Author name: Hasini Lecamwasam

கடன் மறுசீரமைப்பும் குருதி வழியும் கல்வித்துறையும்

இலவசக்கல்வி என்பது எமது சமூகத்தின் முக்கியமான தூண்களில்
ஒன்றாகும். இன்றைய பத்தியில் நான், இலங்கையில் அதன்
வெளிவாரிக்கடன்கள் மீதான‌ முதலாவது தாமதம் மற்றும் நாட்டின்
வெளிவாரிக்கடன் பற்றாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச
நாணய நிதியத்தின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து கல்வித்துறை
முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் பற்றி அலசப்போகின்றேன்.

கடன் மறுசீரமைப்பும் குருதி வழியும் கல்வித்துறையும் Read More »

எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்

‘எண்ணிம இடைவெளி’ மற்றும் செயற்கை நுண்ணறிவு

‘எண்ணிம இடைவெளி’ எனும் சொல்லாடல் 1990களில் அமெரிக்காவில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வளங்களை அணுகுவதில் காணப்படும்
பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை குறிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் அது உலகளாவிய அளவில்
பயன்படுத்தப்படும் சொல்லானது.

எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்
Read More »

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?

புகைப்படம்: பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏனைய விடயங்கள் உட்பட
கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ ஒதுக்கக்கோரி
மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம்

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?
Read More »

சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி

கண்டி நகரத்தில் பிறந்து பாடசாலைக்கு சென்றவள் என்ற வகையில் நான்
குறைந்தது பத்து தடவைகளாவது எசல பெரஹெரவை பார்த்திருப்பதோடு
பாடசாலை நாட்களில் குறைந்தது ஐந்து தடவைகளாவது அதனை
வரைந்திருப்பேன். கண்டி வாவியை சூழ இருக்கும் பாடசாலைகளுக்கு
ஆகஸ்ட் மாதமே சிறந்ததாகும். எசல பெரஹெரவுக்கு பாதுகாப்பு வழங்கும்
படைகளுக்கான தங்குமிட வசதிகளை மேற்கொள்ள வேண்டி பாடசாலைகள்
அதிக நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும். ஐஸ்கிரீம் வண்டிகள், தும்புமிட்டாய்
வியாபாரிகள், சோளகப்பொரி, இறால்வடை, மிருக உருவ பலூன்கள்,
ஊதிகள், பளபளக்கும் குச்சிகள் என எனது சிறுபராயம் மிக
கொண்டாட்டமானதாக இருந்தது. சிறுவயதில் அதனை நான் ஒரு சர்க்கஸ்
கூடமாகவே ரசித்தேன். ஏன் மக்கள் “சாது சாது” என கைகளை
உயர்த்துகிறார்கள்? ஏன் யானைகள் ஊர்வலம் வருகின்றன?

சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி Read More »

MBBSக்கான விண்ணப்பங்களைக் கோருதல்!
இராணுவ பாதுகாப்பின் கீழ் மருத்துவ கல்விக்கான கட்டணங்களை
அறிமுகப்படுத்தல்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதியால் (பாதுகாப்பு அமைச்சராக)
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவான கொத்தலாவல
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) கட்டணம் செலுத்தும் உள்நாட்டு
மாணவர்களை மருத்துவ கற்கைகளுக்கு அனுமதிப்பதற்கான
முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, KDU
இணையதளத்தின் மூலம் உள்நாட்டு மாணவர்களிடம் (விடுதியில் தங்காது
பயிலும் மாணவர்) MBBS கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டு வெறுமனே 2 வாரங்களே வழங்கப்பட்ட
நிலையில் மே 5ஆம் திகதி முடிவுத்தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

MBBSக்கான விண்ணப்பங்களைக் கோருதல்!
இராணுவ பாதுகாப்பின் கீழ் மருத்துவ கல்விக்கான கட்டணங்களை
அறிமுகப்படுத்தல்
Read More »

NEPF வேண்டாம் என்போம்! இலவசக்கல்வியை ஒழிப்பதை எதிர்ப்போம்!-
பல்கலைக்கழக அமைப்பின் கல்வியியலாளர்கள் வெளியிடும் அறிக்கை

நாம் தற்காலத்தில் நம் நிலவுகைக்கே சவால் விடுக்கக்கூடிய பொருளாதாரநெருக்கடியொன்றுக்குள் இருக்கின்றோம். அதிகரித்து வரும் கடன் சுமைக்கும்மிகக்குறைவாகவே காணப்படும் பொருளாதார வாய்ப்புகளுக்கு மத்தியில்நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலம் மற்றும் அது தொடர்பான அரசியல்மற்றும் சமூக அழுத்தங்களுக்குள்ளே நாம் தொடர்ந்தும் உழல வேண்டியசூழல் ஏற்பட்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் கல்வித்துறையில்முன்னெடுக்கப்படும் பாரிய முன்மொழிவுகள் இத்தனை காலமும் எமது நாடுகல்வித்துறையை ஒரு சமூகப் பண்டமாக நோக்கி வந்த நிலையை மாற்றும்சூழலை உருவாக்கி அதற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைத்துள்ளமைபல்கலைக்கழக ஆசிரியர்களான எம்மை கவலைக்கிடமாக்குகின்றது. இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களுக்கான

NEPF வேண்டாம் என்போம்! இலவசக்கல்வியை ஒழிப்பதை எதிர்ப்போம்!-
பல்கலைக்கழக அமைப்பின் கல்வியியலாளர்கள் வெளியிடும் அறிக்கை
Read More »

