கட்டுரை

கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும்

அரச பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் அல்லது கலைப்பீடங்கள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபடாதுள்ளன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். நாம் எத்தனை ஆய்வுகளில் ஈடுபடுகின்றோம்? அதன் தரம் என்ன? விஞ்ஞானப் பிரிவுகளுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதிருப்பது ஏன்? ஏன் எமது ஆய்வுகள் வெளியிடப்படுவதில்லை?

கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும் Read More »

இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும்

இலங்கையில் உயர் கல்வியின் மேம்பாடானது மிகவும் காலதாமதமாக்கப்பட்ட விடயம் என்பது சகலரும் அறிந்ததே. எனினும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வெறும் படிவம் நிரப்பும் கட்டமைப்புக்குள் வரையறுத்து, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குட்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை அதிகரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானது.

இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும் Read More »

கல்வியின் இராணுவமயமாக்கலும் “நெறிப்படுத்தலின்” வியாபாரமும்

தற்சமயம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களின் பிரதான அரசியல் உந்துசக்தியாக இருந்தது சமுதாயத்தை “நெறிப்படுத்துவது” ஆகும். மக்கள் பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தமைக்குப் பின்னால் நெறிப்படுத்தப்பட்ட சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

கல்வியின் இராணுவமயமாக்கலும் “நெறிப்படுத்தலின்” வியாபாரமும் Read More »

இலவசக் கல்விக்குச் சார்பாக…..

ஷாமலா குமார் எமது நாடானது கட்டியெழுப்பப்பட்டு, தற்போது நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு அதன் சட்டம், பொருளாதாரம், மற்றும் பொது நிறுவனங்களில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் திறவுகோலாக இருப்பது கல்வி. கல்வியும் ஜனநாயகமும் ஒன்றிலிருந்தொன்று உருவாவதோடு அவை இரண்டும் ஒன்றையொன்று மேம்படுத்துகின்றன. ஜனநாயகத்துடன் கூடிய கட்டமைப்புக்கள் கல்விக்குக் களமமைக்கின்றன. இதனூடாக எமது பொதுவானதும், வேறுபடுவதுமான யதார்த்தங்களை எம்மால் விளங்கிக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. உண்மைகளைத் தேடுவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் எம்மைத் தூண்டுவதனூடாகக் கல்வியானது எமது சுகாதாரம்,

இலவசக் கல்விக்குச் சார்பாக….. Read More »

அவசர நிலைகளும் புதிய வெளிப்பாடுகளும்: கல்வியில் ஜனநாயகம்

சிவமோகன் சுமதி உலகளாவிய ரீதியிலான கோவிட் நோய்த்தொற்று நிலைமைக்கு மத்தியில் அரை ஆண்டு நிறைவை எமது “குப்பி டாக்” எட்டுகின்றது. கடந்த சில மாதங்களில் கோவிட் நெருக்கடியில் எமது நாடு சிக்குண்டதையும் எமது பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதையும் கண்கூடாகப் பார்த்தோம். இவற்றுக்கு மத்தியில் ஏராளமான ஆர்ப்பாட்டங்களும் பதில்க் கிளர்ச்சிகளும். இதனுடன் தொடர்புடைய எழுத்தாளர்கள் பலரும் ஏறக்குறைய கடந்த ஆண்டு பூராகவும் இந்த நோய்த்தொற்றினால் புதிதாகத் தோன்றிய மற்றும் மேலும் தீவிரப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகத் தர்க்க ரீதியான கேள்விகளை

அவசர நிலைகளும் புதிய வெளிப்பாடுகளும்: கல்வியில் ஜனநாயகம் Read More »

தர்க்க ரீதியான சிந்தனையும் பல்கலைக்கழகக் கல்வியின் “மதிப்பும்”

ஹர்ஷன ரம்புக்வெல்ல தர்க்க ரீதியான சிந்தனை என்ற பதத்தைப் பொது மற்றும் உயர் கல்வியில் தற்போது பரவலாகக் காணலாம். கல்வி தொடர்பான கொள்கை அறிக்கைகளில் அதன் பயன்பாடு அதிகம். கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவோர் பலர் இதனை ஒரு முக்கிய ஆற்றலாகக் கருதுகின்றார்கள். வினைத்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகக் கல்வியை நோக்குவோரும் இதனை ஒரு சாதகமான விடயமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும் தர்க்க ரீதியான சிந்தனை என்றால் என்ன என்பதற்கான தெளிவு சொற்ப அளவே காணப்படுகின்றது.

