சிறப்புப் பகுதி

ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல்

6 மாசி, 2024ல் விஷ்விகா அவர்களால் எழுதப்பட்ட குப்பி ஆக்கமான
‘இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு,’
இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்பவர் மீது திணிக்கப்படும்
தரவரையறைகளில் உள்ள பல்வேறான சிக்கல்கள் குறித்து அலசுகின்றது.
அவரின் அவதானங்களில் முக்கியமானது ஆங்கிலக் கல்வி பயிற்றுனர்கள்
(ELT) அனைவராலும் எதிர்கொள்ளப்படும் வருந்தத்தக்க யதார்த்தமான
‘தரவரையறைகளை’ பேணும் இறுக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்பவர்களின்
கருத்தாக்கங்களை பயிற்றுனர்கள் இருட்டடிக்கும் நிலை உருவாவதாகும்.
இந்த விவாதத்தை விரிவாக்கும் நோக்கில் மதுரங்க கலுகம்பிட்டிய
அவ்ர்களால் 2 சித்திரை, 2024ல் எழுதப்பட்ட ‘இலங்கையில் ஆங்கில மொழிக்
கற்பித்தல் புலத்தில் இலங்கை ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்’ என்ற
ஆக்கமானது யதார்த்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட
தரவரையறைகளானவை, அது சார்ந்த நிலப்பரப்பிற்கேற்ப தகவமைக்கப்பட்டு
அதன் மொழிப்பாவனையாளர்களை சந்தர்ப்பங்களுக்கேற்ப பொருத்தக்கூடிய
அமைப்பை உருவாக்குபவை ஆகும்.

கடன் மறுசீரமைப்பும் குருதி வழியும் கல்வித்துறையும்

இலவசக்கல்வி என்பது எமது சமூகத்தின் முக்கியமான தூண்களில்
ஒன்றாகும். இன்றைய பத்தியில் நான், இலங்கையில் அதன்
வெளிவாரிக்கடன்கள் மீதான‌ முதலாவது தாமதம் மற்றும் நாட்டின்
வெளிவாரிக்கடன் பற்றாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச
நாணய நிதியத்தின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து கல்வித்துறை
முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் பற்றி அலசப்போகின்றேன்.

எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்

‘எண்ணிம இடைவெளி’ மற்றும் செயற்கை நுண்ணறிவு

‘எண்ணிம இடைவெளி’ எனும் சொல்லாடல் 1990களில் அமெரிக்காவில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வளங்களை அணுகுவதில் காணப்படும்
பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை குறிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் அது உலகளாவிய அளவில்
பயன்படுத்தப்படும் சொல்லானது.

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?

புகைப்படம்: பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏனைய விடயங்கள் உட்பட
கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ ஒதுக்கக்கோரி
மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம்

சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி

கண்டி நகரத்தில் பிறந்து பாடசாலைக்கு சென்றவள் என்ற வகையில் நான்
குறைந்தது பத்து தடவைகளாவது எசல பெரஹெரவை பார்த்திருப்பதோடு
பாடசாலை நாட்களில் குறைந்தது ஐந்து தடவைகளாவது அதனை
வரைந்திருப்பேன். கண்டி வாவியை சூழ இருக்கும் பாடசாலைகளுக்கு
ஆகஸ்ட் மாதமே சிறந்ததாகும். எசல பெரஹெரவுக்கு பாதுகாப்பு வழங்கும்
படைகளுக்கான தங்குமிட வசதிகளை மேற்கொள்ள வேண்டி பாடசாலைகள்
அதிக நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும். ஐஸ்கிரீம் வண்டிகள், தும்புமிட்டாய்
வியாபாரிகள், சோளகப்பொரி, இறால்வடை, மிருக உருவ பலூன்கள்,
ஊதிகள், பளபளக்கும் குச்சிகள் என எனது சிறுபராயம் மிக
கொண்டாட்டமானதாக இருந்தது. சிறுவயதில் அதனை நான் ஒரு சர்க்கஸ்
கூடமாகவே ரசித்தேன். ஏன் மக்கள் “சாது சாது” என கைகளை
உயர்த்துகிறார்கள்? ஏன் யானைகள் ஊர்வலம் வருகின்றன?

MBBSக்கான விண்ணப்பங்களைக் கோருதல்!
இராணுவ பாதுகாப்பின் கீழ் மருத்துவ கல்விக்கான கட்டணங்களை
அறிமுகப்படுத்தல்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதியால் (பாதுகாப்பு அமைச்சராக)
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவான கொத்தலாவல
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) கட்டணம் செலுத்தும் உள்நாட்டு
மாணவர்களை மருத்துவ கற்கைகளுக்கு அனுமதிப்பதற்கான
முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, KDU
இணையதளத்தின் மூலம் உள்நாட்டு மாணவர்களிடம் (விடுதியில் தங்காது
பயிலும் மாணவர்) MBBS கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டு வெறுமனே 2 வாரங்களே வழங்கப்பட்ட
நிலையில் மே 5ஆம் திகதி முடிவுத்தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.