சிறப்புப் பகுதி

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல 

கௌசல்யா பெரேரா 2000 களின் முற்பகுதியில், ஆராய்ச்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்ற, முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய சக ஊழியர் ஒருவர், “இலங்கையில் ஆராய்ச்சி கலாசாரம் இல்லை” என்று என்னிடம் முறைப்பாடு செய்தார். ஆனால், ஆராய்ச்சி கலாசாரம் இருப்பதன் அர்த்தம் என்ன? அதிகளவு நிதி போதுமானதா? ஆக்கத்திறன்மிக்க மற்றும் அர்த்தமுள்ள ஆராய்ச்சி கலாசாரத்தை நோக்கிச் செயற்படுவதிலிருந்து வேறு என்ன விடயங்கள் நம்மைத் தடுத்தது? அரசு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி கலாசாரத்தை […]

இலங்கையில் ஆராய்ச்சியை வணிகமயமாக்குதல் – ஆராய்ச்சிக்கு உண்மையில் ஆரோக்கியமான விடயம் அல்ல  Read More »

கல்வியில் காலனித்துவ நீக்கம்

ஹர்ஷன ரம்புக்வெல்ல எமது நண்பரும் சக பணியாளருமான ஹர்ஷண ரம்புக்வெல்ல 2025 சித்திரை 21ம் திகதி அபுதாபியில் காலம்சென்றதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம். அனைத்துமே நம்பிக்கையற்று காணப்படட ஒரு நேரத்தில், வினாவலுக்கும் எதிர்ப்புக்குமான ஒரு குரலை கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தும் மற்றும் அதன் ஆதரவாளர்களிலிருந்தும் சிலர்  ஒருமித்த அந்த வேளையிலே, ஹர்ஷண குப்பி குழுவினை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராவார். ஆர்வமும் அர்ப்பணிப்புமுள்ள நடிகராகவும் சிந்திக்கும் கல்வியாளருமாக இருந்த  அவர் குப்பிக்கும் கல்வியல் செயற்பாட்டு சமூகத்துக்கும் செய்த

கல்வியில் காலனித்துவ நீக்கம் Read More »

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல்

செல்வராஜா விஷ்விகா “உள்ளூர் மக்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே இங்கு வேலை செய்ய இந்தியாவிலிருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர்” பதினாறு வயதுடையவராக க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதுகின்ற போது இந்த வார்த்தைகளின் தீவிரத்தை நான் ஒருபோதும் உணரவில்லை. நமது நாட்டின் வரலாற்றைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு சிந்தனையாக முன்வைக்கப்பட்ட போது, ஒரு முழு சமூகமும் அவர்களின் போராட்டக் கதையும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை என்னால் உணர முடியவில்லை. அத்துடன், முடிவற்ற

இரண்டு இலைகளையும் மொட்டையும் கிள்ளுதல் Read More »

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு

அனுஷ்க கஹந்தகமே “தனியார் படிப்பகங்கள், தனியார் பாடசாலைகள், கட்டணத்துக்கு பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவங்கள் என அனைத்துமே சமூக வர்க்கங்களிடையே பெரிதாகும் ஏற்றத்தாழ்வுகளில் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன.” மெய்யாகவே கல்வி இலவசமாக/ சுதந்திரமாக இருக்கவேண்டும். தனியார்மயப்படுத்தலில் இருந்து சுதந்திரமாக இருப்பது மட்டுமன்றி ஒடுக்குமுறை கட்டமைப்புக்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை வலுவாக்குவதாக இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை செய்ய, நடப்புநிலையை சாவால்ப்படுத்த, முக்கியமாக தம்மை ஒடுக்குமுறை செய்யும் கடடமைப்புக்களில் இருந்து விடுவிக்க தேவையான அறிவையும் உபகாரங்களையும் கல்வி வழங்க வேண்டும்.

மனங்களை விடுவித்தல்: ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு Read More »

அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை

ரம்யா குமார் எமது பல்கலைக்கழகங்கள் அதிகாரப்  படிநிலைகளை கொண்டவையாகக்  காணப்படுகின்றன. ஏற்கனவே வர்க்க, இன, பால்நிலை ரீதியாக காணப்படும் அதிகார சமச்சீரின்மையை மீள்வலுவூட்டுவதோடு, உயர் நிலையில் இருப்பவருக்கு மிகுதியான அதிகாரத்தை வழங்குமிவை உத்தியோகபூர்வ உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வெளிப்படுகின்றன. மருத்துவ துறையில், பேராசிரியர்களை விரிவுரையாளர்களுக்கு மேலாகவும், மருத்துவமனை சார்ந்தோரை மருத்துவமனை சாராதோருக்கு மேலாகவும், விசேட மருத்துவர்களை பொது வைத்தியர்களுக்கு மேலாகவும், இப்படி பல வகைகளில் ஒருவருக்கு மேல் இன்னொருவரை வைத்து செயல்படும் ஒரு “மறை திட்டம்” இளநிலை மாணவர்களை

