கட்டுரை

கல்வியில் காலனித்துவ நீக்கமும் தர்க்க ரீதியான சிந்தனையும்

உயர் கல்வியில், குறிப்பாக வரலாறு தொடர்பாக தர்க்க ரீதியான சிந்தனையின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்துகள் ஒரு சிலவற்றை இங்கே பகிர விரும்புகின்றேன்.

வடக்கிலே சாதியும் கல்வியும்

இன்றைய குப்பிக் கட்டுரை சாதிய‌ ஏற்றத்தாழ்வுகள் வடக்கில் இலவசக் கல்வியை எவ்வாறு சமத்துவமற்றதாக்குகின்றன‌ என்பது பற்றியது. அண்மையில் வட்டுக்கோட்டையில் ஒரு பஞ்சமர் சமூகத்தினர் (பஞ்சமர் என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான ஐந்து சாதிகளின் தொகுப்பாகும்.) சாதிய வன்முறையை எதிர்கொண்டனர்.

வட இலங்கையில் கற்பித்தல்: கல்வித் தரப்படுத்தலும் சமத்துவமின்மையும்

கல்விக்கான வாய்ப்பைப் பொறுத்த வரையில் இலங்கையின் முக்கிய மக்கட் தொகை மையங்களுக்கும் அதன் புறத்தே இருப்பவர்களுக்கும் சமனற்ற தன்மையே காணப்படுகின்றது. இங்கு கல்வியின் தரத்திலுள்ள வேறுபாடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதுண்டு. எனினும் கல்வி வாய்ப்பிலுள்ள வேறுபாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் அரிதானவை.

மேலாதிக்கங்களும் இனப்பல்வகைமையும்

இன-மத ரீதியில் சிறுபான்மையைச் சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகங்களில்  கொடுக்கப்படும் இடம் யாது? தமது அடையாளங்களையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டுவதற்கான பாதுகாப்பான சூழலோ, சுதந்திரமோ அவர்களுக்கு உள்ளதா?

கல்வியில் காலனித்துவ நீக்கம்

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட சமூகங்களைப் பொறுத்த வரையில் காலனித்துவ நீக்கத்தில் பாரிய பங்கு வகிப்பது கல்வியாகும். மாறாக காலனித்துவம் உண்டாவதிலும் கல்வியின் பங்கு பெரியதாகையால் இது எதேர்ச்சியான ஒரு விடயம் அல்ல. கல்வியை மீள் வடிவமைப்பதில் காலனித்துவ நீக்கத்தை நாம் நாடுகின்றோம்.

சிலருக்கு மட்டுமே கல்வி?

“என்னால் கவனம் செலுத்தவோ, தொடர்ச்சியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்கவோ முடிவதில்லை. எனினும் எனது பெற்றோரோ ஆசிரியர்களோ இதனை ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை. எனது நடவடிக்கைகள் வன்முறையாக மாறும் போதே எனது பிரச்சினை இனங்காணப்பட்டது.  நான் சலித்திருந்தேன். ஒன்று திரட்டப்பட்ட எனது விரக்தி உதவிக்கான ஒரு குரலாய் வெளிவந்தது.”- லக்கி, பல்கலைக்கழக மாணவன்.

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும்

சிவமோகன் சுமதி எம் மத்தியில் பெரிதும் நிலவி வரும் பேசப்படா வன்முறைகளிலொன்று பாலியல் துன்புறுத்தலும் பாலியல் வன்முறையுமாகும். எமது ஆணாதிக்கம் நிறைந்த அதிகாரத் தாபனங்களில் “பாலினம்” என்பது ஆண், பெண் என்ற இருமமாகவும், பெண்மை என்பது கீழ் நிலையாகவும் கருதப்படுகின்றது. பாலியல் வன்முறையை எதிர்கொள்ள எமது கல்வி வளாகங்களில் பாலினம், பெண்கள் மற்றும் வேறு பாலினத்தாரை ஓரங்கட்டல் போன்றவை தொடர்பான கேள்விகள் தொடுக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறையானது அசாதாரணமான ஒரு விடயமாகவும் இயல்பாகவே காணப்படும் பாலின வேறுபாடுகளால் …

பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளும் ஜனநாயகமயமாக்கலும் Read More »

கலைப்பீடங்களும் ஆய்வுகளின் மேம்பாடும்

அரச பல்கலைக்கழகங்கள், குறிப்பாக மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் அல்லது கலைப்பீடங்கள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபடாதுள்ளன என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். நாம் எத்தனை ஆய்வுகளில் ஈடுபடுகின்றோம்? அதன் தரம் என்ன? விஞ்ஞானப் பிரிவுகளுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதிருப்பது ஏன்? ஏன் எமது ஆய்வுகள் வெளியிடப்படுவதில்லை?

இலங்கையில் உயர் கல்வியும் படிவங்களூடான தர நிர்ணயமும்

இலங்கையில் உயர் கல்வியின் மேம்பாடானது மிகவும் காலதாமதமாக்கப்பட்ட விடயம் என்பது சகலரும் அறிந்ததே. எனினும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை வெறும் படிவம் நிரப்பும் கட்டமைப்புக்குள் வரையறுத்து, கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குட்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை அதிகரிப்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியானது.

கல்வியின் இராணுவமயமாக்கலும் “நெறிப்படுத்தலின்” வியாபாரமும்

தற்சமயம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களின் பிரதான அரசியல் உந்துசக்தியாக இருந்தது சமுதாயத்தை “நெறிப்படுத்துவது” ஆகும். மக்கள் பெரும்பான்மை தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தமைக்குப் பின்னால் நெறிப்படுத்தப்பட்ட சமுதாயமொன்றை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பு காணப்பட்டது.