கட்டுரை

நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான‌ போராட்டம்

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டமானது மாணவர்கள் தமது கல்வி, அதன் வகிபங்கு, நோக்கங்கள், தாம் பயிலுகின்ற‌ துறை பற்றி விளங்கிக்கொள்ளுவதிலே தாக்கம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தின் மூலமாக (ஆதிக்கமான) கருத்தியலின் இயல்பாக்கமும், சமூகமயமாக்கமும் நிகழும் அதேவேளை, பாடத்திட்டமானது அதிகாரங்களுக்கு எதிரான செயன்முறைகளை வடிவமைப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளது.

ஆங்கிலம் என்ற கேள்வி

நிகொலா பெரேரா வழக்கமான கருத்து: பொதுக் கல்வியானது தோற்றுவிட்டது பெரும்பாலான கலைப் பட்டதாரிகள் வேலையின்றிக் காணப்படுவதற்கான காரணம் அவர்களது ஆங்கிலப் புலமைக் குறைபாடே எனக் கருதுகிறது தனியார் துறை. கலை மற்றும் மனிதநேயப் பட்டமானது பயனற்றது என்பது ஒரு வழமையான கருத்தாகும். பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையை அளிக்கத் தவறுகின்றன என்ற வெளித்தோற்றமானது இக் கருத்தை மேலும் வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. கலைப் பட்டதாரிகள் பொதுமக்கள் கண்ணோட்டத்தில் தோல்வியடைந்தவர்களாக எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்வையிடப்படுகின்றது. மேலும் …

ஆங்கிலம் என்ற கேள்வி Read More »

பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும்

ரம்யா குமார் பல்கலைக்கழகங்களில் “வன்முறை” எனக் கூறியதும் இயல்பாகவே எமது கலந்துரையாடல்கள் பகிடிவதையின் பால் திரும்பிவிடுகின்றன. சில சமயங்களில் வழக்கமான நடைமுறைகளையோ அதிகாரத்தையோ பின்பற்றாத துணைவேந்தரோ கல்வியாளரோ திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாகப் பேசிக்கொள்கின்றோம். எனினும் இவற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களில் தினசரி இடம்பெறும் பால், இனம், வர்க்கம் ரீதியான வன்முறைகள் மறைந்தே காணப்படுகின்றன. பல அரச பல்கலைக்கழகங்களின் மாணவ மற்றும் ஆசிரிய சமூகங்களுடனான உரையாடல்களைக் கொண்டு பால் அடிப்படையிலான வன்முறை எமது நாளாந்த வாழ்வில் எவ்வாறு …

பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும் Read More »

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம்

கெளஷல்யா ஹேரத் இலங்கையில் உயர் கல்வி மீதான அண்மைக்கால சமூக-அரசியல் வாதங்கள் சந்தைக்கான மனித மூலதனத்தை வழங்கும் புதிய-தாராளவாத நிறுவனங்களாக எமது பல்கலைக்கழங்கள் நோக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. (உலக) பொருளாதாரத்துக்குப் பங்களிக்ககூடிய, பொருத்தமான ஆற்றல்கள், அறிவு, மற்றும் தகைமைகளைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதை அரசு கட்டாயப்படுத்துகின்றது. இதன் விளைவாகப் பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவுக் கல்வியானது ஓரங்கட்டப்பட்டு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் தொடர்பான STEM கற்கை நெறிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எமது பல்கலைக்கழகங்களும் உயர் கல்விக்கான இவ்வாறானதோர் அணுகுமுறையை எதிர்க் …

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம் Read More »

உயர் கல்வியில் “தரம்”

கெளஷல்யா பெரேரா எமது பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மீதான பிரதான முறைப்பாடு அவர்களது “வேலைக்கமர்த்த முடியாத தன்மை” ஆகவுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களும் உலக வங்கியும் வேலையின்மையைக் குறைந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் புலமைக்குச் சமானப்படுத்தியுள்ளன. இவ்வாறான பலவீனங்களுக்கான காரணம் கல்வி மீதான அரச முதலீட்டின் பற்றாக்குறை எனப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எமது அரசாங்கமோ “வேலைக்கமர்த்தக் கூடிய” ஒரு பட்டதாரி அரச நிதியாலன்றி 2003 இலிருந்து உலக வங்கி மூலம் பெறப்படும் சுமார் 180 மில்லியன் USD …

உயர் கல்வியில் “தரம்” Read More »

“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?”