‘பல்கலைக்கழகம்’ தொடர்பான விடயம்

கல்வியென்பது வெறுமனே சில தகுதிகளையும் திறன்களையும்
பெறுவதற்கான செயன்முறையாக்கப்பட்டு ‘மட்டப்படுத்தும்’ நிலைக்கு வரும்
போது ஆதாரபூர்வமாக அச்செயற்பாடு அரச பல்கலைக்கழக அமைப்பை
தகர்க்கும் செயலாக உருவெடுக்கின்றது: “நீங்கள் செய்யும் காரியங்கள்
குறைந்தளவான நேரத்திலும், குறைந்தளவான இடத்திலும், குறைந்தளவான
பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களாலும், நிகழ்நிலையிலும் கூட வழங்கப்பட
முடியுமாயின் இவற்றை பேணுவதற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றும் பௌதீக
வளங்களுக்கான நியாயப்பாடுதான் என்ன?”

‘பல்கலைக்கழகம்’ தொடர்பான விடயம் Read More »

இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்

பல தசாப்தங்களாக, குறிப்பாக திறந்த பொருளாதார முறைமை
அறிமுகப்படுத்தப்பட்ட 70’களுக்குப் பின்னரான காலத்தில் ஆங்கில மொழிக்
கற்பித்தலானது (ELT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக நாட்டில்
காணப்படுகின்றது. ஆங்கில மொழி கற்பித்தலானது உடனடி மற்றும்
காலத்துக்கு தேவையான தேவையாக பார்க்கபப்டுவதோடு பூகோளமயமாதல்
எனும் பரந்த கருத்தியலில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு
நேரடியாக இணைத்து பார்க்கப்படுகின்றது. இத்தலைப்புடன் கோர்க்கப்படும்
முக்கியத்தை விடுத்து நாட்டில் ஆங்கில மொழிக் கற்பித்தலானது பரவலாக
தோல்வியடைந்த விடயமாக கருதப்படுகின்றது. நாட்டில் ஆங்கிலக் கல்வி
தொடர்பான தோல்விக்கு, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிக்கும்
திறன்மிக்க ஆசிரியர்களின் போதாமை, செயலூக்கம் காணப்படாமை மற்றும்
மாணவர்களிடம் சரியான மனப்பான்மை காணப்படாமை ஆகிய காரணங்கள்
சுட்டிக்காட்டப்படுகின்றன.

இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்
Read More »

தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா?

உலகளாவிய அளவில் ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில்
அதிகரித்திருக்கின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒக்ஸ்பாம்
அறிக்கையொன்றில் (Inequality Inc. ஜனவரி 2024) உலகில் காணப்படும் 43%மான
சொத்துகள் 1%மான பணக்காரர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன;
பெருங்கொள்ளை நோய்க்காலத்தில் 5 மிகப்பெரும் பணக்காரர்கள் தமது
சொத்துகளை இரண்டு மடங்குகளாக பெருக்கிய அதேவேளையில் 5
பில்லியன் மக்கள் மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டார்கள்.
குறைந்துகொண்டே வருகின்ற கூலி (தொழிலாளர்களுக்கானது),
அதிகரித்துக்கொண்டே வருகின்ற வரிச்சலுகைகள் மற்றும் ஏய்ப்புகள்
(பெருநிறுவனங்களுக்கானது மற்றும் பெருநிறுவனங்களால்
மேற்கொள்ளப்படுவது), பொதுச்சேவைகள் தனியார்மயமாக்கப்படுதல் போன்ற
செயற்பாடுகளால் பெருநிறுவங்களில் குவியும் சொத்துகளாலும்
அதிகாரத்தினாலும் அவர்களின் செல்வாக்கு கொள்கைவகுப்புத் தளத்திலும்
அதிகரிப்பதாக ஒக்ஸ்பாம் கூறுகின்றது.

தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா? Read More »

கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!

கல்வி நெருக்கடியில் இருக்கின்றது. நிதிப்பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டுள்ள கல்வி போன்ற அமைப்புகளுக்கு பாரிய நிதிக்
கருவூலங்களும் தான தர்மம் வழங்குகின்ற நாட்டமும் அதிகமுள்ள தம்மிக
பெரேரா போன்றவர்கள் பெரும் ஆறுதலாக இருப்பார்கள். உண்மையில்
உலகளாவிய ரீதியில் 1970களில் இருந்தே நலன்புரி அமைப்புகளுக்கான
அரசாங்க நிதியொதுக்கீடுகள் பாரியளவில் குறைந்து வருவதோடு
இலங்கையில் 1950- 1960களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக
குறைந்திருந்த கல்விக்கான நிதியொதுக்கீடு 2022ஆம் ஆண்டு 1.2%மாக
ஆக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும்
நிகழ்ச்சிநிரல்களை நிறுத்திவிட்டு அந்த இடைவெளிகளில் மூலதன குவிப்பை
ஊக்குவிக்கும் நிகழ்ச்சிநிரல்களை முன்வைப்பதை நியாயப்படுத்தும் நிழல்
பொருளாதார உலகத்தில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருக்கும் மூலதனங்கள்
நிழல் பொருளாதாரம் மூலம் கசியவிடப்பட்டு சமூகத்தின் அடிமட்டத்தில்
இருக்கும் மக்களுக்கு வினைத்திறனான வகையில் செல்லும் வாய்ப்புகள்
இருப்பதாக முறைப்படுத்தும் விவாதங்களை முன்வைக்கின்றார்கள்.

கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!
Read More »