சிறப்புப் பகுதி

பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்

பொதுப்பல்கலைக்கழகங்களை நாம் பொதுவாக அறிவு உற்பத்தி மற்றும்
அறிவுசார் விசாரணைக்குமான தளங்களாகவே காண்கின்றோம். எமது
அதிகமான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களின் கல்விசார்
பங்களிப்புகளை ஆய்வுசெய்வதிலும் அவை வழங்கும் கல்வியில் எவ்வாறு
மேம்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதிலுமே சுழன்றுகொண்டிருக்கும்
வேளையில், பல்கலைக்கழகங்கள் எனும் அமைப்பு மற்றும் அதன்
தொழிற்பாடு பலரின் முயற்சி மற்றும் உழைப்பால் உருவானது என்பதையும்
அத்தகையோரின் நலன்புரி மற்றும் நல்வாழ்வு தொடர்பில் போதிய அழுத்தம்
வழங்கப்படுவதில்லை என்பதுமே உண்மையாகும்.

அரச ஆனால் பொதுப் பல்கலைக்கழகங்கள் இல்லை, தனியார் ஆனால்
பல்கலைக்கழகங்கள் இல்லை: அவ்வாறாயின் இலங்கையில் காணப்படுபவை
என்ன?

கொழும்பு பல்கலைக்கழக ஆய்விதழில் (2021, தொகுதி 2 வெளியீடு 1)
வெளிவந்த பன்டுக்க கருணாநாயக்க எழுதிய “கல்வியின் மூன்று முக்கிய
பகுதிகளும் ‘மெக்பல்கலைக்கழகங்களும்: சில விளக்கவுரைகள்” என்ற
ஆக்கமானது மெக்பலகலைக்கழகங்களின் திடீர் வளர்ச்சி குறித்தும், வெபேரிய
அணுகுமுறையான கருவியியல் பகுத்தறிவுவாத அணுகுமுறையைக்
கொண்ட அவற்றின் இலக்கான ‘இயங்குதிறனை’ நோக்கிய செயற்பாடு
குறித்தும் அலசுகின்றார்.

ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல்

6 மாசி, 2024ல் விஷ்விகா அவர்களால் எழுதப்பட்ட குப்பி ஆக்கமான
‘இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு,’
இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்பவர் மீது திணிக்கப்படும்
தரவரையறைகளில் உள்ள பல்வேறான சிக்கல்கள் குறித்து அலசுகின்றது.
அவரின் அவதானங்களில் முக்கியமானது ஆங்கிலக் கல்வி பயிற்றுனர்கள்
(ELT) அனைவராலும் எதிர்கொள்ளப்படும் வருந்தத்தக்க யதார்த்தமான
‘தரவரையறைகளை’ பேணும் இறுக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்பவர்களின்
கருத்தாக்கங்களை பயிற்றுனர்கள் இருட்டடிக்கும் நிலை உருவாவதாகும்.
இந்த விவாதத்தை விரிவாக்கும் நோக்கில் மதுரங்க கலுகம்பிட்டிய
அவ்ர்களால் 2 சித்திரை, 2024ல் எழுதப்பட்ட ‘இலங்கையில் ஆங்கில மொழிக்
கற்பித்தல் புலத்தில் இலங்கை ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்’ என்ற
ஆக்கமானது யதார்த்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட
தரவரையறைகளானவை, அது சார்ந்த நிலப்பரப்பிற்கேற்ப தகவமைக்கப்பட்டு
அதன் மொழிப்பாவனையாளர்களை சந்தர்ப்பங்களுக்கேற்ப பொருத்தக்கூடிய
அமைப்பை உருவாக்குபவை ஆகும்.

கடன் மறுசீரமைப்பும் குருதி வழியும் கல்வித்துறையும்

இலவசக்கல்வி என்பது எமது சமூகத்தின் முக்கியமான தூண்களில்
ஒன்றாகும். இன்றைய பத்தியில் நான், இலங்கையில் அதன்
வெளிவாரிக்கடன்கள் மீதான‌ முதலாவது தாமதம் மற்றும் நாட்டின்
வெளிவாரிக்கடன் பற்றாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச
நாணய நிதியத்தின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து கல்வித்துறை
முகங்கொடுத்துள்ள சிக்கல்கள் பற்றி அலசப்போகின்றேன்.

எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்

‘எண்ணிம இடைவெளி’ மற்றும் செயற்கை நுண்ணறிவு

‘எண்ணிம இடைவெளி’ எனும் சொல்லாடல் 1990களில் அமெரிக்காவில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வளங்களை அணுகுவதில் காணப்படும்
பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை குறிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் அது உலகளாவிய அளவில்
பயன்படுத்தப்படும் சொல்லானது.

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?

புகைப்படம்: பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏனைய விடயங்கள் உட்பட
கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ ஒதுக்கக்கோரி
மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம்