மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு
நாம் இன்னொரு வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம்.
இவ்வருடம் எமக்காக பொதித்து வைத்திருப்பது என்னவாக இருக்கும்?
எமக்கான எதிர்பார்ப்பு எனும் ஒளியை புதிதாக ஏற்றிவைக்கும் எந்த
விடயத்தையும் நாம் தற்போது காண்பதற்கில்லை. நாம் வாழும் வரலாற்று
தருணங்களை அதிகரித்து வரும் பெறுமதி சேர் வரிகள், வடகிழக்கில் நிகழும்
நில அபகரிப்புகள், மென்மேலும் சிக்கலாகியுள்ள வாழ்க்கைத்தரத்துக்கு
மத்தியில் ஊசலாடும் மலையக மக்களின் அன்றாட நிலவுகை,
பல்கலைக்கழகங்களில் நாம் காணும் ஒடுக்குமுறை கலாசாரங்கள் மற்றும்
காஸாவில் தொடுக்கப்படும் தொடர்ச்சியான யுத்தம் போன்ற விடயங்களே
அடையாளாப்படுத்துகின்றன. எனது ஆக்கத்தை மனச்சோர்வுடன்
ஆரம்பிப்பதை விடுத்து வேறு மார்க்கமில்லை.