தர்க்க ரீதியான சிந்தனையும் பல்கலைக்கழகக் கல்வியின் “மதிப்பும்” Read More »

நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான‌ போராட்டம்

பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டமானது மாணவர்கள் தமது கல்வி, அதன் வகிபங்கு, நோக்கங்கள், தாம் பயிலுகின்ற‌ துறை பற்றி விளங்கிக்கொள்ளுவதிலே தாக்கம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தின் மூலமாக (ஆதிக்கமான) கருத்தியலின் இயல்பாக்கமும், சமூகமயமாக்கமும் நிகழும் அதேவேளை, பாடத்திட்டமானது அதிகாரங்களுக்கு எதிரான செயன்முறைகளை வடிவமைப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளது.

நவதாராளவாதக் காலத்தில் ஜனநாயகபூர்வ பாடத்திட்டத்துக்கான‌ போராட்டம் Read More »

ஆங்கிலம் என்ற கேள்வி

நிகொலா பெரேரா வழக்கமான கருத்து: பொதுக் கல்வியானது தோற்றுவிட்டது பெரும்பாலான கலைப் பட்டதாரிகள் வேலையின்றிக் காணப்படுவதற்கான காரணம் அவர்களது ஆங்கிலப் புலமைக் குறைபாடே எனக் கருதுகிறது தனியார் துறை. கலை மற்றும் மனிதநேயப் பட்டமானது பயனற்றது என்பது ஒரு வழமையான கருத்தாகும். பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையை அளிக்கத் தவறுகின்றன என்ற வெளித்தோற்றமானது இக் கருத்தை மேலும் வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. கலைப் பட்டதாரிகள் பொதுமக்கள் கண்ணோட்டத்தில் தோல்வியடைந்தவர்களாக எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்வையிடப்படுகின்றது. மேலும்

ஆங்கிலம் என்ற கேள்வி Read More »

பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும்

ரம்யா குமார் பல்கலைக்கழகங்களில் “வன்முறை” எனக் கூறியதும் இயல்பாகவே எமது கலந்துரையாடல்கள் பகிடிவதையின் பால் திரும்பிவிடுகின்றன. சில சமயங்களில் வழக்கமான நடைமுறைகளையோ அதிகாரத்தையோ பின்பற்றாத துணைவேந்தரோ கல்வியாளரோ திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாகப் பேசிக்கொள்கின்றோம். எனினும் இவற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களில் தினசரி இடம்பெறும் பால், இனம், வர்க்கம் ரீதியான வன்முறைகள் மறைந்தே காணப்படுகின்றன. பல அரச பல்கலைக்கழகங்களின் மாணவ மற்றும் ஆசிரிய சமூகங்களுடனான உரையாடல்களைக் கொண்டு பால் அடிப்படையிலான வன்முறை எமது நாளாந்த வாழ்வில் எவ்வாறு

பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும் Read More »

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம்

கெளஷல்யா ஹேரத் இலங்கையில் உயர் கல்வி மீதான அண்மைக்கால சமூக-அரசியல் வாதங்கள் சந்தைக்கான மனித மூலதனத்தை வழங்கும் புதிய-தாராளவாத நிறுவனங்களாக எமது பல்கலைக்கழங்கள் நோக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. (உலக) பொருளாதாரத்துக்குப் பங்களிக்ககூடிய, பொருத்தமான ஆற்றல்கள், அறிவு, மற்றும் தகைமைகளைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதை அரசு கட்டாயப்படுத்துகின்றது. இதன் விளைவாகப் பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவுக் கல்வியானது ஓரங்கட்டப்பட்டு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் தொடர்பான STEM கற்கை நெறிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எமது பல்கலைக்கழகங்களும் உயர் கல்விக்கான இவ்வாறானதோர் அணுகுமுறையை எதிர்க்

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காலனித்துவ நீக்கம் Read More »