ஹஸினி லேகம்வாசம் கலைப்பிரிவைச் சார்ந்தோர் தற்போது மேற்கூறிய கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. கேள்விக்கான விடைகளோ எதுவித தெளிவையும் தருவதாக இல்லை. ஆகவே முதலாவதாக இந்தக் கேள்வியையும் அதனை உருவாக்கியுள்ள தவறான கருத்துகள் மூன்றையும் நோக்குவோம்: முதலாவது, ஒருவர் இறுதியில் என்ன தொழிலில் ஈடுபடுகிறாரோ அது அவரது கல்வியின் நேரடிப் பிரதிபலிப்பு என்ற ஊகம். இரண்டாவது, பட்டதாரிகளின் தொழில் விருப்பங்கள் உட்பட தொழிற்சந்தையின் பல உண்மை யதார்த்தங்களை “வேலைக்கமர்த்த முடியாமை” என்ற விவரணம் மறைத்துள்ளது. மூன்றாவது, …

“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?” Read More »

இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி

ஃபர்ஸானா ஹனிஃபா Image: கொழும்பில் வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்  அண்மையில் தேசிய தணிக்கைக் காரியாலயத்தினால் உயர் கல்வி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்று கலைப்பிரிவுக் கல்வியையும் பட்டதாரிகளின் வேலையின்மையையும் தொடுக்க முற்பட்டது. எமது இன்றைய பகுதி இவ்வறிக்கை தொடர்பாக பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் சிலர் முன்வைத்த மறுமொழியினை அடிப்படையாகக் கொண்டதாகும். கல்வி ரீதியான கொள்கைகள் பெரும்பாலும் பற்றாக்குறையான ஆய்வுகள், தவறான முன்னுரிமைகள், குறைபாடுள்ள பகுப்பாய்வுகளால் உந்தப்படுவதால் இவ்வறிக்கையின் சில கருத்துக்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இலங்கையின் கலைப்பிரிவுக் கல்வியைப் பொறுத்தவரையில் …

இலங்கையில் கலைப்பிரிவுக் கல்வி Read More »

கல்வியும் நல்லிணக்கமும்

அனுஷ்கா கஹந்தகமகே தசாப்தங்களாக நீடித்த யுத்தம், ஆயிரக்கணக்கான இளம் உயிர்களைக் காவுகொண்ட இரு இளைஞர் கலகங்களுக்கு (1971, 1988-89) மத்தியில் இச்சிறு தீவு ஒரு இரத்த ஆற்றையே கண்டுவிட்டது. யுத்தம் முடிந்தபோதும் வன்முறையானது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எனத் தடையின்றித் தொடர்கின்றது. அவற்றுக்கு மேலதிகமாக அண்மையில் சூட்கேஸ் ஒன்றினுள் தலையின்றிக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் போன்ற எண்ணற்ற கோரச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. யுத்தத்திற்குப் பின்பும் …

கல்வியும் நல்லிணக்கமும் Read More »

பரவலாகும் பகிடிவதை

ஷாமலா குமார் பகிடிவதை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் பற்றிப் பகிரங்கமாகப் பேசிய மாணவன், வேறு தவறான உள் நோக்கங்களைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான். பகிடிவதை இடம்பெறுவதைக் கண்டு அதை எதிர்த்து கருத்து தெரிவித்த கனிஷ்ட கல்வியாளர் பகிடிவதை செய்வோர் மட்டுமன்றி ஏனைய கல்வியாளர்களாலும் கண்டிக்கப்படுகிறார். பகிடிவதையைத் தடுப்பதற்காக பாடுபட்ட பீட உறுப்பினர், மாணவர்களிடையே பிரிவினையை உண்டுபடுத்தியதாகப் பழி சுமத்தப்பட்டு இழிவுபடுத்தப்படுகிறார். பகிடிவதை தொடர்பாக நடத்திய மதிப்பாய்வொன்றில் “இப்போதாவது எம்மால் பகிடிவதை பற்றி பேசக்கூடியதாகவுள்ளது,” என …

பரவலாகும் பகிடிவதை Read More »

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு வழுக்கள்

இலங்கையின் கல்வி முறையானது காலங்கடந்தது என இழிவுபடுத்தப்படுவது வழக்கம். இருப்பினும் இலவசப் பொதுக் கல்விக்கான கேள்விக்கோ எவ்வித குறைவும் இல்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது.