கட்டுரை

இரு இலைகளும் அரும்பும்: கல்வியியலாக‌ மலையகத்தின் வரலாறு

நான் இங்கு ஒரு கவிஞரைப் பற்றி பேச விழைகின்றேன். குறிஞ்சித்
தென்னவன் ஒரு தானியங்கி ஆசான். அவர் எமது பாடசாலைகளிலோ
பல்கலைக்கழகங்களிலோ ஒரு எழுத்தாளராக ஆகுவதற்கு கற்கவில்லை.
அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும்
இலவசக்கல்விக்காக குரலெழுப்பினாலும் அந்த அமைப்பிலிருந்து விலத்தியே
வைக்கப்பட்டிருந்தனர். அவர் இலங்கை மண்ணில் அவரது வாழ்நாள்
காலத்தில் ஒரு கவிஞராக புகழப்படவில்லை, அவரை அறிந்திருந்தவர்களும்
தமிழ் இலக்கிய மற்றும் அரசியல் வட்டத்துள் இருந்த வெகுசிலரே.
இப்பத்தியை நிறைவு செய்கையில் அவரின் ஒரு கவிதையின் (ஆங்கில)
மொழிபெயர்ப்பு வடிவத்தை சமர்ப்பிக்கும் நான், எமது வரலாற்றின் வாசிப்பை
சமர்ப்பிப்பதோடு அதன் மூலமான சமூக மற்றும் அரசியல் விடுதலை
தொடர்பான கூட்டுப்பார்வையொன்றையும் உருவாக்குமென
எதிர்பார்க்கின்றேன்.

‘அனைவர்க்கும் ஆங்கிலம்’ எனும் வாக்குறுதி: நம்பிக்கையற்ற சூழல்சார்
குறிப்புகளும் கோரப்படாத ஆலோசனைகளும்

நான் அமரகீர்த்தி லியனகே எழுதிய ‘விஷ்வவித்யாலய யனு குமக்த?
[பல்கலைக்கழகம் என்பது யாது?] எனும் நூலை வாங்குவதற்காக‌ சரசவி
புத்தகசாலையின் ஒரு கிளைக்குள் பிரவேசிதபோது அங்கே ஆங்கிலத்தில்
வெளியாகிய நூல்கள் மட்டுமே விற்கப்படும் என அறிந்தேன். வெறுமனே
நிறுவனத்தின் பேசும் கிள்ளைகளாக காணப்படும் ஊழியர்களுக்கு ஏனென்ற
காரணம் தெரியவில்லை. ஒருவகையில் இதற்கான காரணம்
தேவையில்லை. இந்நிறுவனம், சுதந்திரம் தொட்டு இயற்றப்பட்டு வரும்
ஒழுங்கற்ற மொழிக்கொள்கைகள் மட்டும் காலனித்துவ உற்பத்தியான
ஆங்கிலத்தில் இருக்கும் எதற்கும் விருப்புத்தெரிவிக்கும் தேசிய
விருப்பத்திற்கும் ஏதுவாக தன்னை தகவமைத்திருக்கின்றது.

இலங்கை பல்கலைக்கழகங்களில் நரம்பியல்பன்முகத்தன்மை, உள்ளீர்க்கும் கல்வி மற்றும் தர உத்தரவாதம்

இந்த ஆக்கம் நரம்பியல்பன்முகத்தன்மை என்ற கருத்தாக்கத்தின் மூலம்
எமது கல்வியை மேலும் உள்ளீர்க்கும் வகையில் கற்பனை செய்வதை
நிகழ்த்துகின்றது. முதலில் நான் ஆட்டிசம்‍ மன இறுக்க நோயின்
நிறமாலையான நரம்பியல்பன்முகத்தன்மை நிலையை குறித்து பேசிவிட்டு
உள்ளீர்க்கும் கல்வி தொடர்பில் இலங்கையில் காணப்படும் சவால்களையும்
அவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை பல்கலைக்கழகங்களில்
காணப்படும் தற்போதைய தர உறுதிப்பாட்டு செயன்முறையில் இருக்கும்
கட்டுப்பாடுகளையும் ஆராய்கின்றேன்.

அரச பல்கலைக்கழகங்களை துண்டாடும் பாதீடு

1930க்குப் பின்னர் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பாரிய
பொருளாதார நெருக்கடியின் விளைவாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்
நிலைப்படுத்தற்கொள்கைகள் காரணமாக நாட்டின் அரசியல் பொருளாதார
நிலை வேகமாக மாறி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில்,
பொதுவாக கல்வித்துறையும் குறிப்பாக பல்கலைக்கழகங்களும் கடும்
சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

கவர்ச்சிகரமான உபாத்தியாயர், சில அவதானங்கள்

பியரி போர்தோ: கவர்ச்சி என்பது சமூகக் கோட்பாட்டாளரான பியரி
போர்தோவின் கருத்துப்படி ஒரு ‘இயல்புநிலையாகும்’‍- ஒருவர் உலகில்
தன்னை நிலைநிறுத்தும் பொருட்டு வெளிப்படுத்தும் சில பண்புக்கூறுகளாகும்.

