்கு மட்டுமே கல்வி?

“என்னால் கவனம் செலுத்தவோ, தொடர்ச்சியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கவோ முடிவதில்லை. எனினும் எனது பெற்றோரோ ஆசிரியர்களோ இதனை ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை. எனது நடவடிக்கைகள் வன்முறையாக மாறும் போதே எனது பிரச்சினை இனங்காணப்பட்டது.  நான் சலித்திருந்தேன். ஒன்று திரட்டப்பட்ட எனது விரக்தி உதவிக்கான ஒரு குரலாய் வெளிவந்தது.”- லக்கி, பல்கலைக்கழக மாணவன்.

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும்

சிவமோகன் சுமதி எம் மத்தியில் பெரிதும் நிலவி வரும் பேசப்படா வன்முறைகளிலொன்று பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையுமாகும். எமது ஆணாதிக்கம் நிறைந்த அதிகாரத் தாபனங்களில் “பாலினம்” என்பது ஆண், பெண் என்ற இருமமாகவும், பெண்மை என்பது கீழ் நிலையாகவும் கருதப்படுகின்றது. பாலியல் வன்முறையை எதிர்கொள்ள எமது கல்வி வளாகங்களில் பாலினம், பெண்கள் மற்றும் வேறு பாலினத்தாரை ஓரங்கட்டல் போன்றவை தொடர்பான கேள்விகள் தொடுக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறையானது அசாதாரணமான ஒரு விடயமாகவும் இயல்பாகவே காணப்படும் பாலின வேறுபாடுகளால் …

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும் Read More »

கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும்

அரச பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் அல்லது கலைப்பீடங்கள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபடாதுள்ளன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். நாம் எத்தனை ஆய்வுகளில் ஈடுபடுகின்றோம்? அதன் தரம் என்ன? விஞ்ஞானப் பிரிவுகளுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதிருப்பது ஏன்? ஏன் எமது ஆய்வுகள் வெளியிடப்படுவதில்லை?

இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும்

இலங்கையில் உயர் கல்வியின் மேம்பாடானது மிகவும் காலதாமதமாக்கப்பட்ட விடயம் என்பது சகலரும் அறிந்ததே. எனினும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வெறும் படிவம் நிரப்பும் கட்டமைப்புக்குள் வரையறுத்து, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குட்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை அதிகரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானது.

கல்வியின் இராணுவமயமாக்கலும் “நெறிப்படுத்தலின்” வியாபாரமும்

தற்சமயம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களின் பிரதான அரசியல் உந்துசக்தியாக இருந்தது சமுதாயத்தை “நெறிப்படுத்துவது” ஆகும். மக்கள் பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தமைக்குப் பின்னால் நெறிப்படுத்தப்பட்ட சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இலவசக் கல்விக்குச் சார்பாக…..

ஷாமலா குமார் எமது நாடானது கட்டியெழுப்பப்பட்டு, தற்போது நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு அதன் சட்டம், பொருளாதாரம், மற்றும் பொது நிறுவனங்களில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் திறவுகோலாக இருப்பது கல்வி. கல்வியும் ஜனநாயகமும் ஒன்றிலிருந்தொன்று உருவாவதோடு அவை இரண்டும் ஒன்றையொன்று மேம்படுத்துகின்றன. ஜனநாயகத்துடன் கூடிய கட்டமைப்புக்கள் கல்விக்குக் களமமைக்கின்றன. இதனூடாக எமது பொதுவானதும், வேறுபடுவதுமான யதார்த்தங்களை எம்மால் விளங்கிக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. உண்மைகளைத் தேடுவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் எம்மைத் தூண்டுவதனூடாகக் கல்வியானது எமது சுகாதாரம், …

இலவசக் கல்விக்குச் சார்பாக….. Read More »

அவசர நிலைகளும் புதிய வெளிப்பாடுகளும்: கல்வியில் ஜனநாயகம்

சிவமோகன் சுமதி உலகளாவிய ரீதியிலான கோவிட் நோய்த்தொற்று நிலைமைக்கு மத்தியில் அரை ஆண்டு நிறைவை எமது “குப்பி டாக்” எட்டுகின்றது. கடந்த சில மாதங்களில் கோவிட் நெருக்கடியில் எமது நாடு சிக்குண்டதையும் எமது பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதையும் கண்கூடாகப் பார்த்தோம். இவற்றுக்கு மத்தியில் ஏராளமான ஆர்ப்பாட்டங்களும் பதில்க் கிளர்ச்சிகளும். இதனுடன் தொடர்புடைய எழுத்தாளர்கள் பலரும் ஏறக்குறைய கடந்த ஆண்டு பூராகவும் இந்த நோய்த்தொற்றினால் புதிதாகத் தோன்றிய மற்றும் மேலும் தீவிரப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகத் தர்க்க ரீதியான கேள்விகளை …

அவசர நிலைகளும் புதிய வெளிப்பாடுகளும்: கல்வியில் ஜனநாயகம் Read More »

தர்க்க ரீதியான சிந்தனையும் பல்கலைக்கழகக் கல்வியின் “மதிப்பும்”

ஹர்ஷன ரம்புக்வெல்ல தர்க்க ரீதியான சிந்தனை என்ற பதத்தைப் பொது மற்றும் உயர் கல்வியில் தற்போது பரவலாகக் காணலாம். கல்வி தொடர்பான கொள்கை அறிக்கைகளில் அதன் பயன்பாடு அதிகம். கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவோர் பலர் இதனை ஒரு முக்கிய ஆற்றலாகக் கருதுகின்றார்கள். வினைத்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகக் கல்வியை நோக்குவோரும் இதனை ஒரு சாதகமான விடயமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும் தர்க்க ரீதியான சிந்தனை என்றால் என்ன என்பதற்கான தெளிவு சொற்ப அளவே காணப்படுகின்றது. …

தர்க்க ரீதியான சிந்தனையும் பல்கலைக்கழகக் கல்வியின் “மதிப்பும்” Read More »