சிறப்புப் பகுதி

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள்

உடாரி அபேயசிங்க பல்கலைக்கழகச் சூழல்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சக ஊழியர் உறவு முதல் நுட்பமான பகைமை வரையிலான பல்வேறுபட்ட அனுபவங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ​​உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் இளைய உறுப்பினர்களைக் கண்ணியத்துடன் பணியாற்ற உண்மையாகவே அனுமதிக்கின்றனவா என்று கேட்பது அவசியமாகிறது. நமது கல்விச் சூழல்கள், உண்மையிலேயே தகுதியான நியாயம், மரியாதை மற்றும் அங்கீகாரத்தை வளர்க்கின்றனவா, அல்லது இந்தக் கொள்கைகளையே தொடர்ந்து சிதைக்கின்றனவா? மாணவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக பகிடிவதை, பாலியல்-பாலின அடிப்படையிலான வன்முறை (SGBV) பற்றி நாம் அடிக்கடி […]

கண்ணியத்துடன் பணியாற்றுதல்: கல்வித்துறைக்குள் இருந்து வரும் சிந்தனைகள் Read More »

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்

ஹாசினி லேகம்வசம் என்னுடைய தற்போதைய கள ஆய்வுகள் இலங்கையில் விவசாயம் சார் அரசியல் பற்றியதாகும். விவசாயத்தில் என்ன நடக்கின்றது என்பதோடு நேரடியாக தொடர்புபடவிட்டாலும் அங்கே நடப்பவற்றை பாரியளவில் தீர்மானிக்கும் பல விடயங்களை நான் இதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளேன். தினசரி வீட்டு வாழ்க்கையின் இயங்கியல்கள் எவ்வாறு விவசாயம் சார் முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை நான் கற்ருக்குக்கொண்டுள்ளேன். விவசாயம் சார் தேவைகளுக்காக எடுக்கப்படும் கடன்கள் விவசாயத்தில்தான் செலவிடப்படுகின்றவா? நெருங்கிய உறவுகள் எவ்வாறு விவசாய நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்றன (உதாரணமாக யார்

தக்கன பிழைத்தலா? கல்விச் சீர்திருத்தத்திலே சூழலை கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் Read More »

தெரிந்த பேயே  சிறந்ததோ? கல்வியை அரசியல்மயமாக்குவது  தொடர்பான சில கருத்துக்கள்

கௌசல்யா பெரேரா 2024 பொதுத் தேர்தல்களில் பல கல்வியாளர்கள் தேர்தல் மேடைகளில் கலந்து கொண்டனர், மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாராளுமன்றத்தில் காணப்பட்டனர். அவர்களில் சிலர் இப்போது அமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். ஏனையவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வியாளர்களாகிய நாங்கள், பரிச்சயமான முகங்களை செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்த வித ஆச்சரியமுமில்லை. அரசியல்மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இது ஒரு புதிய திருப்பமா? 2012-2014 ஆம் ஆண்டில் எனது கலாநிதி பட்ட ஆராய்ச்சிக்காக கல்வியாளர்களை நேர்காணல் செய்தபோது, அவர்கள் நமது

தெரிந்த பேயே  சிறந்ததோ? கல்வியை அரசியல்மயமாக்குவது  தொடர்பான சில கருத்துக்கள் Read More »

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள்

அனுஷ்கா கஹண்டகமகே சமீபத்தில் வெளியிவந்த கல்வி சீர்திருத்தங்கள் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அனைவரும் பங்களிக்க முயல்கின்றனர், ஆனால் அரசாங்கம் ஒரு ஆலோசனை செயல்முறை அல்லது சரியான ஆவணம் இல்லாமல், வளர்ந்து வரும் பவர்பொயிண்ட் நிகழ்த்துக் காட்சியை (PowerPoint Presentation) மட்டுமே நம்பி செயல்படுகிறது. சீர்திருத்தங்கள் தெளிவற்றதாக இருந்தாலும், சமூக ஊடக வலைத்தளங்களில் பரப்பப்படும் சீர்திருத்தங்கள் தொடர்பான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்பது குறித்து கல்வி அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டு

தகுதிவழிக் கல்விக் கொள்கை: விரிந்துவரும் ஏற்றதாழ்வுகள் Read More »

எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும்

ஃபர்சானா ஹனிஃபா அன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில், கல்வி ஊழியர்களுக்கான நெறிமுறைகளும் கல்வி பொறுப்புக்கூறலும் என்ற தலைப்பில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)வின் தர உறுதி மன்றத்தினால்  தயார்படுத்தப்பட்டது. மேலும் பணிச்சுமை, பணி விதிமுறைகளை வரைபடமாக்குவதற்கான கல்வி சுதந்திரமும் பொறுப்புக்கூறலும்  என்ற பகுதியையும்  உள்ளடக்கியுள்ளது. தர உத்தரவாதத்தின் ஒரு மூலக்கூறாக பொறுப்புக்கூறல் இருந்து வருகிறது, இது ஒரு இணக்க செயல்முறையாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளதுடன் இது முக்கியமாக, பல்கலைக்கழகங்களின் 

எவ்வளவு வேலை – அதிகளவிலான வேலை? கல்விப் பணிச்சுமையும் பொறுப்புணர்வு கலாசாரமும் Read More »

கற்பித்தல், கற்றல் வரலாறு முக்கியமானதா?

அருணி சமரக்கோன் … நான் இஸ்ரேல்லையும் பலஸ்தீனத்தையும் பற்றி பாடுகிறேன்: இந்த உலகம் உன்னுடையதும் அல்ல, என்னுடையதும் அல்ல: எத்தனை பலவிதமான ஆண்கள் (இங்கு) பொருந்துவார்கள்? அவர்கள் எவ்வளவு வேகமாக அவ்விடத்துக்கு செல்வார்கள்? ஒரு பெண்ணின் உடல் ஓர் பிரபஞ்ச தங்குமிடம் போன்றது பேய்களுக்கு அல்லது மாதிரி(கள்) போன்ற இனிப்புசுவைக்கு, வீட்டில் முகத்துகு முகம் தொடங்கும், முடியும் தேவைக்கு அடிபணிந்து நாங்கள் ஒவ்வொருவரும் உண்ணலாம் அல்லது விட்டு வெளியேறலாம் எங்களுடைய காலத்தில் வாழ்ந்த தாய்மார்களின் உருவாக்கப்பட்ட இடத்தை

கற்பித்தல், கற்றல் வரலாறு முக்கியமானதா? Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »