சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி
கண்டி நகரத்தில் பிறந்து பாடசாலைக்கு சென்றவள் என்ற வகையில் நான்
குறைந்தது பத்து தடவைகளாவது எசல பெரஹெரவை பார்த்திருப்பதோடு
பாடசாலை நாட்களில் குறைந்தது ஐந்து தடவைகளாவது அதனை
வரைந்திருப்பேன். கண்டி வாவியை சூழ இருக்கும் பாடசாலைகளுக்கு
ஆகஸ்ட் மாதமே சிறந்ததாகும். எசல பெரஹெரவுக்கு பாதுகாப்பு வழங்கும்
படைகளுக்கான தங்குமிட வசதிகளை மேற்கொள்ள வேண்டி பாடசாலைகள்
அதிக நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும். ஐஸ்கிரீம் வண்டிகள், தும்புமிட்டாய்
வியாபாரிகள், சோளகப்பொரி, இறால்வடை, மிருக உருவ பலூன்கள்,
ஊதிகள், பளபளக்கும் குச்சிகள் என எனது சிறுபராயம் மிக
கொண்டாட்டமானதாக இருந்தது. சிறுவயதில் அதனை நான் ஒரு சர்க்கஸ்
கூடமாகவே ரசித்தேன். ஏன் மக்கள் “சாது சாது” என கைகளை
உயர்த்துகிறார்கள்? ஏன் யானைகள் ஊர்வலம் வருகின்றன?
சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி Read More »