அதிகார படிநிலைக்கு சவால் விடுதல்? அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் முறையீட்டுப்  பொறிமுறை Read More »

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி

அருணி சமரக்கோன் “வுல்ஸ்டன்கிராப்டின் A Vindication of the Rights of Woman (1972) ஆனது, கல்வியின் மூலம் பெண்களின் அதிகாரமூட்டலை ஆதரிக்கின்றது. இது பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பாங்கான பிம்பங்களுக்கு எதிரான அவரது போராட்டத்தை பிரதிபலிக்கின்றது” நிக்கோலா பெரேராவின் “பல்கலைக்கழகங்களில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் (SGBV) கையாள்தல்” (18/02/2025) என்ற அண்மைய குப்பி கட்டுரையில், இலங்கையின் உயர்கல்வித்துறையில் பெண்கள் மற்றும் LGBTQ+ சமூகம் உட்பட ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நிறுவனக்

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்கும் ஒரு நடைமுறையாகக் கல்வி Read More »

எதிர்காலம் பெண்பாலுக்குரியது

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், “எதிர்காலம் பெண் பாலுக்குரியதா?” எனும் தலைப்பில்
ஒரு கட்டுரையை குப்பி தளத்தில் வெளியிடுவதற்காக எழுதினேன். எமது இளநிலை
மாணவர்களில் அநேகமானோர் பெண் பாலினத்தவராக இருந்தாலும், சமூகத்தில் உள்ள
வன்முறைகளையும் பெண் வெறுப்பையும் தீர்ப்பதற்கு பல்கலைக்கழக முறைமை அவர்களை
போதுமான அளவு தயார்படுத்துவதற்கு எவ்வாறு தவறுகிறது என்பதை அதில் கதைத்தேன்.

எதிர்காலம் பெண்பாலுக்குரியது Read More »

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள்

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது சில
வருடங்களாகவே கல்விப்புலத்தில் பேசப்பட்டு வரும் விடயமாக
இருப்பதோடு முக்கியமாக அது சலனங்களை நிகழ்த்தும் துறையாக ஆங்கில
மொழிக் கற்பித்தலை குறிப்பிடலாம். ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில்
உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்
பங்களிப்பை பலர் நேர்மறையான விடயமாகக் கண்டாலும் கூட சிலர் அதன்
எதிர்மறையான தாக்கங்களையும் குறித்து அக்கறைப்படுகின்றனர். இதனை
பல கோணங்களில் அணுகும் நோக்குடன் ஆய்வு மாநாடுகளும்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த துறையில் வெளியிடப்படும்
ஆய்வுக்கட்டுரைகள் ஊடாக இத்துறையானது கல்விப்புலத்தில் அதிகளவு
ஆய்வு மேற்கொள்ளப்படும் துறையாக மாறி வருகின்றது.

உருவாக்கும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்த சில சிந்தனைகள் Read More »

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல்

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையின் படி ஒரு புதிய அரசாங்கம்
உருவாகியிருப்பதோடு அது, நாட்டுக்கான வித்தியாசமான சமூக மற்றும்
பொருளாதார பாதைகளை தேட வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதே
வேளையில், அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருப்பதோடு
அது உலகை மாற்றும் நிகழ்வாக கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. இந்த
நிலையில், இலங்கையில் இலவசக்கல்வியின் நீண்ட பாதை எதை நோக்கி
பயணிக்கப்போகின்றது?

கல்வி, ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஒழுங்கை வகையறுத்தல் Read More »

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை
பார்க்கும் போது அவர்களின் எதிர்காலம் மீதான நம்பிக்கை
வெளிப்படுகின்றது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கும்
போது, நான் நாள்தோரும் சிந்தனை வயப்படும் பல அன்றாட சமூக
சிக்கல்களை அவை பிரதிபலிக்காமை வெளிப்படும், உதாரணமாக,
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களின்
அன்றாட சவால்களை இவ்விஞ்ஞாபனங்கள் பிரதிபலிப்பதாயில்லை.

உயர்கல்வியில் அனுபவ அடிப்படையிலான கற்றல் Read More »