சிறப்புப் பகுதி

எண்ணிம இடைவெளி: செயற்கை நுண்ணறிவும் (AI) இலங்கையின்
உயர்கல்வி மீதான‌ அதன் விளைவுகளும்

‘எண்ணிம இடைவெளி’ மற்றும் செயற்கை நுண்ணறிவு

‘எண்ணிம இடைவெளி’ எனும் சொல்லாடல் 1990களில் அமெரிக்காவில்
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப வளங்களை அணுகுவதில் காணப்படும்
பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை குறிப்பதற்காக
பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் அது உலகளாவிய அளவில்
பயன்படுத்தப்படும் சொல்லானது.

மூன்றாம்நிலைக் கல்விக்கான நிதியீட்டத்தை குறைப்பது தற்போதைய
நிலையில் கட்டாயத்தேவையா?

புகைப்படம்: பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏனைய விடயங்கள் உட்பட
கல்வித்துறைக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%ஐ ஒதுக்கக்கோரி
மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம்

சீர்திருத்த கற்பித்தல் கலையிலிருந்து புரட்சிகர கற்பித்தல் கலையை நோக்கி

கண்டி நகரத்தில் பிறந்து பாடசாலைக்கு சென்றவள் என்ற வகையில் நான்
குறைந்தது பத்து தடவைகளாவது எசல பெரஹெரவை பார்த்திருப்பதோடு
பாடசாலை நாட்களில் குறைந்தது ஐந்து தடவைகளாவது அதனை
வரைந்திருப்பேன். கண்டி வாவியை சூழ இருக்கும் பாடசாலைகளுக்கு
ஆகஸ்ட் மாதமே சிறந்ததாகும். எசல பெரஹெரவுக்கு பாதுகாப்பு வழங்கும்
படைகளுக்கான தங்குமிட வசதிகளை மேற்கொள்ள வேண்டி பாடசாலைகள்
அதிக நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும். ஐஸ்கிரீம் வண்டிகள், தும்புமிட்டாய்
வியாபாரிகள், சோளகப்பொரி, இறால்வடை, மிருக உருவ பலூன்கள்,
ஊதிகள், பளபளக்கும் குச்சிகள் என எனது சிறுபராயம் மிக
கொண்டாட்டமானதாக இருந்தது. சிறுவயதில் அதனை நான் ஒரு சர்க்கஸ்
கூடமாகவே ரசித்தேன். ஏன் மக்கள் “சாது சாது” என கைகளை
உயர்த்துகிறார்கள்? ஏன் யானைகள் ஊர்வலம் வருகின்றன?

MBBSக்கான விண்ணப்பங்களைக் கோருதல்!
இராணுவ பாதுகாப்பின் கீழ் மருத்துவ கல்விக்கான கட்டணங்களை
அறிமுகப்படுத்தல்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதியால் (பாதுகாப்பு அமைச்சராக)
அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவான கொத்தலாவல
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) கட்டணம் செலுத்தும் உள்நாட்டு
மாணவர்களை மருத்துவ கற்கைகளுக்கு அனுமதிப்பதற்கான
முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, KDU
இணையதளத்தின் மூலம் உள்நாட்டு மாணவர்களிடம் (விடுதியில் தங்காது
பயிலும் மாணவர்) MBBS கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டு வெறுமனே 2 வாரங்களே வழங்கப்பட்ட
நிலையில் மே 5ஆம் திகதி முடிவுத்தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

‘பல்கலைக்கழகம்’ தொடர்பான விடயம்

கல்வியென்பது வெறுமனே சில தகுதிகளையும் திறன்களையும்
பெறுவதற்கான செயன்முறையாக்கப்பட்டு ‘மட்டப்படுத்தும்’ நிலைக்கு வரும்
போது ஆதாரபூர்வமாக அச்செயற்பாடு அரச பல்கலைக்கழக அமைப்பை
தகர்க்கும் செயலாக உருவெடுக்கின்றது: “நீங்கள் செய்யும் காரியங்கள்
குறைந்தளவான நேரத்திலும், குறைந்தளவான இடத்திலும், குறைந்தளவான
பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களாலும், நிகழ்நிலையிலும் கூட வழங்கப்பட
முடியுமாயின் இவற்றை பேணுவதற்காக ஒதுக்கப்படும் நிதி மற்றும் பௌதீக
வளங்களுக்கான நியாயப்பாடுதான் என்ன?”

இலங்கையில் ஆங்கில மொழிக் கற்பித்தல் புலத்தில் இலங்கை
ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்

பல தசாப்தங்களாக, குறிப்பாக திறந்த பொருளாதார முறைமை
அறிமுகப்படுத்தப்பட்ட 70’களுக்குப் பின்னரான காலத்தில் ஆங்கில மொழிக்
கற்பித்தலானது (ELT) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக நாட்டில்
காணப்படுகின்றது. ஆங்கில மொழி கற்பித்தலானது உடனடி மற்றும்
காலத்துக்கு தேவையான தேவையாக பார்க்கபப்டுவதோடு பூகோளமயமாதல்
எனும் பரந்த கருத்தியலில் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியோடு
நேரடியாக இணைத்து பார்க்கப்படுகின்றது. இத்தலைப்புடன் கோர்க்கப்படும்
முக்கியத்தை விடுத்து நாட்டில் ஆங்கில மொழிக் கற்பித்தலானது பரவலாக
தோல்வியடைந்த விடயமாக கருதப்படுகின்றது. நாட்டில் ஆங்கிலக் கல்வி
தொடர்பான தோல்விக்கு, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிக்கும்
திறன்மிக்க ஆசிரியர்களின் போதாமை, செயலூக்கம் காணப்படாமை மற்றும்
மாணவர்களிடம் சரியான மனப்பான்மை காணப்படாமை ஆகிய காரணங்கள்
சுட்டிக்காட்டப்படுகின்றன.