நெருக்கடி காலங்களில் பொதுமக்களை பொதுவிடயங்களில் ஈடுபடவைப்பது கல்வியியலாளார்களுக்கு தவிர்க்கமுடியாதது
இரு வாரங்களுக்கு முன்னர், ஐக்கிய ராச்சியத்திலுள்ள ஹல்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐ.நா பேண்தகு வளார்ச்சி இலக்குகள்
தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மாநாட்டின் தலைப்பு “பேண்தகு வளார்ச்சியின் சமநீதியான நிலைமாற்றம்”
என்பதாகும். புதுப்பிக்கத்தக்க சக்திக்கான புத்தாக்க தொழில்நிட்பம் பற்றி
இயற்கை விஞ்ஞானிகள் பலர் தனியார் நிறுவனக்களால் நிதியுதவி
அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை பெறுமையாக
அரங்கேறி பேசிக்கொண்டிருந்தார்கள்.