இலங்கையின் பல்மருத்துவக் கல்வியின் சவால்களை வழிசெலுத்துதல்
உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது இலவசக்கல்வியின்
பிரதான கொள்கைகளிலொன்றாகும். 2020ஆம் ஆண்டில், அப்போதைய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால், தேர்தல் விஞ்சாபனத்தின்
அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியை 12,000ஆல்
அதிகரிக்கும் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC)
வழிகாட்டல் வழங்கப்பட்டது. அதனையடுத்து, பல்கலைக்கழகங்களில்
மாணவர் அனுமதி அதிகரிக்கப்பட்டதாயினும் பல்கலைக்கழகங்களுக்காக
ஒதுக்கப்பட்ட வளாங்களின் போதாமை மாணவர்களின் திடீர் அதிகரிப்பை
முகாமை செய்யுமளவு காணப்படவில்லை.