கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!
கல்வி நெருக்கடியில் இருக்கின்றது. நிதிப்பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டுள்ள கல்வி போன்ற அமைப்புகளுக்கு பாரிய நிதிக்
கருவூலங்களும் தான தர்மம் வழங்குகின்ற நாட்டமும் அதிகமுள்ள தம்மிக
பெரேரா போன்றவர்கள் பெரும் ஆறுதலாக இருப்பார்கள். உண்மையில்
உலகளாவிய ரீதியில் 1970களில் இருந்தே நலன்புரி அமைப்புகளுக்கான
அரசாங்க நிதியொதுக்கீடுகள் பாரியளவில் குறைந்து வருவதோடு
இலங்கையில் 1950- 1960களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக
குறைந்திருந்த கல்விக்கான நிதியொதுக்கீடு 2022ஆம் ஆண்டு 1.2%மாக
ஆக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும்
நிகழ்ச்சிநிரல்களை நிறுத்திவிட்டு அந்த இடைவெளிகளில் மூலதன குவிப்பை
ஊக்குவிக்கும் நிகழ்ச்சிநிரல்களை முன்வைப்பதை நியாயப்படுத்தும் நிழல்
பொருளாதார உலகத்தில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருக்கும் மூலதனங்கள்
நிழல் பொருளாதாரம் மூலம் கசியவிடப்பட்டு சமூகத்தின் அடிமட்டத்தில்
இருக்கும் மக்களுக்கு வினைத்திறனான வகையில் செல்லும் வாய்ப்புகள்
இருப்பதாக முறைப்படுத்தும் விவாதங்களை முன்வைக்கின்றார்கள்.









