சிறப்புப் பகுதி

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா?

ரம்யா குமார் இன்னொரு புதிய அணி மாணவர்கள் எமது பீடத்துக்கு வந்துள்ளனர். கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிருந்தும் வந்துள்ள இம் மாணவர்கள் எம் பல்கலைக்கழகங்களிலே சமூக மற்றும் இன ஒருங்கியைதலை முன்னேற்ற எமக்குள்ள மகத்தான வாய்ப்பை பற்றி எனக்கு இன்னொருமுறை ஞாபகப்படுத்துகின்றனர். இருப்பினும் கவலைக்கிடமாக, முதல் சில அரையாண்டுகளில் பல மாணவர்கள் ஏனையோரோடு தொடர்புபட்டு செயற்படுவதில்லை. இதன் காரணம் ஒருவர் இன்னொருவர் மொழியை பேசாமலிருப்பது மட்டுமில்லை. எமது சமுதாயத்தின் சமூகங்களிடேயே இன்னமும் தொடரும் ஒருவரை ஒருவர் பற்றியதான […]

பொதுக் கல்வி சீர்திருத்தங்கள்: மொழி மற்றும் இனம் பற்றி ஒன்றுமில்லையா? Read More »

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல்

சுமதி சிவமோகன் மிகக்குறுகிய காலப்பகுதியான கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், ‘டிட்வா’ (Detwah) சூறாவளி நம்மிடையே முன்னொரு போதும் இல்லாத அளவிலான ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பெரும்பகுதியை சுழற்றியடித்துள்ள இப்புயல், பல நூற்றாண்டுகள் பழைமையான கட்டமைப்புகளின் அரண்களைத் தகர்த்தெறிந்துள்ளதோடு, ஒரு காலத்தில் பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட பகுதிகளையும் தாக்கியுள்ளது. மழை நின்றிருக்கலாம். வெள்ள நீர் வடியும், கடைகள் மீண்டும் திறக்கப்படும், குழாய்களில் தண்ணீர் வரும், நாம் மீண்டும் எமது அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால்,

ஓர் விழிப்பு – டித்வா புயலுக்கு பின்னர்  கல்வி கொள்கைகளை மீழ்பார்வை செய்தல் Read More »

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல்

அகிலன் கதிர்காமர் இலங்கை பொதுக்கல்வி முறைமையின் தனித்தன்மையான பலம் அது பல்கலைக்கழக மட்டம் வரை இலவசமாக காணப்படுவது ஆகும். மேற்குலகம் உட்பட வேறு நாடுகளில் மாணவர் கடன்களின் கனத்த அளவை பார்க்கும்போது எமது இளைஞருக்கு இலவசக் கல்வி எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக இருந்துள்ளது என்பது தெரிகிறது. வருத்தமளிக்கும் இன்றைய போக்கை பார்க்கும்போது தனியார் பல்கலைக்கழகங்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படும்போது தனியார் மயமாக்கலின் வான்கதவுகள் திறந்து விடப்படும்போது பலருக்கு உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்படும்; விரிவுரையாளர்கள் தனியார்

உயர்கல்வியிலும் ஆய்வுகளிலும் அரச நிதி வழங்கல் Read More »

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும்

ஷாமலா குமார் அறிவிக்கப்பட்ட பிரதான பொதுக் கல்வி பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பரிசீலனை செய்து கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு ஆவணமும் வழங்கப்படாமை இக்கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான எனது பிரதான கரிசனைகளில் ஒன்றாகும். பொது/ அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமையை கொண்டவை. இவ்வாறு இருப்பதற்கு பதிலாக, தரம் ஒன்பதில் அறிமுகப்படுத்தவிருக்கும் “சைகோமெட்ரிக்ஸ் சோதனைகளை” நான் கவனம் செலுத்த முயன்றபோது, செய்தித் துணிக்கைகள், கல்வி அமைச்சின் அலுவலர்களுடான உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களையே நான்

சைக்கோமெட்ரிக்சும் பொதுக் கல்விக்கான பாடத்திட்டமும் Read More »

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள்

உடாரி அபேயசிங்க பல்கலைக்கழகச் சூழல்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சக ஊழியர் உறவு முதல் நுட்பமான பகைமை வரையிலான பல்வேறுபட்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் இளைய உறுப்பினர்களைக் கண்ணியத்துடன் பணியாற்ற உண்மையாகவே அனுமதிக்கின்றனவா என்று கேட்பது அவசியமாகிறது. நமது கல்விச் சூழல்கள், உண்மையிலேயே தகுதியான நியாயம், மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வளர்க்கின்றனவா, அல்லது இந்தக் கொள்கைகளையே தொடர்ந்து சிதைக்கின்றனவா? மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக பகிடிவதை, பாலியல்-பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றி நாம் அடிக்கடி

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள் Read More »

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்

ஹாசினி லேகம்வசம் என்னுடைய தற்போதைய கள ஆய்வுகள் இலங்கையில் விவசாயம் சார் அரசியல் பற்றியதாகும். விவசாயத்தில் என்ன நடக்கின்றது என்பதோடு நேரடியாக தொடர்புபடவிட்டாலும் அங்கே நடப்பவற்றை பாரியளவில் தீர்மானிக்கும் பல விடயங்களை நான் இதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். தினசரி வீட்டு வாழ்க்கையின் இயங்கியல்கள் எவ்வாறு விவசாயம் சார் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை நான் கற்ருக்குக்கொண்டுள்ளேன். விவசாயம் சார் தேவைகளுக்காக எடுக்கப்படும் கடன்கள் விவசாயத்தில்தான் செலவிடப்படுகின்றவா? நெருங்கிய உறவுகள் எவ்வாறு விவசாய நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்றன (உதாரணமாக யார்

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »