சிறப்புப் பகுதி

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

இருமநிலையை தகர்த்தல்: பல்கலைக்கழகங்களில் பால்மை பல்வகைமை
மற்றும் உள்ளீர்ப்பை ஏற்றுக்கொள்ளல்

அண்மையில் எனக்கு விஷ்னு வாசு அவர்கள் எழுதிய ‘சாரி எந்தபு பிரிமி’
(சாரி அணிந்த ஆண்கள்) நூலை வாசிக்கக் கிடைத்தது. இந்நூல்
இலங்கையில் வாழும் பால்புதுமையினர் குறித்த வாழ்வனுபவங்களின் மீது
வெளிச்சத்தை பாய்ச்சியது. எமது நாட்டில் வழக்கொழுங்காக காணப்படும்
ஈரின பாலியல்பு நடத்தைக்கு இயைபாக இராத காரணத்தாலேயே தத்தமது
குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டின் சட்ட வரைபு ஆகியவற்றால்
புறக்கணிக்கப்பட்டு அமைப்புரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும்
மக்களை குறித்த நெஞ்சை பிளிகின்ற பதிவே இந்நூலாகும்.

நிகழ்பாலுறவாளர்கள் கவனிக்கப்பட்ட வேண்டியவர்கள்:
பல்கலைக்கழகங்களில் நேர்மறையான தளங்களை உருவாக்குதல்

நான் கொழும்பு மருத்துவ பீடத்தால் வழங்கப்படும் பால்மை மற்றும்
சுகாதாரம் குறித்தான பட்டப்பின்கற்கை நிலையத்தில் கற்பிக்கின்றேன். நான்
ஒருங்கிணைந்து வழங்கும் பால்மை பதில்வினை சார் சுகாதார அமைப்பு
தொடர்பான மாதிரி அலகில் ஏனைய விடயங்கள் உட்பட
நிகழ்பாலுறவாளார்கள் சுகாதார அமைப்பில் முகங்கொடுக்கும் அனுபவங்கள்
குறித்தும் நாங்கள் கலந்துரையாடுவோம். இந்நிலை மிகவும் மந்தமானது.
இந்த மாதிரி அலகை கற்பிக்கும் பல செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி
மிகப்பெரும்பாலான சுகாதார ஊழியர்களுக்கு பால்/ பால்மை பதில்வினை
சார்ந்த ரீதியில் சேவைகளை வழங்குவது குறித்து எந்தவிட புலனுமில்லை.

பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்

பொதுப்பல்கலைக்கழகங்களை நாம் பொதுவாக அறிவு உற்பத்தி மற்றும்
அறிவுசார் விசாரணைக்குமான தளங்களாகவே காண்கின்றோம். எமது
அதிகமான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களின் கல்விசார்
பங்களிப்புகளை ஆய்வுசெய்வதிலும் அவை வழங்கும் கல்வியில் எவ்வாறு
மேம்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதிலுமே சுழன்றுகொண்டிருக்கும்
வேளையில், பல்கலைக்கழகங்கள் எனும் அமைப்பு மற்றும் அதன்
தொழிற்பாடு பலரின் முயற்சி மற்றும் உழைப்பால் உருவானது என்பதையும்
அத்தகையோரின் நலன்புரி மற்றும் நல்வாழ்வு தொடர்பில் போதிய அழுத்தம்
வழங்கப்படுவதில்லை என்பதுமே உண்மையாகும்.

அரச ஆனால் பொதுப் பல்கலைக்கழகங்கள் இல்லை, தனியார் ஆனால்
பல்கலைக்கழகங்கள் இல்லை: அவ்வாறாயின் இலங்கையில் காணப்படுபவை
என்ன?

கொழும்பு பல்கலைக்கழக ஆய்விதழில் (2021, தொகுதி 2 வெளியீடு 1)
வெளிவந்த பன்டுக்க கருணாநாயக்க எழுதிய “கல்வியின் மூன்று முக்கிய
பகுதிகளும் ‘மெக்பல்கலைக்கழகங்களும்: சில விளக்கவுரைகள்” என்ற
ஆக்கமானது மெக்பலகலைக்கழகங்களின் திடீர் வளர்ச்சி குறித்தும், வெபேரிய
அணுகுமுறையான கருவியியல் பகுத்தறிவுவாத அணுகுமுறையைக்
கொண்ட அவற்றின் இலக்கான ‘இயங்குதிறனை’ நோக்கிய செயற்பாடு
குறித்தும் அலசுகின்றார்.

ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல்

6 மாசி, 2024ல் விஷ்விகா அவர்களால் எழுதப்பட்ட குப்பி ஆக்கமான
‘இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு,’
இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்பவர் மீது திணிக்கப்படும்
தரவரையறைகளில் உள்ள பல்வேறான சிக்கல்கள் குறித்து அலசுகின்றது.
அவரின் அவதானங்களில் முக்கியமானது ஆங்கிலக் கல்வி பயிற்றுனர்கள்
(ELT) அனைவராலும் எதிர்கொள்ளப்படும் வருந்தத்தக்க யதார்த்தமான
‘தரவரையறைகளை’ பேணும் இறுக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்பவர்களின்
கருத்தாக்கங்களை பயிற்றுனர்கள் இருட்டடிக்கும் நிலை உருவாவதாகும்.
இந்த விவாதத்தை விரிவாக்கும் நோக்கில் மதுரங்க கலுகம்பிட்டிய
அவ்ர்களால் 2 சித்திரை, 2024ல் எழுதப்பட்ட ‘இலங்கையில் ஆங்கில மொழிக்
கற்பித்தல் புலத்தில் இலங்கை ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்’ என்ற
ஆக்கமானது யதார்த்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட
தரவரையறைகளானவை, அது சார்ந்த நிலப்பரப்பிற்கேற்ப தகவமைக்கப்பட்டு
அதன் மொழிப்பாவனையாளர்களை சந்தர்ப்பங்களுக்கேற்ப பொருத்தக்கூடிய
அமைப்பை உருவாக்குபவை ஆகும்.