வகுப்பறையில் பால்மையும் பாலுணர்வும்
வகுப்பறையானது புலமைத்துவம், பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும்
விமர்சனநோக்கை வளப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும். இத்தளமானது
பன்மைத்துவமான பாலினங்களை கொண்ட ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களையும் அவர்களின் பாலியல் தேர்வுகளையும் எவ்வித
ஒழிவுமறைவுமின்றி சுதந்திரமான வெளிப்படுத்த வாய்ப்பான தளமாக இருக்க
வேண்டும். இருப்பினும் இலங்கையில் காணப்படும் வகுப்பறைகள் பால்மை
மற்றும் பாலுணர்வு சார் படித்தரங்களை மீளுருவாக்கும் சமூக அமைப்பை
போன்ற நுண் உலகமாகவே காணப்படுகின்றது.