ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல்
6 மாசி, 2024ல் விஷ்விகா அவர்களால் எழுதப்பட்ட குப்பி ஆக்கமான
‘இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு,’
இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்பவர் மீது திணிக்கப்படும்
தரவரையறைகளில் உள்ள பல்வேறான சிக்கல்கள் குறித்து அலசுகின்றது.
அவரின் அவதானங்களில் முக்கியமானது ஆங்கிலக் கல்வி பயிற்றுனர்கள்
(ELT) அனைவராலும் எதிர்கொள்ளப்படும் வருந்தத்தக்க யதார்த்தமான
‘தரவரையறைகளை’ பேணும் இறுக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்பவர்களின்
கருத்தாக்கங்களை பயிற்றுனர்கள் இருட்டடிக்கும் நிலை உருவாவதாகும்.
இந்த விவாதத்தை விரிவாக்கும் நோக்கில் மதுரங்க கலுகம்பிட்டிய
அவ்ர்களால் 2 சித்திரை, 2024ல் எழுதப்பட்ட ‘இலங்கையில் ஆங்கில மொழிக்
கற்பித்தல் புலத்தில் இலங்கை ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்’ என்ற
ஆக்கமானது யதார்த்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட
தரவரையறைகளானவை, அது சார்ந்த நிலப்பரப்பிற்கேற்ப தகவமைக்கப்பட்டு
அதன் மொழிப்பாவனையாளர்களை சந்தர்ப்பங்களுக்கேற்ப பொருத்தக்கூடிய
அமைப்பை உருவாக்குபவை ஆகும்.