சிறப்புப் பகுதி

இருமநிலையை தகர்த்தல்: பல்கலைக்கழகங்களில் பால்மை பல்வகைமை
மற்றும் உள்ளீர்ப்பை ஏற்றுக்கொள்ளல்

அண்மையில் எனக்கு விஷ்னு வாசு அவர்கள் எழுதிய ‘சாரி எந்தபு பிரிமி’
(சாரி அணிந்த ஆண்கள்) நூலை வாசிக்கக் கிடைத்தது. இந்நூல்
இலங்கையில் வாழும் பால்புதுமையினர் குறித்த வாழ்வனுபவங்களின் மீது
வெளிச்சத்தை பாய்ச்சியது. எமது நாட்டில் வழக்கொழுங்காக காணப்படும்
ஈரின பாலியல்பு நடத்தைக்கு இயைபாக இராத காரணத்தாலேயே தத்தமது
குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டின் சட்ட வரைபு ஆகியவற்றால்
புறக்கணிக்கப்பட்டு அமைப்புரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும்
மக்களை குறித்த நெஞ்சை பிளிகின்ற பதிவே இந்நூலாகும்.

இருமநிலையை தகர்த்தல்: பல்கலைக்கழகங்களில் பால்மை பல்வகைமை
மற்றும் உள்ளீர்ப்பை ஏற்றுக்கொள்ளல்
Read More »

பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்

பொதுப்பல்கலைக்கழகங்களை நாம் பொதுவாக அறிவு உற்பத்தி மற்றும்
அறிவுசார் விசாரணைக்குமான தளங்களாகவே காண்கின்றோம். எமது
அதிகமான கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்களின் கல்விசார்
பங்களிப்புகளை ஆய்வுசெய்வதிலும் அவை வழங்கும் கல்வியில் எவ்வாறு
மேம்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதிலுமே சுழன்றுகொண்டிருக்கும்
வேளையில், பல்கலைக்கழகங்கள் எனும் அமைப்பு மற்றும் அதன்
தொழிற்பாடு பலரின் முயற்சி மற்றும் உழைப்பால் உருவானது என்பதையும்
அத்தகையோரின் நலன்புரி மற்றும் நல்வாழ்வு தொடர்பில் போதிய அழுத்தம்
வழங்கப்படுவதில்லை என்பதுமே உண்மையாகும்.

பாகுபாடுகளை வெல்லுதல்: பொதுப்பல்கலைக்கழத்தை
கூட்டுறவுத்தளங்களாக கட்டமைத்தல்
Read More »

ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல்

6 மாசி, 2024ல் விஷ்விகா அவர்களால் எழுதப்பட்ட குப்பி ஆக்கமான
‘இலங்கையில் ஆங்கிலத்தின் பேரில் நடைபெறும் குரல் பறிப்பு,’
இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்பவர் மீது திணிக்கப்படும்
தரவரையறைகளில் உள்ள பல்வேறான சிக்கல்கள் குறித்து அலசுகின்றது.
அவரின் அவதானங்களில் முக்கியமானது ஆங்கிலக் கல்வி பயிற்றுனர்கள்
(ELT) அனைவராலும் எதிர்கொள்ளப்படும் வருந்தத்தக்க யதார்த்தமான
‘தரவரையறைகளை’ பேணும் இறுக்கத்தில் ஆங்கிலக் கல்வி கற்பவர்களின்
கருத்தாக்கங்களை பயிற்றுனர்கள் இருட்டடிக்கும் நிலை உருவாவதாகும்.
இந்த விவாதத்தை விரிவாக்கும் நோக்கில் மதுரங்க கலுகம்பிட்டிய
அவ்ர்களால் 2 சித்திரை, 2024ல் எழுதப்பட்ட ‘இலங்கையில் ஆங்கில மொழிக்
கற்பித்தல் புலத்தில் இலங்கை ஆங்கிலத்தை நிலைப்படுத்தல்’ என்ற
ஆக்கமானது யதார்த்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட
தரவரையறைகளானவை, அது சார்ந்த நிலப்பரப்பிற்கேற்ப தகவமைக்கப்பட்டு
அதன் மொழிப்பாவனையாளர்களை சந்தர்ப்பங்களுக்கேற்ப பொருத்தக்கூடிய
அமைப்பை உருவாக்குபவை ஆகும்.

ஆங்கில மொழி சார்ந்த வகுப்பறைகளில் தரவரையறைகளை கட்டுடைத்தல் Read More »