நிதியீடு மற்றும் சமவாய்ப்புக்கான கொள்கை: உயர்கல்விக்கு கட்டணம்
மேற்கொள்ள வேண்டியோர் யார்?

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில், கல்வி தொடர்பான விவாதங்கள்,
அதிலும் குறிப்பாக அதிகரித்து வரும் உயர்கல்வி தொடர்பான விவாதங்கள்
குழப்பகரமாக இருக்கின்றன. ஒரு வகையில், அவ்விவாதங்கள்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களையும்
உள்ளீர்க்க முடியாத நிலையில் அரச பல்கலைக்கழகங்கள் காணப்படுவதை
சுட்டிக்காட்டுவதோடு இக்காரணத்தால் தனியார் பல்கலைக்கழகங்கள்
ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவையை சுட்டி நிற்கின்றன.

ஊனமுற்ற மாணவர்களா அல்லது ஊனமுற்ற பல்கலைக்கழகங்களா?

அதுவொரு தூர்த்துப் பெருக்கப்படாத காற்றோட்டமற்ற, மின்விசிறிகளோ
காற்றுப்பதனாக்கிகளோ அற்ற நடைகூடம், யாழ்ப்பாணத்தின் தாங்கொணா
வெயிலில் இன்னும் கொதித்துக்கொண்டிருந்த்தது. மாற்றுத்திரனாளிகளான
பல்கலைக்கழக மாணவர்கள் இதே சூழ்நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின்
கலைப்பீடத்தில் புதிய பரீட்சை மண்டப அறையின் நடைகூடத்தில் பரீட்சை
எழுதிக்கொண்டிருப்பதை பார்த்தேன். இந்த இடம் சார்பான பாகுபாட்டை நான்
நான்கு வருடங்களாக கண்டு வருகின்றேன்.

இலங்கையின் பல்மருத்துவக் கல்வியின் சவால்களை வழிசெலுத்துதல்

உயர்கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது இலவசக்கல்வியின்
பிரதான கொள்கைகளிலொன்றாகும். 2020ஆம் ஆண்டில், அப்போதைய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால், தேர்தல் விஞ்சாபனத்தின்
அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியை 12,000ஆல்
அதிகரிக்கும் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC)
வழிகாட்டல் வழங்கப்பட்டது. அதனையடுத்து, பல்கலைக்கழகங்களில்
மாணவர் அனுமதி அதிகரிக்கப்பட்டதாயினும் பல்கலைக்கழகங்களுக்காக
ஒதுக்கப்பட்ட வளாங்களின் போதாமை மாணவர்களின் திடீர் அதிகரிப்பை
முகாமை செய்யுமளவு காணப்படவில்லை.

உயர்கல்வி தனியார்மயமாக்கத்தினூடு பொறுப்பாண்மையை பின்பற்றுதல்

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்
உயர்கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நயோமி க்லெயினின் ‘பேரழிவு தரும் முதலாளித்துவம்’ ஆய்வுரையின் படி
நிச்சயமற்ற, ஆற்றொணா காலங்களில் ஏற்படுத்தப்படும் சீரிய மாற்றங்கள்
வஞ்சகமான நோக்கங்களை கொண்டிருக்கும். இக்காலங்கள்
முன்மொழியப்படும் மாற்றங்களின் உட்கிடைகளை கவனமாக ஆய்ந்து
பார்க்கும் அவகாசத்தையும் அளிப்பதற்கு வாய்ப்பளிப்பதில்லை. இந்நிலையின்
தீவிரத்தை உணர வேண்டிய நாங்கள் எமது இலவசக்கல்வியின் மீது மீட்க
முடியாத தீங்குகள் விளைவிக்கப்படும் முன்னர் ஒன்றிணைந்து செயற்பட
வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.

மானிட மற்றும் சமூக விஞ்ஞானங்களை பலிக்கடாவாக்குதல்: மூடி
மறைக்கும் செயற்பாடா?

பல சமூக ஊடகங்களில் தற்போது எடுத்துரைக்கப்படும் விடயம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தலைவர் பேரா. சம்பத்
அமரதுங்க அவர்களின் கருத்தாகும். அதாவது, 70 வீதமான
கலைப்பட்டதாரிகளுக்கு (மானிட மற்றும் சமூகவியல் துறைகளில்
பட்டம்பெற்று வெளியேறியோர்) நாட்டில் வேலைவாய்ப்பு காணப்படவில்லை
என்ற கருத்தை COPE (அரச தொழில்துறைகளின் செயற்குழு) அமர்வில் அவர்
மேற்கொண்டிருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கலைப்பட்டதாரிகளுக்கிடையில் நிலவும் வேலையில்லாப்பிரச்சினையே
நாட்டின் பல்கலைக்கழக அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனக்களுக்கு
காரணம் என்ற கருத்தையும் இவர் முன்வைத்திருக்கின்றார்.