இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்
பல தசாப்தங்களாக, குறிப்பாக திறந்த பொருளாதார முறைமை
அறிமுகப்படுத்தப்பட்ட 70’களுக்குப் பின்னரான காலத்தில் ஆங்கில மொழிக்
கற்பித்தலானது (ELT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக நாட்டில்
காணப்படுகின்றது. ஆங்கில மொழி கற்பித்தலானது உடனடி மற்றும்
காலத்துக்கு தேவையான தேவையாக பார்க்கபப்டுவதோடு பூகோளமயமாதல்
எனும் பரந்த கருத்தியலில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு
நேரடியாக இணைத்து பார்க்கப்படுகின்றது. இத்தலைப்புடன் கோர்க்கப்படும்
முக்கியத்தை விடுத்து நாட்டில் ஆங்கில மொழிக் கற்பித்தலானது பரவலாக
தோல்வியடைந்த விடயமாக கருதப்படுகின்றது. நாட்டில் ஆங்கிலக் கல்வி
தொடர்பான தோல்விக்கு, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிக்கும்
திறன்மிக்க ஆசிரியர்களின் போதாமை, செயலூக்கம் காணப்படாமை மற்றும்
மாணவர்களிடம் சரியான மனப்பான்மை காணப்படாமை ஆகிய காரணங்கள்
சுட்டிக்காட்டப்படுகின்றன.